Skip to main content

போதை நெட்வொர்க்கில் நட்சத்திரங்கள்! சிக்கும் தமிழக பிரபலங்கள்! பிரபலமானவரின் தலைமையில் பெரும் பட்டாளமே இருப்பதால் பரபரப்பு!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
Sushant Singh Rajput

 

 

நடிகர்களின் போதை மருந்து விவகாரம் பாலிவுட் எனப்படும் மும்பை பட உலகம் தொடங்கி சாண்டல்வுட் எனப்படும் கர்நாடக திரையுலகம் வரை கடுமையாக தாக்கியிருக்கிறது. தற்பொழுது மல்லுவுட் எனப்படும் கேரள திரையுலகில் மையம் கொண்டுள்ள அந்த புயல், தமிழக திரையுலகமான கோலிவுட்டை தாக்கும் என போதை தடுப்பு வட்டார வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணம், பீகார்காரரான அவருக்கு மும்பை படவுலகம் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை என முதலில் சொல்லப்பட்டது. அத்துடன், பாலிவுட்டில் நிலவி வரும் போதைப்பொருள் பழக்கம்தான் அவரை மரணத்திற்கு தள்ளியது என்றும், இந்த போதைப்பொருள் நெட்வொர்க் சிவசேனா ஆட்சியில் வெகுவேகமாக பரவி வருகிறது எனவும், பால்தாக்கரேவின் பேரனான ஆதித்யா தாக்கரேதான் இந்த போதைப்பொருள் கும்பலின் பின்னணியாக செயல்படுகிறார் எனவும் நடிகை கங்கனா ரணாவத் தனது பல ட்வீட்களிலும் பேட்டிகளிலும் சொல்லி வந்தார்.

 

சுஷாந்த் சிங்கின் மரணத்தை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற ஏஜென்சிகள் விசாரித்து வந்தன. மோடி ஆதரவாளரான கங்கனா ரணாவத்தின் வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புத்துறை என்கிற மத்திய அரசு நிறுவனமும் களத்தில் குதித்தது. சுஷாந்த் சிங் காதலியான ரியா சக்கரவர்த்தியை, அவர் சுஷாந்த் சிங்கிற்கு கஞ்சா வாங்கிக்கொடுத்தார் என கைது செய்தது.

 

மாநிலத்தை ஆட்சி செய்யும் சிவசேனாவுக்கு எதிராக கங்கனா ரணாவத் பேசியதால் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், ஸ்டூடியோ இடிப்பு என சிவசேனா களத்தில் இறங்கியது. இப்படி பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் விவகாரம், இந்திரஜித் லங்கேஷ் மூலம் கர்நாடக படவுலகிற்குள் நுழைந்தது. இவர், இந்துத்வா கும்பலால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் சகோதரர். அவர், கன்னட சினிமா உலகில் சுமார் 15 பேர் போதைப்பொருட்களை உபயோகிக்கிறார்கள் என வெளிப்படையாக அறிவித்ததுடன், காவல்துறையிலும் புகார் செய்தார். அவரிடம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஐந்து மணி நேரம் விசாரித்தனர்.

 

 

sss

 

இதுபற்றி இந்திரஜித் லங்கேஷை தொடர்பு கொண்டு பேசினோம். "மரீஜூவானா எனப்படும் கஞ்சா, அமெரிக்காவில் எட்டு மாகாணங்களில் மருந்து பொருள் போல உபயோகிக்கப்படுகிறது. அந்த போதை அப்படியே இந்தியாவிற்குள் வந்துவிட்டது. ஃபேஷன் மற்றும் சினிமா ஆகிய துறைகளில் ஈடுபடுபவர்கள் மத்தியில் கஞ்சா புகைப்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது. கஞ்சா மட்டு மல்ல ஓ.பி.எம்., எல்.எஸ்.பி., எம்.டி.எல் .எஸ்.டி., பிரவுன்சுகர் என 200 வகை போதை மருந்துகள் திரையுலகத்தின ரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனித்தனி நெட்வொர்க்குகள் இருக்கின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் இந்த போதைப்பொருட்களை திரையுலகத்தினர் அவர்கள் கையில் அதிகமாக காசு புழங்குவதால் பயன்படுத்துகின்றனர்.

