Skip to main content

என்னைய மீறி அவளைத் தொட்டுப் பாரு பார்க்கலாம்னு...சாதியக் கொடுமை!

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

"டேய் கனகா... என்னைய கைவிட்ற மாட்டியல்ல...''

""என்ன ப்ரியா பேசறே? நீ என்னோட உசுருடா. எப்பவுமே நான் உங்கூடத்தான் இருப்பேன்

""இல்லடா, எனக்கு உங்க அண்ணன் வினோத்தை நெனச்சாத்தான் பயமா இருக்கு'

"அவனை எங்க அப்பா சமாதானம் பண்ணிருவாரு, நீ பயப்படாதே'' என கடந்த மூன்று நாட்களாக இப்படித்தான் கனகராஜ், அவன் திருமணம் செய்ய ஆசைப்பட்ட தர்ஷினி ப்ரியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

"ஆனால்...' என கனகராஜின் நண்பர்கள் நம்மிடம், "கடந்த செவ்வாய்க்கிழமை சாயங்காலம் 5:15 மணிக்கு கனகராஜின் அண்ணன் வினோத்குமார், கனகராஜும் ப்ரியாவும் தங்கியிருந்த வீட்டிற்குள் போயிருக்கிறான்.

"டேய்... இந்த கீழ்சாதியைச் சேர்ந்தவளை கல்யாணம்பண்ண நினைக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன்... அப்படி அவ கழுத்துல நீ தாலி கட்ட நெனச்சே... இவ கழுத்து மேல தலை இருக்காது'ன்னு சொல்லியிருக்கிறான்.

 

girl



"என்னைய மீறி அவளைத் தொட்டுப் பாரு பார்க்கலாம்'னு கனகராஜ் சொல்லியிருக்கான். சட்டுன்னு முதுகுல சொருகியிருந்த அரிவாளை எடுத்து கனகராஜை... தம்பின்னும் பார்க்காம வெட்டித் தள்ள... தடுக்க வந்த அந்த ப்ரியாவின் தலையிலயும் முகத்துலயும் வெட்டிட்டான். ரத்த வெள்ளத்துல ரெண்டுபேரும் துடிக்கிறதைப் பார்த்து ஓடிட்டான் படுபாவி. சம்பவ இடத்துலயே கனகராஜ் இறந்துபோயிட்டான். அந்த ப்ரியா பொண்ணை இந்த மேட்டுப் பாளையத்துல இருந்து கோயமுத்தூர் ஜி.ஹெச்.சுக்கு கொண்டு போயிட்டாங்க ...'' என்கிற அவர்களிடம்... "இவுங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிட்டாங்களா?' என கேட்டோம்.


""இல்லைங்க சார். எங்க ப்ரெண்டு கனகராஜ் முத்தரையர் சாதிக்குள்ள வர்ற வலையர் சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த தர்ஷினி ப்ரியா அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பொண்ணு. பக்கத்து பக்கத்து தெருவுல இருக்கறதால பார்த்துப் பேசி பழகிட்டாங்க. இந்தப் பழக்கத்தை கனகராஜ் அண்ணன் வினோத் பலமுறை கண்டிச்சிருக்கறான். அதையும் மீறி அந்த ப்ரியா பொண்ணு கடந்த மூணு மாசத்துக்கு முன்னால கனகராஜ் வீட்டுக்கு வந்துருச்சு.

 

 

boy



கனகராஜ் அப்பா கருப்புசாமி, "பொறுத்து இரும்மா... அவ னோட அண்ணன் கோபத்துல இருக்கறான். நானே அவனை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்கிறேன்'னு அந்தப் பொண் ணை திருப்பி அனுப்பி விட் டுட்டாரு. இந்த டைம்லதான் கடந்த 3 நாளைக்கு முன்னால திரும்பவும் கனகராஜ், ப்ரியாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான். அவனோட அப்பா கருப்புசாமி "சரிடா... இந்தப் பொண்ணை இந்த வீட்டுக்குள்ள வச்சா உங்க அண்ணன் பேயா மாறிடுவான். நீ இந்தப் பொண்ணுடன் ஸ்ரீரங்கா ராயன் தெருக்கோடியில காலியா இருக்கற அந்த வீட்ல வாடகைக்கு இரு. ஒரு நல்லநாள் பார்த்து ரெண்டு பேருக்கும் கல்யா ணம்பண்ணி வச்சுர்றேன்' என சொல்லியிருக்கிறார்.

 

brother



அவர் சொன்னபடியே தான் வாடகைக்கு அந்த வீட்ல ரெண்டுபேரும் தங்கினாங்க. ரெண்டு மூணு நாள்ல கல்யாணம் பண்றதா இருந்தாங்க. ஆனா அதுக்குள்ள கனக ராஜ் அண்ணன் வினோத் துக்கு, அவுங்க அப்பா கருப்புசாமி சொன்ன மாதிரியே சாதிப்பேய் புடிச்சு வெட்டி சாய்ச்சுட்டான்'' என்கிறார்கள் சோகமாய். இப்போதுவரை கோவை ஜி.ஹெச்.  ஐ.சி.யூ. வில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் ப்ரியா. அந்தப் ப்ரியாவை யாரும் சந்திக்கமுடியாத வண்ணம் போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள் ளது. இந்நிலையில் தப்பித் துப்போன வினோத் குமாரை கண்டுபிடிக்க... எஸ்.பி. சுஜித் குமார் உத் தரவின்பேரில் மேட்டுப் பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையிலான டீம் தேடிக்கொண்டிருக்க... 25 வயதே ஆன வினோத் குமார், போலீசில் கடந்த புதன் அன்று காலை சரணடைந்திருக்கிறான்.


"கூடப்பிறந்த தம்பியையே வெட்டிக் கொல்கிற ஆணவத்தை சாதியே கேடாய் வழங்கு கிறது... ஆணவக் கொலைகள் தொடர்கின்றன. இனியும் தொடரும்...' எனச் சொல்வது போலத் தான் ஒவ்வொரு ஆணவக் கொலை நடந்தேறும் போதும் வெட்கப்பட்டு சொல்லத் தோணுகிறது "சாதி கொண்டவர்கள் திருந்தாத ஜென்மங்கள்' என.
 

 

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.