நாம் இன்று ஒருவரின் உயிரை காப்பாற்றினோம்.என்பதை நினைத்தாலே நாம்எவ்வளவு மகிழ்ச்சி அடைவோம். ஆனால் இங்கு ஒருவர் தனது கிட்டதட்ட 60வருடங்களாக உதவியதின் பயனாய் 24 இலட்சம் குழந்தைகள் உயிர் பிழைத்துள்ளனர்.

James harrison

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் என்பவர்தான் அந்த முதியவர் அவருக்கு வயது 81. அவர் 14 வயது சிறுவனாக இருந்தபோது நெஞ்சுப்பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதுதான் அவருக்கு இரத்தத்தில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்ததை கண்டறிந்தனர்.

Advertisment

இதன்மூலம் ஆன்டி டி என்ற மருந்தை மேம்படுத்த முடியும் என்றும், இதன்மூலம் பிரசவத்தின் மூலம் இரத்தம் சார்ந்த பிரச்சனைகளால் உயிருக்கு போராடும் சிசுக்களை காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர். அதன்பின் செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். அன்று ஆரம்பித்தது அவர் பயணம். தொடர்ந்து இரத்ததானம் செய்ய தொடங்கினார். இதன்மூலம் வாரம் 60 குழந்தைகள் காப்பாற்றப்பட்டன. இந்த 60 வருடங்களில் 24 இலட்சம் குழந்தைகள் வரை இவரால் உயிர் பெற்றுள்ளன. தற்போது 81 வயதாகும் இவர் செஞ்சிலுவை சங்கத்திலிருந்து ஓய்வு பெற விரும்பியுள்ளார். இந்த 60 வருட சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு தங்க கடிகாரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தன் வாழ்வை பிறருக்கு உதவும் வகையில் வாழ்பவன்தான் உண்மையான மனிதன். அவர் பெரிய மனிதன்தான்