Skip to main content

யாரை வேண்டுமானாலும் சோதனை பண்ணலாமா?  வருமான வரி சோதனை விதிமுறைகள்...

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
it raid

 

 
 
நேற்று தமிழகத்தின் பரபரப்பு,   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் போலிஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரி துறை சோதனை  நடந்திருப்பது தான். இதற்கு காரணம் குட்கா வழக்கு. பொதுவாகவே வருமானவரி சோதனைகள்  மத்தியில்  ஆளுபவர்கள் கைகாட்டும் இடத்திலேயே நடக்கும். சோதனை செய்யப்படுபவர்கள் தூயவர்கள் இல்லையென்றாலும் அவர்கள் சோதனை செய்யப்படும் நேரம்தான் சந்தேகத்தை கிளப்புகிறது. ஹெச்.ராஜாவை விமர்சித்ததும் விஷால் அலுவலகத்தில் சோதனை, எடப்பாடி அணிக்கு எதிரான தினகரன் உறவினர்கள் அலுவலகத்தில் சோதனை  என...    ஒருவரை மிரட்டவும், எதிர்ப்பவரை அடக்கவுமே இந்த வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் எங்கும், எப்போது வேண்டுமானாலும் சோதனை மேற்கொள்ள உரிமையுள்ள  வருமானவரி  துறை,  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பவர்கள் யாராக இருந்தாலும்  எவ்வித பாரபட்சமும் இல்லாமல் சோதனை நடத்த வேண்டும். ஒரு வருமான வரி துறை சோதனை எப்படி ஆரம்பித்து, எப்படி முடியும் படிப்படியாக இதோ.
 

 

 

 
ஒரு முழுமையான ஆவண தயாரிப்பு மற்றும் குழு தயாரிப்புக்குப்பின் குறித்த இடங்கள் அனைத்திற்கும்  ஒரே நேரத்தில் அதிகாரிகள் செல்வர். முதலில் தங்களை குறித்த விளக்கங்கங்களை கூறி தெளிவுபடுத்திக்கொள்வர். பின் அந்த இடத்தில் தேவையான மருத்துவ சேவையை தயார்படுத்திக்கொள்வர். அலைபேசி, தொலைபேசி என அனைத்து தகவல்தொடர்பு சாதனங்களையும் துண்டித்துவிட்டு சோதனையிட தொடங்குவர். ரொக்கம், நகை, பத்திரங்கள், தாள்கள் ஆகியவற்றை சோதனையிட்டு அங்கிருப்பவர்களின் வாக்குமூலங்கள் மற்றும்  சரியான ஆவணங்கள், ஆவணங்கள்  இல்லாத  ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிடுவர். நீதிமன்றம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். 
 
 

 

 

 
வருமான வரி துறை சோதனை தொடங்குவது  சூரியன் உதித்த பின்னர் தான்  நடக்க வேண்டுமென்பது விதி. வருமான வரி துறை அதிகாரிகள் நம்மை சோதனை செய்வதற்கு முன், சோதனை செய்யப்படுபவர்கள்  அவர்களின்  வாரண்ட் மற்றும் அது சார்ந்த வெரிஃபிகேஷன்'  ஆவணம் ஆகியவைகளில் உள்ள நாள், இடம் ஆகியவற்றையும், அடையாள அட்டைகளையும் சோதனை செய்ய உரிமை உண்டு. அதில் ஏதும் சந்தேகமிருப்பின் வருமான வரி துறைக்கு தொடர்புகொண்டு விசாரித்துக்கொள்ளலாம். அதன்பின் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் எவ்வித தயக்கமுமின்றி வழங்க வேண்டும். தனக்கு தேவையான உணவை தேவையான நேரத்திற்கு வழங்கவும், சோதனை நடக்கும் இடத்திற்குள்ளேயே உலாவவும், ஆவணங்கள் குறித்து விளக்கம் தரவும், பெண்களை பெண் அதிகாரிகளை கொண்டு விசாரிக்க சொல்லவும், புத்தகப்பையின் சோதனைக்குப்பின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்பதெல்லாம் வருமான வரி சோதனையின் விதிமுறைகள்.  உங்கள் பட்டய கணக்காளர்(C.A), வழக்குரைஞர்கள் ஆகியவர்களை அழைக்கலாம். இதுபோன்ற இன்னும்  சில விஷயங்களும்  நமது உரிமைகள்.
 
 
கணக்கில் வராத சொத்துக்களாக இருந்தாலும் 250கிராம் தங்கம் திருமணமாகிய பெண்ணும், 150 கிராம் திருமணமாகாத பெண்ணும், 100 கிராம் ஆணும் வைத்துக்கொள்ளலாம். அசையா சொத்துக்கள், விளக்கமளிக்கப்பட்ட பணம், வியாபாரத்திற்காக வாங்கப்பட்ட பொருட்கள், கணக்கில் உள்ள சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்படக்கூடாது. 
 

 

 

 
எல்லா வருமான வரி சோதனைகளுமே யாரோ ஒரு மூன்றாம் நபர் கொடுக்கும் தகவல் மூலமே நடக்கிறது. அந்த மூன்றாம் நபராக  பெரும்பாலும் மத்திய அரசே  உள்ளது.
 
 
 
 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Income Tax officials conducted a surprise raid at the office of a DMK official

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.அசோகன். வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டி.பி.கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.  

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு சுமார் 9:43 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரிண்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், 'முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்' என கூறினார்.

Next Story

மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐ.டி சோதனை

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
IT audit at pharmaceutical company owner's home

சென்னையில் இன்று பல இடங்களில் வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கேகே நகர் 80-வது தெரு ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை யானைக்கவுனியில் லால் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கவர்லால் கம்பெனி என்ற மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரான லாலின் வீடுகளில், அலுவலகங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு லாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.