Skip to main content

மாணவர்கள் மட்டும் அல்ல ஆசிரியர்களில் கூட சாதி பாகுபாடு - ஐஐடி மரணங்கள் குறித்து ஜவாஹிருல்லா

Published on 14/11/2019 | Edited on 14/11/2019


சென்னை ஐஐடி-யில் கேளராவை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளா். மாணவி மரணம் தொடர்பாக பெரிய விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தன் மரணத்துக்கு கல்லூரி பேராசிரியர் தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கேள்விகளுக்கு மமகவை சேர்ந்த பேராசிரியர் ஜவாஹிருல்லா பதில் அளித்துள்ளாரர். அவரின் பதில்கள் பின்வருமாறு, 

சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலை தொடர்பாக உங்களின் கருத்து என்ன? 

பாத்திமா லத்திப் என்ற அந்த மாணவி கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர். படிப்பில் படுசுட்டியான அவர், பள்ளி காலங்களில் மட்டும் அல்லாது கல்லூரி படிப்பிலும் அதிகப்படியான மதிப்பெண்களையே எடுத்துள்ளார். கடந்த ஆண்டு எழுதிய நுழைவு தேர்வில் அவர் முதல் மதிப்பெண் எடுத்தே சென்னை ஐஐடியில் சேர்ந்தார்.  மிகப்பெரிய கனவுகளோடு அவர் சென்னை ஐஐடிக்கு வந்துள்ளா். அவருக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது. இவர் கடந்த 9ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அப்போது அவரின் தொலைபேசியில் தன் தற்கொலைக்கு கல்லூரியின் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று தெரிவித்துள்ளா். மேலும் இதுதொடர்பான முழு தகவல்களையும் தன்னுடைய சாம்சங் நோட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் தந்தையோடு நான் பேசினேன். அவர் தன் மகள் தொடர்பாகவும், ஐஐடியில் பாத்திமாவுக்கு கொடுக்கப்பட்ட தொந்தவுகள் குறித்தும் பேசினார். மாணவி, கல்லூரியில் மத ரீதியான தாக்குதலை எதிர்க்கொண்டுள்ளார். முஸ்லிமாக இருப்பதே இங்கு பெரிய சவாலாக இருப்பதாக அவர் கூறியதாக மாணவியின் தந்தை என்னிடம் கூறினார். அவர் இறப்பதற்கு முன்பு ஐஐடி கேன்டீனில் இரவு 9மணிக்கு அழுது கொண்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 

hg




இந்நிலையில், சென்றமாதம் கல்லூரியில்  நடைபெற்ற இன்டெர்னல் தேர்வில் மற்ற அனைத்து பாடங்களிலும் 20க்கு 19, 18 என்று எடுத்துள்ளார். ஆனால், பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபன் பாடத்தில் மட்டும் அவருக்கு 13 மதிப்பெண்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் துறைத் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் முகநூல் உள்ளிட்டவைகளில் உங்களுக்கு எப்படி ஐஐடியில் இடம் கிடைத்தது என்ற தொனியில் கேள்விகள் வந்துள்ளது. மேலும் மத ரீதியான கொடுமைகள் அவருக்கு அங்கு அதிகம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஐஐடியில் இந்த மாதிரியான விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அங்கு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள், இடதுசாரி மாணவர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதையும் தாண்டி மாணவர்களை போல, சாதி பாகுபாட்டிற்கு பேராசிரியர்களும் இலக்காவது உண்டு. அந்த வகையில் ஐஐடியில் சாதி பாகுப்பாட்டை நீக்கி மற்ற கல்லூரிகளை போன்று செயல்பட தற்போது ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. அதனை உடனடியாக செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இதில் கால தாமதமோ, கால விரயமோ செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை. அரசும், கல்லூரி நிர்வாகமும் உடனடியாக விழித்துக்கொள்வது நல்லது. அதுவே மாணவர்கள் அமைதியான சுழலில் கல்வி கற்க வழிவகை செய்யும். 

 

Next Story

“வெளியே சொல்லாததால் தடுக்க முடியவில்லை” - மாணவர்கள் மரணம் குறித்து ஐஐடி விளக்கம்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

IIT statement on students passed awaIIT statement on students passed awayy

 

சென்னை ஐஐடியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கடந்த மாதம் சென்னை ஐஐடியில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அடுத்த மாதமே மீண்டும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், சென்னை ஐஐடியில் தரப்பில் இருந்து, “பொருளாதாரம், குடும்பப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க முடிவதில்லை” என்று விளக்கம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

ஐ.ஐ.டி. இயக்குநர் தமிழக முதலமைச்சருடன் சந்திப்பு

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

madras iit director meet tamilnadu chief minister for today

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (31/01/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் (சென்னை ஐ.ஐ.டி.) முனைவர் வி.காமகோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முதல்வர் பேராசிரியர் கோஷி வர்கீஸ், பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

கிராமப்புற மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. உடன் இணைந்து பயிற்சி வழங்குவது குறித்து முதலமைச்சருடன், ஐ.ஐ.டி. இயக்குநர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

 

பின்னர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, "சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இனிமேல் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். ஐ.ஐ.டி.யில் நேரடி வகுப்புகள் நடத்துவது பற்றி வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும். வருங்காலங்களில் விண்வெளி ஆய்வு, 6ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றார்.