Skip to main content

அன்பழகனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ரிலாக்ஸாக இருப்பார் கலைஞர்... -வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ.! 

Published on 10/06/2020 | Edited on 11/06/2020

 

kkkk


கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். ஜெ.அன்பழகனுடன் நெருக்கமாகப் பழகி வந்தவர் நடிகரும், வேளச்சேரி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திரசேகர். ஜெ.அன்பழகனுடன் பழகிய தருணங்களை நம்மிடம் நினைவு கூர்ந்தார்.
 


''ஜெ.அன்பழகன் எனக்கு 40 ஆண்டு கால நண்பர். நான் தி.மு.க.வில் இணைந்ததில் இருந்து அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சிறந்த நண்பர். அவர் மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய பகுதியில் பல இடங்களில் என்னை அழைத்து பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார். கலைத்துறையில் சிறந்த ஈடுபாடு கொண்டவர். 'இது நல்ல படம், சிறந்த படம், வியாபார ரீதியிலான படம், சிறந்த கலைக்கான படம்' என்று சொல்லக் கூடிய அளவுக்கு கலைத்துறையையும் நேசித்தவர். அரசியல் வாழ்க்கையில் இருந்து கொண்டு கலைத்துறையையும் எப்படிக் கவனிக்கிறார் என நான் ஆச்சரியப்பட்டதும் உண்டு. 

கட்சிப் பணி என எடுத்துக்கொண்டால், அவரைப்போல தி.மு.க.வில் பணியாற்றுவதைப் பார்க்க முடியாது. ஏற்கனவே அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அதற்குப் பிறகும் 10, 15 ஆண்டு காலமாக அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், மிகவும் மன தைரியத்தோடு இரவு பகல் பாராமல் பணியாற்றுவார். மன வலிமை அவருக்கு அதிகம். 
 

sssmks


கலைஞர், அவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என அன்பழகனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் மிகுந்த நம்பிக்கையோடு ரிலாக்ஸாக இருப்பார் கலைஞர். தான் நினைத்ததைவிட சிறப்பாக அன்பழகன் செய்வார் எனும் நம்பிக்கையில் கலைஞர் இருப்பார். போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அன்பழகனை கலைஞர் பாராட்டுவார். பாராட்டாமல் ஒருமுறைக் கூட இருந்ததில்லை. கலைஞரிடம் பாராட்டுப் பெறுவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், ஒவ்வொரு முறையும் அந்தப் பாராட்டைப் பெறும்போது சாதனையாக நினைப்பார் அன்பழகன். 
 

 

vagai chandrasekar mla

 

தி.மு.க.வில் இளைஞரணி தொடங்கிய காலத்தில் இருந்து சென்னையில் இருக்கிற காரணத்தினால் மு.க.ஸ்டாலினோடு மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதனால், கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றினார். அதேபோல அன்பழகன்மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருந்தார். 

கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவை முடியும் வரைக்கும் ஜெ.அன்பழகனின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. மைக் கொடுக்க மாட்டார்கள். மைக் அணைக்கப்பட்டால் கூட, அவர் எழுந்தவுடனேயே ஆளுங்கட்சியினர் அனைவரும் அலர்ட் ஆயிடுவார்கள். சபை அமைதியாக இருக்கும்போது ஒரே ஒரு வார்த்தை சொல்வார்; அப்போது சபையே ஆடிப்போகும்! நமக்குக் கோபம் வரும்போது, இந்தக் கருத்தைச் சொல்ல வேண்டும் என பொங்கும்போது நாம் உணர்ச்சிவசப்பட்டுவோம். ஆனால், அன்பழகன் கோபமாக ஒரு கருத்தைச் சொல்லும்போது ரொம்ப ரிலாக்ஸாக, ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார். வார்த்தை ஒவ்வொன்றும் கனலாக வந்து விழும்; அக்னியாக வந்து விழும். 
 

vagai chandrasekar mla


உண்மையிலேயே எங்கள் கழகத்திற்கு அன்பழகன் தூண்தான்! எங்கள் இயக்கத்தின் ஆற்றல் மிக்க செயல் வீரர். மாவட்டச் செயலாளராக இருந்து. அந்த மாவட்டத்தில் கட்சியினரை ராணுவக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தவர். பொறுப்பில் உள்ளவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என நினைப்பவர். அதேநேரத்தில் மென்மையானவர். எல்லாரிடமும் அன்பு செலுத்தக்கூடியவர். 
 

http://onelink.to/nknapp


'ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சிகளில் தானே கலந்து கொண்டு, முன்னின்று நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போதுகூட தலைவர் ஸ்டாலின், ''அன்பு... நீங்க இந்த வேலையைச் செய்ய வேண்டாம்! நீங்க உங்க உடல்நிலையைப் பாருங்க! நீங்க பத்திரமா இருங்க! நீங்க பத்திரமா இருங்க''ன்னு பார்க்கிற இடத்திலெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். அதையும் தாண்டி அன்பழகன் பணியாற்றியதால் இக்கட்டான சூழ்நிலை வந்துவிட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் நட்போடு பழகியவர். அவரது இழப்பு தி.மு.க.வுக்கு மிகப்பெரிய இழப்பு'' என நா தழுதழுக்க கூறினார். 
 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.