Skip to main content

“சமாதியை மூடி வைத்துக்கொண்டு சின்னம்மா ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்று கேட்பது முட்டாள்தனம் இல்லையா..?“ - தேனி கர்ணன் கேள்வி!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

ுரப

 

அதிமுகவின் 50வது ஆண்டு விழா வருகிற 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை செய்துவருகிறது. இதற்கிடையே அன்றைய தினம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதா சமாதிக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் இருந்து வந்ததிலிருந்து வெளியே அதிகம் செல்லாத சசிகலா, தற்போது முதல்முறையாக ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருக்கிறார். இந்நிலையில், சசிகலாவின் திட்டம் என்ன, இதற்குப் பிறகு அவர் தீவிர அரசியலில் களம் இறங்குவாரா உள்ளிட்ட பல கேள்விகளை சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணனிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுகவின் பொன்விழா வரும் 17ஆம் தேதி சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் அமைதியாக இருந்த சசிகலா, தற்போது ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

எங்களைப் பொறுத்தவரையில் சின்னம்மாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அதை தனிப்பட்ட யாரும் முடிவு செய்ய முடியாது. இந்தக் கட்சியை வழிநடத்த வேண்டிய அனைத்து தகுதிகளும் அவர் ஒருவருக்குத்தான் இருக்கிறது. எனவே சின்னம்மா 16 மற்றும் 17ஆம் தேதிகளில் அம்மா சமாதிக்குச் செல்ல இருக்கிறார். அவர் அதிமுக தொடக்க தினத்தில் அம்மா சமாதிக்குச் செல்லலாம். ஆனால் அன்றைக்கு கூட்டத்தோடு கூட்டமாக மாறிவிடும். அதனால் அவருக்குத் தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் அவர் முதல்நாளே அங்கு செல்ல இருக்கிறார். அவரின் வருகைக்குத் தொண்டர்களை அவர் அழைக்கவில்லை. ஆனால் சின்னம்மாவின் கரங்களை வலுப்படுத்த தொண்டர்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.

 

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபோதே ஏன் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தவில்லை, தற்போது வேண்டுமென்றே அவர் அரசியல் செய்கிறார் என்று ஜெயக்குமார் குற்றம்சாட்டுகிறாரே? 

அவர் சிறையில் இருந்து வெளியே வரும்போதே பெங்களூருவிலிருந்து சென்னை வரை அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்திருப்பீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒன்றுகூடி அவருக்கு வரவேற்பு அளித்தார்கள். அவர்கள் எல்லாம் திமுக தொண்டர்களா? அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தானே! அன்றைய தினம் காவல்துறையை வைத்து இவர்கள் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்கினார்கள். காரில் கொடி கட்டக்கூடாது என்று கூறினார்கள், வழிநெடுக இருந்த கடைகளை மூடச் சொன்னார்கள். அவர்களால் முடிந்த அளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள். அதையும் தாண்டி உலக வரலாற்றில் இடம்பெறும் வகையில் ஒரு வரவேற்பை அவருக்கு தொண்டர்கள் வழங்கினார்கள். ஏற்கனவே திறந்த சமாதியை இவரின் வருகையை முன்னிட்டு மூடிவைத்துக்கொண்டு இன்னும் வேலை ஆகவில்லை என்று கதை விட்டார்கள். வேலை ஆகாத சமாதியை எதற்காக முன்கூட்டியே திறந்தார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் எந்த ஒரு பெரிய வேலையும் அங்கே நடைபெற்றதாக தெரியவில்லை. 

 

உண்மையான அதிமுக ரத்தம் ஓடுபவர்கள் சசிகலாவை நம்பி போகமாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கூறிவருவது பற்றி? 

நாங்கள் எல்லாம் யார்? அம்மாவின் தொண்டர்கள், சின்னம்மாவின் விஸ்வாசிகள். ரோட்டில் 23 மணி நேரம் நின்ற தொண்டர்கள் அடுத்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களா? இல்லை மதிமுக தொண்டகளா? அனைத்தும் முட்டாள்தனமான பேச்சு. அதிமுக தொண்டர்கள் அனைவரும் சின்னம்மாவின் தொண்டர்கள்தான். தலைவர்களாக இன்றைக்குத் தங்களை நினைத்துக்கொள்ளும் அனைவரும் சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான். எனவே இவர்களுக்கு எல்லாம் பழைய சம்பவங்கள் மறந்துபோகலாம்.

 

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.