Skip to main content

ஒரே ஒரு படம் தான்… அதில் இருக்கிறது 35 கோடி ஆண்டு வரலாறு!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

அயர்லாந்து நாட்டின் கடற்கரையிலிருந்து 80 மீட்டர் தூரம் கடலுக்குள் நிற்கிறது ஒரு வித்தியாமான அடுக்குப் பாறை துண்டு. அதன் உச்சியில் பசும்புல் இன்றும் முளைத்து படர்ந்திருக்கிறது.
 

அதன்பெயர் துன் பிரிஸ்டே அல்லது உடைந்த கோட்டை என்கிறார்கள். அது வியப்பூட்டும் அடுக்குப்பாறையாக காலத்தைக் கடந்தும் நிற்கிறது. பூமியின் வரலாற்றில் 35 கோடி ஆண்டுகளைக் கடந்து அது நிற்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு அடுக்கு, அதன்மீது இன்னொரு அடுக்கு என்று பல வண்ண அடுக்குகளோடு அது கடல் அலைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கிறது.

ireland country 350 million years in one picture

லோயர் கார்போனிஃபெரஸ் அல்லது நிலக்கரியாக பூமியின் வனங்கள் புதைவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது இது என்று புவியியலாளர் மதிப்பிட்டுள்ளனர்.

 

இந்தக் காலகட்டத்தில் இன்றைய அயர்லாந்து நாடு உயரமான பகுதியாக இருந்தது என்கிறார்கள். இந்த துன் பிரிஸ்டே எனப்படும் அடுக்குப்பாறை முதலில் அயர்லாந்து கடற்கரையோடு நிலப்பகுதியுடன் ஒட்டியே இருந்தது. 1393- ஆம் ஆண்டு வாக்கில்தான் இந்த அடுக்குப்பாறையை நிலப்பகுதியிலிருந்து கடல் பிரித்தது. இதன் உச்சியில் வசித்த மக்கள் கப்பலில் இருந்து கயிறுகள் மூலம் மீட்கப்பட்டனர். 

ireland country 350 million years in one picture


ஆனால், உள்ளூர் நாட்டுப்புற கதைகளோ வேறுவிதமாக சொல்கிறது. அதாவது, ஒரு மலை மீது வசித்த மக்களுடைய தலைவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்ததாகவும், உடனே, செயின்ட் பேட்ரிக் கோபமடைந்து, அந்த தலைவர் இருந்த பகுதியை பிரித்து கடலுக்குள் கொண்டுபோய் நிறுத்திவிட்டதாக அந்த கதைகள் சொல்கின்றன.

 

முதலில் சொல்லப்படுவதே நம்பக்கூடிய விஷயமாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஹெலிகாப்டரில் சென்ற சில அறிவியலாளர்கள் அந்த அடுக்குப்பாறை மீது இறக்கிவிடப்பட்டனர். காலங்கள் கடந்து அந்தப் பாறை மீது கால் பதித்தவர்கள் அவர்கள்தான். அவர்கள் அங்கு ஒரு இரவு தங்கி ஆய்வு நடத்தினர். அந்த பாறை மீது ஆய்வு நடத்தினார்கள். மத்தியக் காலத்தை சேர்ந்த ஒரு வீட்டின் மிச்சத்தையும், விவசாயம் செய்ததற்கான படிமங்களையும், சோளம் அறைக்கும் கல்லையும் அவர்கள் கண்டனர்.


 

Next Story

ஊக்கத்தொகையை பகிர்ந்தளித்த விஞ்ஞானி வீரமுத்துவேல்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Scientist veeramuthuvel who distributed the incentive

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி (02.10.2023) நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றினார்.

 

இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகிய 9 பேருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார். அதன்படி தான் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி என 4 கல்வி நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகையை சமமாக பிரித்து வழங்கினார். 

 

 

Next Story

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இஸ்ரோ தலைவர் நன்றி

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

ISRO chief thanked Chief Minister M.K.Stalin

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா கடந்த 2 ஆம் தேதி (02.10.2023) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றி இருந்தார்.

 

இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகியோர் தமிழக அரசு சார்பில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில் “விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் ஒன்பது பேரும் தங்களது உழைப்புக்கான அங்கீகாரமாகக் கருதி இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், “7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் உதவித்தொகை வழங்கப்படும்” எனவும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடத்தியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சென்னையில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சந்திராயன் உள்ளிட்ட திட்டங்களுக்கு பங்களித்த தமிழக விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறினேன். சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காக குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளத்தை அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.