Skip to main content

தீர்ப்பு வந்தபிறகே..! ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பம் சபதம்!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

jayaraj bennix case issue - Sathankulam custodial death -

 

"வாய்மையே வெல்லும்' என்ற பொருளில்தான் அசோகச் சக்கரச் சின்னத்துக்குக் கீழ் "சத்தியமேவ ஜயதே' என்ற வாசகம் பொறிக் கப்பட்டுள்ளது.

 

ஆனால் சாத்தான்குள போலீசார் "லத்தியமேவ ஜயதே' என ஆடிய ஆட்டம் சர்வதேசிய அளவில் பேசுபொருளானது. கண்ணீர் நின்றாலும் காயம் ஆறாத அந்தக் குடும்பத்தினர் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்.

 

கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு பொதுவாக அவர்களை அடக்கம் செய்து கல்லறை கட்டி வழிபடுவது சமூக வழக்கம். வருகின்ற நவம்பர் 2-ஆம் தேதி கல்லறைத் திருநாள் கொண்டாடப்படவுள்ள வேளையில், "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் விரைவாக விசாரிக்கப் பட்டு தீர்ப்பு வந்த பிறகே கல்லறையை எழுப்பு வோம்' என குரல் எழுப்பி யுள்ளனர் அவரது குடும்பத்தார்கள்.

 

jayaraj bennix case issue - Sathankulam custodial death -
                                                             பெர்ஸி

 

""வெள்ளிக்கிழமை மத்தியானம் வீட்டில் சாப்பிட்டுப் போன பென்னிக்ஸை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. அன்னைக்கு நைட் 7 மணிக்கு வந்து வீட்டிற்கு தேவையானதையெல்லாம் வாங்கி வைத்து விட்டுப் போன பென்னிக்ஸ், அப்பா நேரமாகியும் வீடு திரும்பாததால்... "என்ன ஆச்சு..? ஏன் வரலை'ன்னு விசாரிக்கையில்தான் அவரை போலீஸ் புடிச்சிட்டுப் போனதாக தகவல் வந்தது. என் கொழுந்தனும், சம்பந்தியும் "வந்துடுவாங்க... பதட்டப்படாதீங்க...'ன்னு சொன்னாலும் மனசு கேட்கலை. கொஞ்ச நேரம் கழித்து என் அண்ணன், தம்பி என்கிட்ட வந்து, "இப்ப வரைக்கும் விட மாட்டேனுங்கிறாங்க. நீ வந்து, விட்டுடுங்கன்னு போலீஸ் ஸ்டேஷனில் கேட்டால் விட்டுடு வாங்க'ன்னு சொல்ல, நானும் அங்க போனேன். பாவிக... விடலை. இருந்தாலும் நமக்குத் தெரிஞ்ச அங்க வேலைபார்த்த மெய்ஞ்ஞானபுரம் பையனைக் (காவலர் தாமஸ் பிரான்சிஸ்) கூப்பிட்டுக் கேட்கையில், "சாப்பாடு சாப்பிட்டுட்டு மாத்திரையைப் போட்டுட்டுப் படுத்துட்டாங்க. காலையில் விட்டுடுவாங்க'ன்னு சொல்ல... அங்க இருக்கவேண்டாம்னு வீட்டுக்கு வந்துட்டேன். பின்னாடி கேட்கையில்தான் மெய்ஞ்ஞானபுரம் பையனும் சேர்ந்து இவுக இரண்டு பேரையும் அடிச்சிருக்கானுக. போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போன அன்னைக்கு மட்டும் என்ன எதுவெனக் கேட்காமலேயே இரண்டு போர்வையும், 2 கலர் சாரமும், 2 வெள்ளைச்சாரமும் கொடுத்து விட்டிருந்தேன். அத்தனையிலும் ரத்தம்... அப்படி கொடூரமாக அடிச்சிருக்கானுக.

