Skip to main content

அந்த சீட்ல உட்கார்ந்திருந்தா நீங்க ஜெயலலிதாவா? தப்புக் கணக்கு போடாதீங்க... ஈ.பி.எஸ்.ஸை எச்சரித்த டெல்லி

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்தார்.


அப்போது அவர், வேலூர் தேர்தலில் அதிமுக வாக்கு வங்கி எங்கே போனது. உங்கள் விருப்பப்படியே பாஜகவினர் இங்கு வேலை செய்யவில்லை. ஒட்டுமொத்த அமைச்சர்கள் வேலை செய்தும் அதிமுக வாக்கு எங்கே போனது?. கடந்த 2014 தேர்தலில் 3,20,000 வாக்குகள் வாங்கிய ஏ.சி.சண்முகத்தை, செல்வாக்கு உள்ள மனிதரை உங்களிடம் ஒப்படைத்தோம். ஏன் வெற்றிபெற வைக்கவில்லை?. 8141 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏன் தோற்றார்? என்று புள்ளிவிவரத்தோடு கேள்வி எழுப்பியுள்ளார். 
 

ops-eps


 

உங்களுக்கு தேவையானவற்றையெல்லாம் செய்து கொடுத்தும் ஏன் தோல்வி?. உங்களால் பழியைத்தான் பாஜக சுமந்துகொண்டிருக்கிறது. நீங்கள் செய்யும் ஊழல்கள், நீங்கள் அடிக்கும் கமிஷன்கள் உள்ளிட்ட எல்லா விவரங்களும் எங்களுக்கு நொடிக்கு நொடி தகவல் வருகிறது. நாங்கள் நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். இந்த மாதிரி வாக்கு வங்கி வைச்சிருந்தீங்கன்னா, சட்டமன்ற பொதுத்தேர்தலை எப்படி சந்திப்பது?


 

 

 

முதல் அமைச்சர் சீட்டில் நீங்கள் உட்கார்ந்திருப்பதால் நீங்கள் ஜெயலலிதா கிடையாது. ஜெயலலிதா மாதிரி நினைக்காதீங்க. தப்புக் கணக்கு போடாதீங்க. இப்போது உள்ள உங்களது அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வியை சந்திப்பார்கள். எட்டு ஆண்டுகளாக நீங்கள் செய்யும் பணிகள் அந்த மாதிரி இருக்கிறது. உளவுத்துறை இதைத்தான் சொல்லுகிறது. ஆகையால் நாங்கள் சொல்வது மாதிரி நடந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் நாங்கள் கைவிட்டுவிடுவோம். அதிமுக வாக்கு வங்கி காணாமல் போகும் என்று எச்சரித்துள்ளார்.


 

 

அப்போது, வேலூரில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தினால் அதிமுகவுக்கான வாக்குகள் குறைந்துவிட்டது என விளக்கமளித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  இந்த விளக்கத்தை அமீத்ஷா ஏற்கவில்லையாம்.

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.