Skip to main content

"அ.தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை... அதனால் எங்களின் உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள்" - ஜெ.தீபா தடாலடி!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

jk


ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அந்தச் சொத்துத் தனக்குத்தான் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபாவை நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
 


கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வரும் வேளையிலும் ஜெயலலிதா சொத்துகள் தொடர்பான சர்ச்சைகள் ஒருபக்கம் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கின்றது. நீதிமன்றம் ஜெயலலிதாவின் வாரிசுகளாக உங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவில்லமாக மாற்றும் முயற்சியை அரசு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், இந்த அறிவிப்பிற்குப் பிறகு அரசு என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன? 

உலகம் முழுவதும் இந்தக் கரோனா தொற்றுப் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. பொதுமக்கள் வெளியே செல்வதற்கே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நாங்கள் செய்ய வேண்டிய சட்டரீதியான முயற்சிகள் தற்போது இந்தக் கரோனா காரணமாகத் தடை பட்டுள்ளது. எல்லாருக்கும் ஏற்பட்டுள்ள சிரமங்களைப் போல எங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அதில் காட்டவேண்டிய அக்கறையை இந்த விஷயத்தில் ஏன் காட்டுகிறது என்று தெரியவில்லை. எனவே கரோனா விவகாரத்தில் அனைவரின் ஒத்துழைப்பு என்பது மிக முக்கிய ஒன்றாக இருக்கின்றது. 
 

 


இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அவசரத்துக்கு என்ன காரணம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என்னுடயை மனசாட்சி சொல்கிறது அவர்கள் தேர்தலுக்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று. அ.தி.மு.க. வாக்குகளை அவர்கள் பெற வேண்டும். இதன் காரணமாக அவர்கள் அவசரப்படுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்போது அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை என்ற சூழ்நிலை நிலவி வருகின்றது. அப்படி இருக்கின்ற நிலையில் கட்சித் தொண்டர்களைத் திருப்திபடுத்தும் விதமாக இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதையும் தாண்டி அந்த கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றது. வருகின்ற தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என்ற குழப்பம் பெரிய அளவில் இருக்கின்றது. இதை எல்லாம் மறைத்துத் தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுக்க இந்த மாதிரியான வேளைகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

செல்வி ஜெயலலிதாவின் வாரிசுகளாக உங்களையும், உங்கள் தம்பி தீபக்கையும் அறிவித்துள்ளது. சொத்துகளைத் தவிர வேறு எந்த மாதிரியாகவும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?
 

http://onelink.to/nknapp


நீதிமன்றம் கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது ஒரு சட்டரீதியான வெற்றியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அந்தக் குடும்பத்தில் நாங்கள் பிறந்திருக்கிறோம். அதனால் அந்தப் பந்தம் எங்களுக்குள் இயற்கையாகவே இருந்துகொண்டு இருக்கின்றது. ஆனால் அதனைச் சட்டரீதியாக ஒரு போராட்டமாக நடந்த வேண்டிய அவலநிலைக்கு நாங்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். இயற்கையாக எங்களுக்குக் கிடைக்கின்ற நீதி சட்டப்போராட்டத்திற்குப் பிறகு தற்போது எங்களுக்குக் கிடைத்துள்ளது.

 


 

Next Story

'அதில் நாங்கள் தலையிட முடியாது'- ஜெ.தீபா பேட்டி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
'We cannot interfere in it' - J. Deepa interview

ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் அதிமுக தொண்டர்களாலும், அதிமுக நிர்வாகிகளாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேநாளில் சசிகலா 'ஜெயலலிதா இல்லம்' என்ற பெயரில் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டி இன்று குடியேறி உள்ளார். இந்நிலையில் சென்னையில் போயஸ் கார்டெனில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில், ''ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் இன்று. அவர் எனது அத்தை. அவர் குடும்ப வழி உறவு என்பதால் பிறந்தநாள் விழாவிற்காக எங்களால் முடிந்த அளவிற்கு எளிமையான பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் முறைப்படி செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பிறந்தநாள் கூட அவருக்கு நாங்கள் வாழ்த்து சொல்லாமல் இருந்ததே இல்லை. எல்லா பிறந்தநாளுக்கும் அத்தைக்கு நான் வாழ்த்து சொல்வேன். வேதா இல்லத்திற்கு எதிரே 'ஜெயலலிதா இல்லம்' என சசிகலா வீடு கட்டியுள்ளது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட முடியாது.

இந்த ரோட்டில் நாங்கள் தான் இருப்போம் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய இல்லம். அங்கு அவர்கள் வீடு கட்டியுள்ளார்கள். அதில் குடியேறி உள்ளார்கள். என்னுடைய பர்சனலாக என்னுடைய நினைவெல்லாம் இங்கேதான். இந்த இடத்தில் தான் அவருக்கு நான் வாழ்த்து சொல்வேன்'' என்றார்.

Next Story

''அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர்... பெரிய ஆள் இல்ல'' - எடப்பாடி பழனிசாமி

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

தொடர்ந்து ஏ.வி. ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அதிமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அவர் பேசியதற்கு தான் எல்லோரும் எதிர்ப்பு கொடுத்து வருகிறார்கள். அவர் ஒரு பெரிய ஆள் இல்ல. அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர். ஏதோ இரக்கப்பட்டு சேர்த்துக் கொண்டோம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் விட்டு வைத்திருந்தோம். இப்பொழுது கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கட்சி ஒழுங்கு  நடவடிக்கை எடுத்திருக்கிறது'' என்றார்.