Skip to main content

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வரத்தான் செய்யும்..! அதற்காக அரசை குறை சொல்வதா..? - ராஜீவ்காந்தி பேட்டி!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

ghj

 

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுவருகிறது. எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தொடங்கிய இந்த ரெய்டு, வேலுமணி, வீரமணி என்று தொடந்து நடைபெற்ற நிலையில், தற்போது சி. விஜயபாஸ்கர் வரை தொடர்கிறது. அரசியலில் இருப்பவர்கள் தொழில் செய்யக் கூடாதா? பணம் சம்பாதித்தாலே அனைவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று கூறுவது நியாயமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை திமுகவின் ராஜீவ் காந்தியிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தம். நம்முறைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

திமுகவின் இந்த ஐந்து மாத கால ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள், சிறப்பாக செயல்படுகிறது என்று உங்கள் கட்சியினர் கூறுவதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்களா?

 

திமுகவின் இந்த ஆட்சியை மக்களுக்கான ஆட்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். திமுகவுக்கு வருவதற்கு முன்பு எத்தனையோ முறை திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்களை நாம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறோம். அப்போதும் சரி, இப்போதும் சரி நாம் மேடையில் பேசுவது எல்லாம் சரி என்ற மனநிலையில் நான் எப்போதும் இருப்பதில்லை. அது ஏற்படுத்துகின்ற தாக்கம், மக்களின் மனநிலைகளுக்கு ஏற்ப அதில் மாற்றம் தேவைப்பட்டால் என்னை மாற்றிக்கொள்ள நான் எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறேன். அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் சோதித்து மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை. பாஜக போன்ற மதவெறி இயக்கங்களைத் தத்துவார்த்த ரீதியாக எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கம் தற்போதைக்குத் தேவை. எனவே மக்கள் நலன் சார்ந்தும், பாசிச சக்திகளுக்கு எதிராகவும் தற்போது திமுக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. 

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக விமர்சனம் செய்துள்ளதைப் பற்றி? 

 

அரசியலில் ஈடுபடுபவர்கள் தொழில் செய்யக் கூடாது என்ற எந்த சட்டமும் இல்லை. எல்லா வகையான தொழிலும் செய்யலாம். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான வழிமுறைகளில் செய்ய வேண்டும். நான் ஒரு அரசியல்வாதி, நான் வக்கீல் தொழில் செய்கிறேன். எனக்கு கிடைக்கும் ஊதியத்தில் நான் முறையாக வருமான வரி கட்ட வேண்டும். அதுதான் இந்திய அரசியலமைப்பு வகுத்துள்ள சட்டத்திட்டம். எனக்கு ஒருவர் வழக்கிற்காக 2 கோடி பணம் தருவதாக கூறினால், அந்தப் பணத்திற்கு நான் முழுமையான வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். விஜயபாஸ்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருடைய வருமானம் 6 கோடி என்று காட்டியுள்ளார். அதற்காக வருமான வரியும் முறையாக கட்டியுள்ளார். அடுத்தமுறை தேர்தலில் போட்டியிடும்போது அவர் தனக்கு சொத்து மதிப்பு 56 கோடி எனக் கூறி, அதற்கான வருமான வரியைக் காட்டியுள்ளார்.

 

இவர் அமைச்சராவதற்கு முன்பு தொழில் செய்திருக்கலாம், அதன் மூலம் வருமானம் பார்த்திருக்கலாம். ஆனால் அமைச்சராக இருந்த அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் இவர் வருமானம் தரும் எந்த தொழிலையும் செய்யக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இப்படி இருக்கையில், அவர் இந்த அளவு சொத்துக்கு வருமானவரி கட்டியிருந்தாலும் சொத்து எப்படி வந்தது என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கு வரும். அந்த வகையில், இந்த சொத்துக்கள் அனைத்தும் பினாமிகள் மூலம் பெறப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில் அனைத்து தகவல்களும் நிச்சயம் வெளிவரும். வீரமணியிடம் 200 மடங்கு, வேலுமணியிடம் 300 என்று வருமானம் எப்படி அதிகரித்தது என்ற சந்தேகம் இயல்பாகவே அனைவருக்கும் வரும். எல்லாமே பினாமிகள் மூலம் வாங்கப்பட்ட  சொத்துக்கள்தான்.  

 

இதை எப்படி கண்டுகொள்ளாமல் ஒரு மக்கள் அரசு செயல்படும். புகாருக்குள்ளாகும் அனைவரும் இந்த சோதனையில் சிக்குவார்கள். அரசியலில் தனிப்பட்ட நேர்மை மிக முக்கியம். இல்லை என்றால் கடுமையான நெருக்கடியை நாமே சந்திக்க வேண்டிவரும். அமைச்சராக இருப்பவர் தொழில் செய்யக் கூடாது, ஆனால் அவரின் வருமானம் மட்டும் 100 மடங்குகளில் அதிகரித்தால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்வோம். இதில் அதிமுக தலைமை குற்றம் சொல்வதற்கு இடமில்லை. விஜயபாஸ்கருக்கு கூடுதலாக வந்த 28 கோடி பணத்துக்கு அவர் முறையாக கணக்கு காட்ட வேண்டும். ஆனால் அவரால் கணக்கு காட்ட முடியில்லை. சொத்து சேர்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வரத்தான் செய்யும். அதற்காக அரசைக் குறை சொல்வதை எப்படி புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. 

 

 

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.