Skip to main content

25 ரூபாய் காலண்டருக்கு 5 கோடி கேட்பீங்களா... பெண்களைக் கொச்சைப்படுத்தும் சந்தானம் எல்லாம் வாய் திறக்கலாமா..? - புதுமடம் ஹலீம் கேள்வி!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

ரக

 

ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியுள்ளதாக கூறி அந்த படத்திற்கு எதிராக சில அமைப்புக்கள் குரல் கொடுத்து வருகிறது. படத்தில் தங்களை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் இந்த படத்திற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்த நடிகர் சந்தானம் "ஒருவரை உயர்த்துவதர்காக மற்றவர்களை தாழ்த்தக்கூடாது" என்று கூறியிருந்தார். சந்தானத்தின் இந்த பதிலுக்கும் பலர் எதிர்ப்பது தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சந்தானத்தின் இந்த பேச்சுக்கு மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த புதுமடம் ஹலீம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

மற்றவர்களை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை தாழ்த்தி பேசக்கூடாது என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

மற்றவர்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை தாழ்த்த கூடாது என்று சந்தானம் கூறியுள்ளார். அவரின் ஸ்டேட்மெண்ட் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். சொல்கிற அவர் சரியான ஆள் இல்லை. அவர் படங்களில் என்னென்ன கேலி கிண்டல்களை அவர் செய்துள்ளார் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்களை கொச்சைப்படுத்தி பேசுதல், பெண்களை ஆபாசமாக காட்டுதல் போன்ற பல்வேறு காட்சிகளை அவர் நடிக்கும் படத்தில் இருக்கும். அந்த ஸ்டேட்மெண்டை கூறுவதற்கு முற்றிலும் தகுதியில்லாதவர் சந்தானம். நல்ல கருத்தை அவர் தன்னுடைய படங்களில் கூறாத போது, பொதுவெளியில் தான் நல்லவனாக காட்டிக்கொள்ள முயல்கிறார்.  அந்த படத்தை எத்தனையோ பேர் பார்த்துள்ளா்கள், நானும் பார்த்தேன். யாருக்கும் எந்த தவறு தெரியவில்லை. அந்த காலண்டரில் படம் இருப்பது கூட நாம் யாரும் கவனித்திருக்க மாட்டோம். ஆனால் இவர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தேடிப்பார்த்து ஏதாவது ஒரு குற்றத்தை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். தங்களுடைய முழு நேரத்தையும் அதற்காக இவர்கள் செலவிடுகிறார்கள். 

 

அந்த காலண்டர் விவகாரத்தில் கூட அந்த படம் நீக்கப்பட்டு வேறு படம் வைக்கப்பட்டது. அதற்கு சூர்யா தரப்பில் விளக்கமும் தரப்பட்டது. ஆனால் அதை அவர்கள் ஏர்றுக்கொள்ளாமல், அவரின் விளக்கம் திமிர் தனமாக இருப்பதாக சிலர் தவறாக செய்தி பரப்புகிறார்கள். ஒரு 25 ரூபாய் காலண்டருக்கு 5 கோடி இழப்பீடு கேட்கும் இந்த நேரத்தில் கடந்த காலத்தில் எந்தமாதிரியான படம் வெளியானது என்று பார்க்க வேண்டும். ருத்ர தாண்டவம் என்ற ஒரு படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் விடுதலைச் சிறுதைகள் கட்சி தலைவர் திருமாவளவனை போன்று ஒரு கேரக்டரை உருவாக்கி அவரை அவமானப்படுத்தும் விதமாக காட்சிகளை வைத்திருந்தீர்களே, அது மட்டும் சரியா. ஒரு காலண்டருக்கு குதிக்கும் இவர்கள் ஒரு தலைவரை வேண்டும் என்றே அவமானப்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ருத்ர தாண்டவம் படத்தில் வில்லன் கேரக்டருக்கு பின்னால் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காக போராடியவர்கள் புகைப்படங்கள் எல்லாம் இடம்பெற்றிருந்ததே, அதுகுறித்து யாராவது பேசினீர்களா? எனவே பரபரப்புக்காக இந்த மாதிரி பேசுவர்களின் பேச்சுக்களை நாம் புறம்தள்ள வேண்டும்.  

 

 


 

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.

Next Story

“கடவுள் நம்பிக்கையை அரசியல் பண்றது தப்பு” - சந்தானம்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
santhanam about god beleif in  Vadakkupatti Ramasamy success meet

டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2 ஆம் தேதி வெளியானது. முன்னதாக ட்ரைலர் வெளியானபோது, அதில் இடம்பெற்ற ஒரு வசனம் பெரியாரை அவதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சையானது. பின்பு இசை வெளியீட்டில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என சந்தானம் விளக்கமளித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் சந்தானம், மேகா ஆகாஷ், கார்த்திக் யோகி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சந்தானம் பதிலளித்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், “எந்த கோயிலாக இருந்தாலும் கடவுளை வச்சு காசு பண்றது தப்பு. அதே மாதிரி கடவுள் நம்பிக்கை வச்சு அரசியல் பண்றதும் தப்பு. இதைத்தான் படத்தில் காட்டியிருக்கோம். கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்களுக்கு இருக்கு. இல்லாதவங்களுக்கு இல்லை. அதனால் இரண்டு பேருக்குமே பொதுவாகத்தான் வச்சிருக்கோம். என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது இருக்கு. நான் சாமி கும்புடுகிறவன். ஒரு ஆன்மீகவாதி” என்றார்.