Skip to main content

சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
IG Eswaramoorthy




தமிழக உளவுத்துறை தலைவராக ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தியை நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் உள்துறை செயலர் பிரபாகர்! 
 


உளவுத்துறை தலைவராக இருக்கும் ஐ.ஜி.சத்தியமூர்த்தி, நாளை 31-ந் தேதியோடு ஓய்வு பெறுகிறார். உளவுத்துறையின் புதிய தலைவராக ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஐ.ஜி.க்கள் சிலரின் பெயர்களை முதல்வர் பரிசீலித்திருக்கிறார் என நக்கீரன் இதழிலும், நக்கீரன் இணையத்தளத்திலும் பதிவு செய்திருக்கிறோம். இந்தநிலையில், உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் ஈஸ்வரமூர்த்தி! தற்போது அவர் பதவி வகிக்கும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் பொறுப்பையும் கவனிப்பார்.

 

கடந்த 2000-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக அந்தஸ்து பெற்றார்  ஈஸ்வரமூர்த்தி. சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஈஸ்வரமூர்த்தி, பணியில் மிக நேர்மையானவர். இயல்பாகவும் இனிமையாகவும் பழகக்கூடியவர். எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டதில்லை ஈஸ்வரமூர்த்தி. கசப்பாக இருந்தாலும் உண்மையான தகவல்களை மட்டுமே அரசுக்கு தருவதில் உறுதியாக இருப்பவர்! 
 

கடந்த 22 ஆண்டுகால காவல்துறை பணியில் எந்த சூழலிலும் கான்ட்ராவெர்சியில் சிக்கிக் கொண்டதில்லை இவர். 
 

கடந்த 1998- ல் சிபிஐயில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட இவர், 2000-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அங்கீகாரம் கொடுத்தது மத்திய உள்துறை. 2000 - 2001 ஜூலை வரை எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்பி யாகவும், 2001 ஜூலை முதல் 2003 மே வரை மேற்கு மண்டலம் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக பணிபுரிந்தார் ஈஸ்வரமூர்த்தி. 

 

IG Eswaramoorthy


 

இதனைத் தொடர்ந்து, 2003 மே  முதல் 2003  அக்டோபர் வரை எஸ்.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக மீண்டும் நியமனம். 2003 அக்டோபர்  முதல் 2004 அக்டோபர் வரை 1 வருடம் தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்.பி.யாகவும்,  2004 அக்டோபர் முதல் 2005 செப்டம்பர் வரை  சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவின்  துணை ஆணையராக பணியாற்றினார். மீண்டும் எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக 2005 செப்டம்பர் முதல் 2007 நவம்பர் வரை நியமிக்கப்பட்டார். 
 

இதனைத்தொடர்ந்து, சி.பி.ஐ.க்கு மீண்டும் இவரை அழைத்துக்கொண்டது மத்திய அரசு. அதன்படி, 2007-நவம்பர் முதல் 2012 ஆகஸ்ட் வரை சி.பி.ஐ. யில் எஸ்.பி. (சென்னை) யாகவும் பணியாற்றிய ஈஸ்வரமூர்த்திக்கு டி.ஐ.ஜி. பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2012 நவம்பர் முதல்  2014 ஜூன் வரை சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி.யாக தனது பணியைத் தொடர்ந்தார். அதன் பிறகு 2014-ல்  ஈஸ்வரமூர்த்தியை தமிழக அரசு அழைத்துக்கொண்டது. மாநில பணிக்குத் திரும்பிய ஈஸ்வரமூர்த்தி, 2014 ஜூன் முதல்  2016 டிசம்பர் வரை மாநில உளவுத்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். 2016-ல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, 2016 டிச முதல் 2019 ஜூன்  வரை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவை கவனித்தார். 2019 ஜூன்  முதல் 2020 மே வரை சென்னை  மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பொறுப்பேற்ற ஈஸ்வர மூர்த்தி, தற்போது தமிழக அரசின் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 
 

உளவுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈஸ்வரமூர்த்திக்கு, ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.