 

திரையுலகத்தினர் நடத்தும் பார்ட்டிகளில் தவறாமல் போதைப் பொருட்கள் இடம்பெறுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தாத நடிகர்களை உடல் ரீதியாக பலமில்லாதவர்கள் என நினைக்கும்போக்கு திரையுலகில் நடக்கிறது. எனக்கு தெரிந்து கன்னடத் திரையுலகில் 15 பேர் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அதுபற்றி நான் போலீசாரிடம் தெரிவித்தேன்'' என்றார்.

 

 

sss

 

இந்திரஜித் லங்கேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்த பிறகு, பா.ஜ.க.வுக்கு மிக நெருக்கமான ராகினி திவேதி என்கிற நடிகை கைது செய்யப்பட்டார். சங்கர் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ராகுல் ஷெட்டி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் "டார்லிங்' என்கிற தமிழ்ப்பட கதாநாயகியான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டார்.

 

இந்த இரண்டு நடிகைகளும் கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணம், அனுப் மற்றும் அங்கிதா என்கிற ஜோடிதான். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தலூம் பெப்பர் சாண்டி என்கிற நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து கடத்திக்கொண்டு வரும் போதைப் பொருட்களை அனுப் மற்றும் அங்கிதா, ராகுல் ஷெட்டி மற்றும் சங்கர் மூலம் ராகிணிக்கும், சஞ்சனா கல்ராணிக்கும் கொடுத்தார்கள். இதுவரை இரண்டு நடிகைகள் உள்பட 19 பேரை கைது செய்த பெங்களூரு மாநகர போலீசார். அங்கிதா- அனுப் ஜோடி கர்நாடகாவில் மட்டும் போதைப் பொருட்களை சப்ளை செய்யவில்லை. கேரளாவிலும் அவர்களது திருவிளையாடல்கள் தொடர்ந்ததை மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை கண்டுபிடித்தது. கேரள உள்துறை அமைச்சரான கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் தினேஷ் கொடியேறிக்கும் அனுப்புக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. தினேஷ் கொடியேறி, அனுப்பின் வங்கிக் கணக்கில் ஆறு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தார். அவரை மத்திய போதை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த அனுப்புக்கும் தங்க கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது மத்திய அரசு அதிகாரிகளின் விசாரணை புள்ளியாக இருக்கிறது. கேரளாவை ஆளும் கம்யூ னிஸ்ட் அரசுக்கு எதிராக ஏதாவது சிக்காதா என கண்ணில் விளக்கெண்ணை விட்டு ஆராய்ந்து கொண்டிருந்த மத்திய அரசின் அதிகாரிகளுக்கு, காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகிவிட்டது இந்த போதை விவகாரம்.

 

ddd

 

இதுபற்றி மத்திய போதைத்தடுப்பு அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். இந்த போதைப் பொருள் விவகாரம் தமிழக திரையுலகமான கோலிவுட், தெலுக்கு திரையுலகமான டோலிவுட் ஆகியவற்றிற்கும் தொடர்பு இருக்கிறது. போதைப்பொருள் என்பது ஒரு மிகப்பெரிய சர்வதேச வணிகம். ஓ.பி.எம் என்கிற போதைப் பொருளை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வருவதுதான் தாலிபான்களின் தொழில். விலை உயர்ந்த துப்பாக்கிகளை வாங்குவதற்கு உலகில் இயங்கும் பல்வேறு தீவிரவாத குழுக்கள் போதைப்பொருட்களை கடத்துவதைத்தான் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன. ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் போதைப்பொருள் கடத்தலுக்கு சரியான மார்க்கெட் இருக்கிறது.

