Skip to main content

குப்பை மேட்டில் கோல்ஃப் மைதானம்! அசத்திக் காட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

நவீன உலகம் எதிர்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றுதான் குப்பைமேடுகள். வானுயர மலைபோல குவிக்கப்பட்டிருக்கும் இந்தக் குப்பைகளால் ஏகப்பட்ட பிரச்சனைகளைப் பொதுமக்கள் சந்திக்கின்றனர். திடீரென்று அவற்றில் தீப்பற்றிக் கொள்வதால் காற்று மாசு, சுகாதாரக்கேடுகள் உள்ளிட்ட ஏராளமான அசவுகரியங்களை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். 
 

Asheesh


 

 

 

இந்தக் குப்பைமேடுகளை அகற்றுவது குறித்தான தொலைநோக்குத் திட்டங்கள் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், நூறு ஏக்கர் பரப்பளவில் இருந்த 13 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை வெறும் ஆறே மாதங்களில் அகற்றி, அதில் கோல்ஃப் மைதானம் அமைக்கும் பணியிலும் இறங்கியிருக்கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். 
 

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் கடந்த ஆண்டு மே மாதம் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றவர் அஷீஷ் சிங். இவர் பொறுப்பேற்கும் முன்புவரை அந்தப் பகுதியில் குவிக்கப்படும் திடக்கழிவு மேடுகளை அகற்ற தனியார் நிறுவனங்களிடம்தான் காண்ட்ராக்ட் விடப்பட்டிருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடந்துவந்த இந்தப் பணியில் வெறும் 2 லட்சம் மெட்ரிக் டன் குப்பையை மட்டும் அந்த நிறுவனங்கள் அகற்றியிருக்கின்றன. முறையான திட்டமிடல் இல்லாமல் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை அறிந்த அஷீஷ் சிங், தானே முழுமையான கவனம் செலுத்தி முழுவீச்சில் இந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார். 
 

இதற்காக, பயோ-ரெமெடியேசன் எனப்படும் உயிரி மாற்று முறையைப் பயன்படுத்தி இருக்கிறார் அஷீஷ். அதாவது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து அவற்றுக்கான ஆலைகளுக்கு அனுப்பும் முறை. இதன்மூலம், உடனடியாக குப்பைகள் பிரிக்கப்பட்டு, அதன் அளவைக் குறைக்க முடிந்திருக்கிறது. 
 

 

 

அதேபோல், கட்டுமானப் பணிகளின்போது உருவான கழிவுகளை சேகரித்து மீண்டும் அவற்றைக் கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பியும் வைத்துள்ளனர். இப்படியாக மே மாதம் தொடங்கிய இந்தப்பணி கடந்த டிசம்பர் 05ஆம் தேதியே நிறைவடைந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்ட தனியார் காண்ட்ராக்ட் நிறுவனங்கள் ரூ.65 கோடிக்கும் மேல் கூலியாக வாங்கியிருக்க, ஆறு மாதங்களில் ரூ.10கோடிக்கும் குறைவான செலவிலேயே ஒட்டுமொத்த பணிகளையும் நிறைவுசெய்து நிதி மேலாண்மையில் அசத்தியிருக்கிறார் அஷீஷ். இந்தப் பணியில் முழு ஒத்துழைப்பு தந்த தனது குழுவுக்கும் அவர் நன்றி கூறியிருக்கிறார். 
 

சுமார் ரூ.400 கோடி மதிப்புள்ள இந்த நிலத்திலிருந்த குப்பைக் குவியலை அகற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் கோல்ஃப் மைதானத்தை அமைக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார் அஷீஷ். அரசுத் துறை அதிகாரிகளும், அரசு நிறுவனங்களும் நினைத்தால் நல்ல செயல்கள் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதற்கு உதாரணம் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷீஷ் சிங். திடக்கழிவு மேலாண்மையில் மைல்கல்லாக இருக்கும் இந்த சாதனையை இந்தியா முழுமைக்கும் கடைபிடிக்கலாமே!
 

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர்.