Skip to main content

இரு நாடுகளும் படைகளைக் குவித்தது ஏன்? சீனாவின் ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது ஏன்? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

bjp

 

இந்திய மண்ணிற்குள் ஒருவரும் ஊடுருவவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு தூண்களில் ஒரு தூணையும் யாரும் கைப்பற்றவில்லை என்று உறுதியளிக்கிறார் பிரதமர் மோடி. ஊடுருவவில்லை என்றால் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தது ஏன்? சண்டை நடந்தது ஏன்? 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? சீனாவுக்கு நமது பிரதமர் நற்சான்றிதழ் கொடுக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

 

என்னதான் நடக்கிறது இந்திய-சீன எல்லையில்?

 

சீனாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருக்கக்கூடிய வடக்குப்பகுதி ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கர்னல் இ.ஜெ.சான்டிஸ் கூறுகையில், (பிரதமர் சொல்லியிருப்பது) "இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. அவருடைய கணக்கின் அடிப்படையில் சீனர்கள் தங்களது எல்லையைத் தாண்டி வரவில்லை. அப்படியென்றால் சீன ராணுவம் 1962ஆம் ஆண்டு நடந்த போரில் ஏற்பட்ட இழப்பை திரும்ப கைப்பற்றியிருக்கிறார்கள் என பிரதமர் சொல்கிறாரா எனக் கேட்டுள்ளார். லடாக் பகுதியில் லெப்டினட் ஜெனரலாக வேலை பார்த்த பிரகாஷ்மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடக் கடவுளே... இந்திய பகுதியை ஆக்கிரமிக்க வில்லை என சீன ராணுவம் கூறுகிறது. அதையே தான் மோடியும் சொல்கிறார். இது விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய தேசத் துரோகம் என்கிறார்.

 

congress

 

இவர்கள் மட்டுமல்ல அந்தப் பகுதியில் வேலை செய்த எட்டு ஜெனரல்கள் இந்தியாவின் பகுதிகளை சீனா சமீபத்தில் நடந்த போரில் ஆக்கிரமித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். ஜெனரல் நரசிம்மன், வி.பி.மாலிக், பனாக், சதீஷ்நம்பியார், குல்கர்னி, மேஜர் டி.பி.சிங், தமிழரான சிவசங்கர், தங்கராஜ், அம்புராஜ், ரமேஷ்ராய் போன்றவர்கள் மோடி சொல்வது பொய்யென சொல்லி அதிர வைத்திருக்கிறார்கள்.

 

லண்டனில் இருந்து வரும் டெலிகிராப் பத்திரிகை, அதனுடைய டெல்லி நிருபர் ஜோவேலஸ், பெய்ஜிங் நிருபர் சோபியாயான், இஸ்லாமாபாத் நிருபர் பென் பார்மர் ஆகியோர் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஜூன் 12ஆம் தேதி எழுதப்பட்ட கட்டுரையில், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்தியப் பகுதிகளில் 60 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. அந்தப் பகுதிகளில் 12 ஆயிரம் போர் வீரர்களை நிறுத்தி யிருக்கிறது எனத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

 

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள லடாக் பகுதியில் 1962ஆம் ஆண்டு நடந்த போரில் பல பகுதிகளை இந்தியா சீனாவிடம் பறிகொடுத்தது. அவற்றை 1967ஆம் ஆண்டு நடந்த போரில் மறுபடியும் கைப்பற்றியது. 2013ஆம் ஆண்டு முதல் இந்தியா அந்தப் பகுதியில் சாலைகள் அமைக்க தொடங்கியது. அதே நேரத்தில் சீனாவும் அந்தப் பகுதியில் சாலைகள் அமைக்க தொடங்கியுள்ளது. பனகவ் என்கிற சர்வதேச சுற்றுலா தலமான ஏரியைச் சுற்றி அமைந்துள்ள இந்தியா 262 கி.மீ. சாலை அமைத்துள்ளது. ஆனால் சீனா அந்தப் பகுதியில் 600 கி.மீ. சாலை அமைத்து, படைகளை விரைந்து நிறுத்தும் வலிமை பெற்றுள்ளது.

 

நரேந்திர மோடி பதவிக்கு வந்தவுடன் சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்தது. திபெத் விவகாரம், ஹாங்காங் போராட்டம் எதிலும் சீனாவை இந்தியா எதிர்க்கவில்லை. ஆனால் பாகிஸ்தானைச் சார்ந்த தீவிரவாதியான மசூத் அசாரை கைது செய்யச் சொல்லிய இந்தியாவின் நடவடிக்கைகளை சீனா எதிர்த்தது. அத்துடன், சீனா லடாக் பகுதியில் இந்திய நிலங்களில் கால் வைத்து முன்னேறிக்கொண்டே இருந்தது. 60 ச.கி.மீ. இந்தியப் பகுதிகளைச் சீனா பிடித்துவிட்டது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டப் பிறகுதான் இந்தியா அதை எதிர்க்கத் துணிந்தது. அப்போது கூட பாகிஸ்தான் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவில்லை.

 

twit

 

ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த 15ஆம் தேதி கைகளாலும் இரும்பு ராடுகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அதில் இருபது இந்திய வீரர்கள் இறந்து போனார்கள். பலர் சீன ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் லெப்டினல் கர்னல் அந்தஸ்து கொண்ட அதிகாரி. ஒருவர் மேஜர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி. அவர்களை விடுவித்த சீனா, பனகங் ஏரி எங்களுடைய ஏரி என்கிறது. இந்திய பிரதமர் இந்திய பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்கிறார். இதில் எது உண்மை? எனக் கேள்வி கேட்கிறார்கள் ராணுவத்துறை யைச் சார்ந்த வல்லுனர்கள்.

 

http://onelink.to/nknapp

 

இதைப்பற்றி நம்மிடம் பேசிய டெல்லியைச் சார்ந்த பத்திரிகையாளரும் டிஃபன்ஸ் துறையில் பல கட்டுரைகளை எழுதியவருமான மேத்யூஸ் சாமுவேல், "இந்தியா ஒரு பலத்த இழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது ஏதோ இந்த மாதம் நடந்த சம்பவமல்ல. சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி மோடி அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது கவலைக்குரிய விசயம்'' என்கிறார்.


 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.