 

ddd

 

இந்தியாவில் இந்த போதைப் பொருட்களின் தலைநகராக இருப்பது கோவா மாநிலம். அங்கிருந்து மும்பைக்குள் நுழைந்து மேற்கு கடற்கரை ஓரமாக கர்நாடகா, கேரளா என கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. பல சமயங்களில் அவை சாலை மார்க்கமாக ஆந்திரா, தமிழ்நாடு போன்றவற்றை வந்தடைகிறது. இதுவரை சுற்றியுள்ள சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தினேஷ் கொடியேறி போன்ற வலுவான அரசியல்வாதிகளின் பிள்ளைகள் ஆகியோரின் நெட்வொர்க்கை ஆராய்ந்ததில் தமிழகமும் அந்த போதைக்கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கில் இருக்கிறது. சென்னையில் குறிப்பாக கல்லூரி மாணவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் இந்த போதை வளையத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

 

dd

ஒரு பாடலாசிரியரின் இரண்டு மகன்கள் தமிழ் சினிமாவில் டைரக்டராகவும், நகைச்சுவை நடிகராகவும் இருக்கிறார்கள். அவர்கள் தலைமையில் பெண்கள் பட்டாளமே தமிழ் சினிமாவில் இந்த போதைப் பழக்கதிற்கு அடிமையாக இருக்கிறது. அஷ்டவதானி எனப் பெயர் பெற்றவரின் மகன் போதைக்காக அடிக்கடி லண்டன் சென்று வருகிறார். பிரபலமான ஒரு இளம் இசையமைப்பாளர் இந்த போதைக்கும்பலின் தொடர்பில் உள்ளார். இவையெல்லாம் ஆரம்பக்கட்ட தகவல்கள்.

 

இந்த போதைக் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளிகளான அனுப் மற்றும் அங்கிதா ஆகியோரை தீவிரமாக விசாரித்து வருகிறோம். அவர்கள் வரும் நாட்களில் தமிழ் திரையுலகமான கோலிவுட் பற்றியும் தெலுங்கு திரையுலகமான டோலிவுட் பற்றியும் மலையாள திரையுலகமான மல்லுவுட் பற்றியும் வாய் திறப்பார்கள். அதன்பிறகு நாங்கள் தமிழகத்திலும் ஆந்திராவிலும் கேரளாவிலும் பாய்வோம். இந்தி திரையுலகத்திலும் இதுவரை சிக்காத புள்ளிகளையும் கங்கனா ரணாவத் சொன்னதன் அடிப்படையில் கைது செய்வோம். இந்தியா முழுவதும் இந்த போதைக் கடத்தல் கும்பல்கள்தான் தங்கக் கடத்தல் கும்பலைப்போல தீவிரவாதத்தை வளர்த்து வருகின்றன. இதை நாங்கள் நிச்சயமாக முறியடிப்போம் என்கிறார்கள்.

 

 

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார். 

Next Story

“நதிநீர் பிரச்சனையில் காங்கிரஸ் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும்” - செல்வப்பெருந்தகை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Congress will support TN govt in river water problem says Selvaperunthagai

தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பின்னர் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை சர்தார் வேதாரத்தினம் பிள்ளையின் பேரன், வேதரத்தினப் பிள்ளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஆறுமுகம், தண்டியாத்திரை குழு தலைவர் சக்தி செல்வ கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு தலைவர்கள்  சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்.ரெக்ஸ், திருச்சி கலை, மாநிலத் துணைத் தலைவர் சுப.சோமு, மாநில பொதுச் செயலாளர்கள், வக்கீல்கள் சரவணன், இளங்கோ, தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு சரியான பாதுகாப்பு இந்த பாஜக ஆட்சியில் இல்லை.  இதுதான் பத்தாண்டு காலம் பாஜகவின் லட்சனமாகும். உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றி பிரதமர் மோடி, அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களைப் பற்றி மோடியும், தமிழக பாஜக தலைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்தப் பார்க்கிறது. இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் இன துரோகி தமிழக பாஜக தலைவர்தான். கர்நாடக எம்.பி தமிழர்களை பற்றி பேசும் பொழுது அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்? தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ  அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும், காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு, காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்தப் பாராளுமன்றத் தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும்”என்றார்.