 

ஜெயிலுக்கு இரண்டுபேரையும் கொண்டு போகையில் அங்கே யாரிடமிருந்தோ போனை வாங்கி, ‘"இப்போதைக்கு எதுவும் செய்யவேண் டாம். உடனே ஜாமீனில் எடுக்கின்ற வேலையைப் பாருங்க. இல்லைன்னா இன்னும் கேசைப் போட்டுடுவானுக' என எனக்கும், என்னுடைய அண்ணனுக்கும் அவர் கூறியதுதான் கடைசி வார்த்தை. வெள்ளிக்கிழமை சாப்பிட்டுவிட்டுப் போன மகனை ஜெயிலிலாவது பார்த்துடலாமென கோவில்பட்டி கிளைச்சிறை வாசலிலேயே உட் கார்ந்து பார்த்தேன். கடைசி வரைக்கும் அவனைப் பார்க்க முடியலை! திங்கட்கிழமை இரவில், "உங்க பையனுக்கு பிரஷர் இருக்கிறதா?'’எனக் கேட்டு ஜெயிலிருந்து போன் அடிச்சாங்க. ‘"இல்லையே' என்றதற்கு, ‘"இல்லம்மா... பிரஷர் அதிகமாயிட்ட தாலே அவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறோம்'’ என்றாங்க!

 

jayaraj bennix case issue - Sathankulam custodial death -
                                                                  செல்வராணி

 

நாங்களும் அவசர அவசரமாக அந்த நேரத்திலேயும் வண்டியை எடுத்துட்டுப் புறப்பட்டோம். இடையில் அந்த எண்ணிற்கு போன் போட்டுப் பார்த்தோம். பதிலில்லை. அதற்கப்புறம் தான் தெரிஞ்சது பென் னிக்ஸ் இறந்துட்டான்னு. இது எப்படியும் அவருக்குத் தெரியக்கூடாது. மனதளவில் காயப்படுவாரென அழுது புலம்புகையில் தான் உறவுக்காரப் பெண் வந்து, "அண்ணனும் இறந்துட்டாராம்...'’என சொன்னாங்க. மொத்தமும் போச்சு..!. என்ன தப்பு செய்தார்கள்? ஏன் அவர்களை அடித்தார்கள்..? ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களையும் இழந்த என் நிலைமையை இப்போதாவது போலீசார் உணர்ந்திருப்பார்களா..? இதைத்தான் நீதிபதி பாரதிதாசன் ஐயாவிடம் கேட்டேன்'' என்கிறார் செல்வராணி.

 

மேலச்சாத்தான்குளம் கிறிஸ்துவின் ஆலய திருச்சபைக்குச் சொந்தமான கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கும் இருவருக்கும், கிளைச் சிறையிலிருந்த போது கைலிகள் உடுத்தாமல் பருத்தியிலான துண்டுகளையே கட்டி வந்துள்ளனர். இவர்களுக்காக முதல்நாள் நான்கு துண்டுகளும், மறுநாள் நான்கு துண்டுகளும் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் குறிப்பெழுதியாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

jayaraj bennix case issue - Sathankulam custodial death -

 

மூத்த மகள் பெர்சியோ, ""வழக்கில் விரைவாக தீர்ப்பு வந்தபிறகுதான் கல்லறை கட்டப்பட வேண்டுமென்பது குடும்பத்தார்களின் ஒருமித்த கருத்து. அதுதான் உண்மையும்கூட. பிரேதப் பரிசோதனையின்போது எங்களிடம் பேசிய நீதிபதி பாரதிதாசன் உங்களுடைய உணர்வுகளை மதிக்கிறேன். பிரேதப் பரிசோதனைக்கு சம்மதியுங்கள். நீங்கள் கொடுக்கின்ற அத்தனை சாட்சிகளையும் நான் விசாரிக்கிறேன் என்று கூற, சம்பவம் நடந்த சூழலிருந்த உறவினர்கள், தம்பியின் நண்பர்கள் உள்ளிட்டோர்களை விசாரிக்க ஆரம்பித்து நம்பிக்கையளித்தார். நீதித்துறை மேல் அபரிமிதமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இருப்பினும் இவ்வழக்கினை தாமதப் படுத்தாமல் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே நாங்கள் நிம்மதியடை வோம்'' என்கிறார் அவர்.
 

 

 

படங்கள்: விவேக்

 

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.