Skip to main content

“பத்து ஜென் கதைகள் இருந்தால் போதும்; வாழ்க்கையை எளிதாகக் கடந்து விடலாம்” - ஜெய் ஜென்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

 JAI ZEN about ZEN STORY

 

ஜென் கதைகளின் மகத்துவம் குறித்து ஜெய் ஜென் நம்மிடம் விவரிக்கிறார்.

 

நமக்கு திருக்குறள் எப்படியோ அதுபோல் ஜப்பானியர்களுக்கு, சீனர்களுக்கு, திபெத்தியர்களுக்கு ஜென் தத்துவம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிமிடத்தில் நீங்கள் வாழ்வது தான் ஜென் தத்துவம். சிறுவயதிலிருந்தே நான் ஒரு புத்தக வாசிப்பாளன். அதில் ஒரு புத்தகத்தில் ஜென் கதைகள் குறித்த ஒரு வரி இருந்தது. அதன் பிறகு ஜென் தத்துவம் குறித்து நான் வாசிக்க ஆரம்பித்தேன். மிகக் குறைவான வரிகளில் பெரிய தத்துவங்களைச் சொல்வதுதான் ஜென் தத்துவம். ஒரு வரியில் கூட கதைகள் இருக்கின்றன. உதாரணமாக "மழை பெய்கிறது. குடையை எடுத்துச் செல்வதும் செல்லாமல் இருப்பதும் உன்னுடைய விருப்பம்" என்பது ஒரு ஜென் கதை. 

 

அவர்கள் பேசும் மொழியே கதைகளின் வாயிலாகத் தான் இருக்கும். உலகத்தில் நிலையானது என்பது எதுவுமே இல்லை என்கிறது ஒரு ஜென் கதை. ஜென் தத்துவ ஞானிகளின் வாழ்க்கையே எளிமையானது. அதனால் அவர்களுடைய சிந்தனையும் எளிமையாக இருக்கும். அதன் மூலமே ஜென் கதைகளும் பிறக்கின்றன. 10 ஜென் கதைகளை அறிந்தால் வாழ்க்கையை எளிமையாகக் கடந்து விடலாம். இயற்கையான விஷயங்களின் மூலமாகவே மகிழ்ச்சியாக இருக்கலாம், அதற்காக செயற்கையாக எதையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது ஜென் தத்துவம். 

 

ஜென் தத்துவ ஞானிகள் உலக நடப்புகள் அனைத்தையும் அறிந்திருப்பார்கள். ஆனால் தாமரை இலை தண்ணீர் போல் வாழ்வார்கள். அனைத்தையும் தூரத்தில் இருந்தே பார்ப்பார்கள். 'பையா' படத்தில் எதையும் தூரத்தில் இருந்து பார்த்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று தமன்னாவிடம் கார்த்தி கூறுவார். அது ஒரு ஜென் தத்துவம். இமயமலையில் ஞானிகளை சந்திக்கும்போது அவர்கள் என்னிடம் கூறும் கதைகளை நான் எங்குமே படித்ததில்லை. அதுபோன்ற கதைகளும் என்னோடு பயணிக்கின்றன. பொருத்தமான கதைகளை என்னுடைய பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு நான் சொல்கிறேன்.

 

 

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.