Skip to main content

ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயர் நல்லவரா, கெட்டவரா?

Published on 22/10/2018 | Edited on 22/10/2018

1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திங்கள் கிழமை ஹைதராபாத் நகருக்கு அருகே ஓடும் முஸி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அளவுக்கு அதிகமான வெள்ளத்தால் ஆற்றின் கரைகள் உடைந்தன. வெள்ளம் ஹைதராபாத் நகருக்குள் பாய்ந்தது. நகரையே வெள்ளக்காடாக்கியது. இதில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

 

hyderabad floods



ஹைதராபாத்தை அன்று ஆட்சி செய்தவர் நிஜாம் மஹ்பூப் அலி கான். வெள்ளப்பெருக்கிலிருந்து நகரை காப்பாற்ற அன்று அழைக்கப்பட்டவர் பொறியாளர் எம்.விஸ்வேச்வரய்யா. நதியின் கரை உடைந்து நகருக்குள் புகுந்த வெள்ளத்தின் அளவு 4 லட்சத்து 25 ஆயிரம் கன அடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது ஹைதராபாத்தில் தங்கியிருந்தவர் மைகேல் ஓ டயர். முஸி ஆற்று வெள்ளத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள ஹைதராபாத், முற்றாக அழிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டது. ஆம், ஹுசைன்நகர் ஏரி நிரம்பி அதன் கரையும் உடையும் நிலையை எட்டியது. வழக்கமாக செகந்திராபாத்திலிருந்து ஹைதராபாத்திற்கு ரயில் வழியாகவே டயர் பயணம் செய்வது வழக்கம். ஆனால், ஏரியின் கரைகள் உடையக்கூடும் என்பதால் அச்சமடைந்தார்.

அடுத்தநாள், ஹைதராபாத் நகருக்கு குடிநீரை வழங்கிக் கொண்டிருந்த ஜீடிமெட்லா குளம் அல்லது ஃபாக்ஸ்ஸாகர் ஏரியை டயர் ஆய்வு செய்தார். அந்த ஏரியை, பிரிட்டிஷ் ராணுவக் குடியிருப்புக்காக பிரிட்டிஷ் அரசு 1896 ஆம் ஆண்டு கட்டிக் கொடுத்தது.

 

hyderabad flood



“அவர் ஆய்வு செய்யச் சென்றபோது கரையில் மூன்று இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டிருந்தது. அந்த உடைப்பு அதிகரித்தால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் ஹுசைன்ஸாகர் ஏரிக்கே செல்லும். அப்படிச் சென்றால் அந்த ஏரியும் உடையும். அப்படி உடைந்தால் ஹைதராபாத் நகரமே அழியக்கூடும் என்று அஞ்சியதாக” டயர் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

டயர் ஆய்வு செய்யச்சென்ற நேரத்தில், துர்கா பிரசாத் என்ற இந்தியரின் தலைமையில் 12 பேர் குளத்தின் கரையில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக 'எனக்குத் தெரிந்த இந்தியா' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதாவது, அந்தக் குளத்தை பாதுகாக்க இந்தியர் ஒருவர் மேற்கொண்ட முயற்சியையும் மறக்காமல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்று வரலாற்றாசிரியர் பெஞ்சமின் கோஹென் கூறியிருக்கிறார்.

குளம் உடையும் நிலையை அறிந்தவுடன் தாமதிக்காமல், செகந்திராபாத், ஹைதராபாத் நகரங்களில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை உடனடியாக வரவழைத்தார் டயர். பிரிட்டிஷ் வீரர்களை கேம்பெல் என்பவர் தலைமையில் அனுப்பினார். ஆயிரக்கணக்கான வீரர்களும், ராணுவப் பொறியாளர்களும் இணைந்து கரையை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மணல்மூடைகளால் அந்தக் கரை பலப்படுத்தப்பட்டது. மணல் மூடைகளுடன் கற்களும் பாறைகளும் சேர்த்து மூன்று நாட்கள் கடுமையான உழைப்பிற்கு பிறகு குளம் மற்றும் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டன என்கிறார் கோஹென்.

 

jallian wallabagh



ஹைதராபாத் நகரை வெள்ளம் பாதித்தவுடன் நகருக்கு பாதுகாப்பாக உஸ்மானஸாகர் மற்றும் ஹிமயத்ஸாகர் என்ற இரு ஏரிகளைக் கட்டும்படி பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா யோசனை கூறினார். இந்த இரண்டு ஏரிகளையும் முஸி ஆறு ஹைதராபாத் நகருக்குள் நுழைவதற்கு முன்னரே கட்டும்படி அவர் வலியுறுத்தினார். அத்துடன், நகருக்குள் அந்த நதி பயணிக்கும் நீளத்துக்கு இருபுறமும் கரைகளை பலப்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்.

இந்த இரு ஏரிகளும் 1920 மற்றும் 1927 ஆம் ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டன. அப்படியிருந்தும் 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் ஹைதராபாத் நகரம் சிறிதளவு பாதிக்கப்படவே செய்தது.

இந்த வெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் உதவி கவர்னராக ஜெனரல் மைகேல் டயர் நியமிக்கப்பட்டார். இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் ஜாலியன் வாலாபாக்கில் பைசாகி திருவிழா அன்று கூடிய மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

 

jallian



மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவன் பெயர் ரெஜினால்டு டயர். அவன்தான் மைதானத்தின் வாசல்களை அடைத்து ஒரே வாசல் வழியாக பிரங்கியாலும் துப்பாக்கிகளாலும் கொடூரமாக சுட்டுக் கொன்றவன்.

அந்த கொடூர சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி, லண்டனில் உள்ள கேக்ஸ்டன் ஹாலில் மைக்கேல் டயரை உத்தம் சிங் என்ற இளைஞன் சுட்டுக் கொன்றான்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையை திட்டமிட்டது மைக்கேல் டயர் என்றும், அதை நிறைவேற்றியவன் ரெஜினால்டு டயர் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், முன்பொருநாள், ஹைதராபாத் நகரைக் காப்பாற்ற இந்தியர்களோடு இணைந்து பாடுபட்டவரும் இதே மைக்கேல் டயர்தான் என்ற உண்மை உறுத்தவே செய்கிறது.

 

 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.