Skip to main content

பேனை பெருமாளாக்குகிறதா பாஜக அரசு?

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய மத்திய அரசு, தனது முடிவை காஷ்மீர் மக்களும், உலக நாடுகளும் வரவேற்பதாக கூறியது. ஆனால், சீனாவோ இந்தப் பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கே கொண்டுபோய்விட்டது.
 

thumb

 

 

தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை காஷ்மீரிகளுக்கே உண்டு என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 11 முறை தீர்மானம் இயற்றியிருப்பதாகவும், அந்தத் தீர்மானங்களை வலியுறுத்தும் வகையிலேயே இந்தப் பிரச்சனையை ஐ.நா. விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது என்றும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது.
 

அதாவது இந்தப் பிரச்சனை இப்போது சர்வதேச பிரச்சனையாகி இருக்கிறது என்பதே உண்மை. இதற்கிடையே பாகிஸ்தானுடன் மோதல் போக்கை தவிர்த்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணிக்கும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு யோசனை தெரிவித்திருக்கிறார்.
 

அதைத்தொடர்ந்து ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி அரை மணிநேரம் பேசினார். அப்போது, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் தலைவர்களால்தான் பதற்றம் ஏற்படுகிறது. அவர்களுடைய நடவடிக்கைகளால் பதற்றத்தை தணிக்க முடியாது என்று ட்ரம்ப்பிடம் கூறியிருக்கிறார்.
 

சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீர் மக்கள் வரவேற்பதாக மத்திய அரசு இதுவரை கூறிவந்தது. ஆனால், 15 நாட்களாகியும் அங்கு அமைதி திரும்பவில்லை. லட்சம் ராணுவ வீரர்களை தெருக்களில் நிறுத்தி, அமைதி திரும்பியதாக கூறினாலும், காஷ்மீரில் வாழும் பண்டிட்டுகள், டோக்ராக்கள், புத்தமதத்தினர் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். அதாவது, காஷ்மீரில் நிலத்தை வாங்கவோ விற்கவோ வெளி ஆட்களுக்கு உரிமை கொடுக்கக்கூடாது என்றும், காஷ்மீரில் வெளி ஆட்களை குடியமர்த்தி மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எதற்காக மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததோ அந்த நோக்கத்தையே இவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

காஷ்மீரில் பள்ளிகளைத் திறந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பிள்ளைகளைத்தான் காணோம் என்கிறார்கள். மிகச் சிறிய அளவிலேயே மாணவர்கள் வந்ததாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

பள்ளிகளைத் திறந்த அரசு கல்லூரிகளை எப்போது திறக்கும் என்பது தெரியவே இல்லை. அரசு அலுவலகங்கள் எப்போது இயங்கும், மக்கள் எப்போது வீடுகளை விட்டு வெளியே வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்பதெல்லாம் கேள்விகளாகவே நீடிக்கின்றன.
 

வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் மட்டுமே காஷ்மீரைக் குறித்த உண்மையான செய்திகளை வெளியிடுவதாகவும், உள்ளூர் செய்தி நிறுவனங்களில் அரசுக்கு சாதகமானவை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
 

மத்திய ராணுவ அமைச்சரும் மற்ற பாஜக தலைவர்களும் பேனைப் பெருமாளாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் ஹரியானா, மகாராஸ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களுக்காக பல பொய்களை பரப்பி வருகிறார்கள்.
 

kashmir

 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த இந்தியா, பாலகோட் தாக்குதலைக் காட்டிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார். இதை குறிப்பிட்டு ராஜ்நாத் சிங் ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அப்போது, பாலகோட் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலையும், அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கில் தீவிரவாதிகள்  கொல்லப்பட்டதையும் இம்ரான்கான் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறினார்.
 

பாலகோட்டில் ஆளில்லாத வனப்பகுதியில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், அதைக்காட்டிலும் பெரிய தாக்குதலுக்கு இந்தியா திட்டமிடுவதாகத்தான் இம்ரான்கான் சொல்லியிருந்தார். அவர் சொன்ன விஷயத்தையே மாற்றி, பாஜக அரசின் வீரதீரச் செயலைப் போல ராணுவ அமைச்சரே பேசியிருப்பது தவறு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.