Skip to main content

புரோபோஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்த காதலன்!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய காதலை கீர்த்தி சுரேஷிடம் தெரிவிக்கும் காட்சி தமிழக இளைஞர்கள் பலரின் கனவு காட்சியாக இருக்கிறது. பல பெண்கள் நமக்கும் இதுபோல ஒன்று நடந்துவிடாதா என்று வேண்டிக்கொண்டார்கள்.  இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என முரட்டு சிங்கிள்ஸ் இந்த காட்சியை வன்மையாக கண்டித்தனர். ஆனால், இந்த காட்சியை எல்லாம் மிஞ்சுவதுபோல உண்மையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
 

pair

 

 

டோக்யோவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய மேரேஜ் புரோபோஸலுக்காக ஆறு மாதங்கள் பயணம் செய்து, உலகை திரும்பி பார்க்கும் வகையில் ஜிபிஎஸ் ஓவியம் ஒன்றை வரைந்து இணையத்தில் வைரலாகி வருகிறார். இந்த ஜிபிஎஸ் ஓவியமானது உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் ஓவியம் என்பதால் கின்னஸ் விருதும் பெற்றிருக்கிறது. 
 

அப்படி என்ன மாதிரியான ஓவியத்தை, அவர் எங்கு எதனால் வரைந்தார் என்று கேட்கிறீர்களா? ‘மேரி மி’ அதாவது என்னை திருமணம் செய்துகொள் என்று ஜப்பான் முழுவதும் பயணம் செய்து ஜிபிஎஸ் ஆர்ட் செய்திருக்கிறார். இதற்காக இவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு 6 மாதங்கள் ஊர் ஊராக சுற்றி திரிந்து 7000 கிமீ தொலைவு பயணம் செய்து இதை வரைந்திருக்கிறார்.
 

ஜிபிஎஸ் ஆர்ட் என்பது கூகுள் எர்த் செயலியை பயன்படுத்தி நாம் செல்லும் இடங்களின் வழிதடங்களை கிராஃபிக் இமேஜாக பதிவு செய்ய முடியும். அப்படி பதிவு செய்யப்பட்ட கிராஃபிக் இமேஜைதான் ஜிபிஎஸ் ஆர்ட் என்று அழைக்கப்படுகிறது. ஜிபிஎஸ் ஆர்ட் என்பது தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.
 

marry me

 

 

நட்ஷூகி என்னும் பெண்ணைதான் திருமணம் செய்துகொள்ள போவதாக யாஷனின் கடந்த 2008ஆம் ஆண்டே முடிவு செய்துவிட்டார். ஆகையால் இந்த உலகத்தில் யாரும் புரோபோஸ் செய்யாத விதத்தில் மிக பெரிதாக புரோபோஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து ஜிபிஎஸ் ஆர்ட் செய்ய திட்டம் தீட்டியுள்ளார். ஹோக்காய்டோ தீவிலிருந்து காஹாஷோஹிமா கடற்கரை வரை பயணம் செய்து  ‘மேரி மி’ என்ற வாக்கியத்தை எழுதியிருக்கிறார். புரோபோஸ் செய்ததற்கு இவருடைய காதலி நட்ஷூகியும் சரி என்று கிரீன் சிக்னல் போட்டிருக்கிறார். இதனால் யாஷனின் பத்து வருட கனவும் வாழ்க்கையும் வெற்றியடைந்துள்ளது. 
 

இறுதியாக கூகுள் இவருடைய பயண வாழ்க்கை வீடியோவாக பதிவு செய்து இவருடைய காதல் கதையை உலகம் முழுவதும் கேட்க செய்துள்ளது. கூகுள் ட்விட்டரில் வெளியாகியுள்ள யாஷனின் வீடியோ செம வைரலாகி வருகிறது. பல இளைஞர்கள் இந்த புரோபோஸலை பார்த்து வியக்கிறார்கள். நமக்கும் இப்படி நடந்தால் நன்றாகதான் இருக்கும் என பொறாமை படுகிறார்கள். ஒரு சின்ன மோதிரத்தை வாங்கி கொடுத்து தன்னுடைய காதலை சாதரான ஒன்றாக வெளிக்காட்டாமல் வித்தியாசமாக உலகறிய செய்து கின்னஸிலும், வரலாற்றிலும், கூகுள் எர்த்தில் இவருடைய காதலை இடம்பெற செய்திருக்கிறார் யாஷனின்.


 

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.