Skip to main content

இந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்! 

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலகத்தை நாசமாக்கி வரும் கரோனா தொற்று இந்தியாவில் தென்படத் தொடங்கிய நிலையிலேயே, 5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பை இந்தியா எதிர்கொள்ளத் தொடங்கியது. அதேபோல், பங்குச் சந்தையும் கடுமையான சரிவைச் சந்தித்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால், அரசுக்குக் கிடைக்கும் வருவாயிலும் கணிசமான இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், 21 நாள் முடக்கத்தை ஏழை-எளிய மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியுடன், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம், பத்து அம்சத் திட்டத்தை மத்திய அரசுக்கு ஆலோசனையாக வழங்கி இருந்தார். அதில், கிஷான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியை ரூ.12 ஆயிரமாக உயர்த்தவேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும்.

 

bjp



ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கவேண்டும். அனைத்து வார்டுகளிலும் பிரத்யேக பதிவு அலுவலகங்கள் திறந்து, உடனடியாக ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். எல்லா வகையான வரிகளையும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான காலத்தை ஜூன் 30ந்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கியிருந்தன.

ஏற்கனவே, எந்த வங்கிக்கிளையின் ஏ.டி. எம்.மில் பணம் எடுத்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, வருமான வரித்தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் மார்ச் 31ந்தேதியில் இருந்து ஜூன் 30ந்தேதியாக மாற்றம் என நிதியமைச்சர் நிர்மலா கீதாராமன் அறிவித்திருந்த நிலையில், ப.சிதம்பரத்தின் இந்த ஆலோசனைப் பட்டியல் சாமான்ய மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை வலுப்படுத்தியது.

மார்ச் 26ந் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கரோனா தொற்று ஏற்பட்டு நாடே முடங்கியிருக்கும் நிலையில், ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1லட்சத்து 70 ஆயிரம் கோடியை நிதியாக ஒதுக்குவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2 ஆயிரம். மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் இரண்டு தவணைகளாக தலா ஆயிரம் ரூபாய். மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தில் இருந்து, ரூ. 2 ஆயிரம் உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படும் எனத் தொடங்கி பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. பெண்கள், முதியோர், விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் சார்ந்த குறைந்தபட்ச உதவியாக இது அமைந்தது. பி.எஃப் திட்டத்திலும் ஒரு சில உதவிகளை செய்ய முன்வந்துள்ளது மத்திய அரசு.


நாடு முழுவதும் ஊரடங்கு என்பதால் உணவு அடிப்படைத் தேவையாக உள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். கரோனா தொற்று சமயத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட திட்டங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருந்தன.

 

 

rbi governor



அதேசமயம், இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை, வங்கிக் கடன் தவணை உள்ளிட்டவற்றைப் பற்றி நிர்மலா கீதாராமன் தனது அறிவிப்பில் வாய்திறக்கவில்லை. மாதாந்திர வருமானம் ஈட்டுவோருக்கு இதனால் சிக்கல் இல்லையென்றாலும், அன்றாட வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள் இன்னலுக்கு ஆவார்கள் என்றே பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். மேலும், வங்கிகள் வட்டி வசூலிக்கத் தடை என்ற மத்திய அரசின் உத்தரவை, தன்னாட்சி அமைப்பான ஆர்.பி.ஐ. உறுதி செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போல், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரெப்போ விகிதத்தை 0.7 சதவீதம் குறைத்து அறிவித்திருப்பதன் மூலம் கடன்களுக்கான வட்டி ரத்தாகாமல் குறைய மட்டுமே வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல், வங்கித் தவணைகளை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவை பலரும் வரவேற்கின்றனர்.


இந்நிலையில், மோடி அரசின் முதற்கட்ட செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் பாராட்டியுள்ளபோது, கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான மத்திய அரசின் திட்டத்தை கவனத்துடன் வரவேற்பதாக ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் அறிவிப்புகளில் சில நான் அறிவித்த 10 அம்சத் திட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், வரி செலுத்துவதற்கான கெடு, ஜி.எஸ்.டி. வரியைக் குறைப்பது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. இதுவொரு அடக்கமான திட்டம். நிச்சயம் இது போதவே போதாது என்பதை அரசு கூடிய விரைவில் உணரும் என்று அவர் நிதியமைச்சரின் அறிவிப்பை விமர்சித்துள்ளார்.

இன்னொருபுறம், மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மதிப்பீட்டளவில் ரூ.1.7 லட்சம் கோடி என்று இருந்தாலும், மாநிலங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை செய்யாமல் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக பல லட்சம் மக்களுக்கு பலன்தராமல் போகக்கூடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


-ச.ப.மதிவாணன்

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.