Skip to main content

"டீ பார்டிக்கு 27 லட்சம் செலவு; தமிழிசை தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார் இது அவருக்கு நல்லதல்ல..." - கான்ஸ்டைன் ரவீந்திரன் காட்டம்

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

kர


தெலுங்கானா ஆளுநர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முரசொலியில் கடிதம் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக திமுகவின் கான்ஸ்டைன் ரவீந்திரன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " தமிழிசை தமிழக முதல்வர் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்து என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வீட்டில் தெலுங்கு பேசுவதைப் போலவும், வெளியில் தமிழ் பேசுவதைப் போன்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்குக் கண்டனம் என்பதைத் தாண்டி அவரின் கருத்து மிகக் கேவலமான ஒன்று. அரசியல் அவரை எந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம். 

 

தமிழிசையின் திருமணத்தின்போது திமுக ஆட்சியில் இல்லை என்றாலும் கலைஞர் தலைமையில் திருமணம் நடைபெற வேண்டும் என்று தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் விரும்பினார். கலைஞரும் அதனை ஏற்று அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். கலைஞர் தமிழ் மீது வைத்துள்ள அந்த அன்புதான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது என்று தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் பலமுறை மேடைகளில் கூறி இருக்கிறார். 

 

அந்த அளவிற்குத் தமிழ் வளர்வதற்கும், தமிழகம் வளர்வதற்கும் அயராது பாடுபட்டவர் கலைஞர் அவர்கள். தமிழிசையின் இந்த அறிக்கை அவர் கொடுத்ததா அல்லது யாரேனும் எழுதி அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததா என்பதைப் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் அவரின் அறிக்கையை நாகரிகம் தெரிந்த யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழிசையை தமிழகத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்று நீங்கள் ஏன் கூறினீர்கள் என்று கேட்கிறீர்கள். அவர் என்னுடன் விவாதத்தில் கலந்துகொண்ட காலத்திலேயே அவர் கூறியிருக்கிறார். ஆளுநர் என்பவர் அந்த மாநிலத்தில் முதல் குடிமகள் என்று அவரே கூறியிருக்கின்றபோது, தற்போது அவர் அம்மாநிலத்தின் முதல் குடிமகளாகவே இருக்கிறார். எனவே உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற அரசியலைப் பேசுங்கள். இங்கே அரசியல் பேசுவது உங்கள் வேலை அல்ல. 

 

இதற்கு முன் ஆளுநராக இருந்தவர்கள், குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் இவரைப் போல யாராவது பேசியிருக்கிறார்களா? அவர்களுக்கும் பேச உரிமை இருக்கிறது. ஆனால் என்ன பேச வேண்டும். தமிழகத்தின் பண்பாட்டைப் பற்றிப் பேசலாம், இலக்கியத்தைப் பற்றிப் பேசலாம். ஆனால் அரசியல் பேசத் தமிழிசைக்கு எந்த உரிமையையும் இல்லை. அதற்கானப் பதவியிலும் அவர் இல்லை. அவர் பல ஆண்டுக் காலம் தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளார். அப்போது நாங்கள் அவரை அரசியல் பேச வேண்டாம் என்று எந்த இடத்திலேயும் கூறியதில்லையே. அவர் தலைவராக இருந்தபோது அவர் கேட்பதற்கு நாங்கள் பதில் கொடுத்துக்கொண்டு தானே இருந்தோம். இப்போது அவர் அரசியல் கட்சித் தலைவர் அல்ல. இரண்டு மாநிலத்தின் ஆளுநராக இருக்கிறார். இது அவருக்குத் தேவையில்லாத ஒன்று என்று கூறுகிறோம். 

 

இவரை நாங்கள் ஏன் விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுவரை எந்த ஆளுநரும் ஊடகத்தில் இவரைப் போலக் கருத்துச் சொன்னதில்லை. அந்தக் கருத்து முற்றிலும் தமிழகத்துக்கு எதிராக, தமிழக மக்களுக்கு விரோதமாக இருந்தது. அதற்காக அவருக்கு முரசொலி பதில் கூறியது. அவர் தவறிழைக்கும் போது அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. அதனால் அதுதொடர்பாக பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் கூட தமிழிசையை எந்த இடத்திலும் விமர்சனம் செய்யவில்லையே. ஆளுநர் அதிகாரத்தை மீறுகிறார் எனும்போது கொடுக்க வேண்டிய பதிலடியை நாங்கள் திருப்பிக் கொடுத்தோம். நீங்கள் அங்கே ஆளுநராக இருக்கிறீர்கள், அந்த மாநில மக்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். 

 

ஏன் தமிழகத்தில் அரசியல் செய்கிறீர்கள் என்றால் வாரத்தில் மூன்று நாட்கள் தெலுங்கானாவிற்கும், மூன்று நாட்கள் பாண்டிச்சேரிக்கும் மீதமுள்ள ஒரு நாளை தமிழகத்திற்கும் செலவிடுகிறேன் என்கிறார். அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொண்டாலும் ஒரு ஆளுநர் மூன்று மாநிலத்தில் பணியாற்ற முடிகிறது என்றால், இந்தியாவில் ஆளுநரின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம் அல்லவா? இந்தியாவின் 28 மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை 7 ஆகக் குறைத்துவிடலாம். இவர்கள்தான் மூன்று மாநிலத்தில் ஒரே நேரத்தில் பணி செய்கிறார்களே? அப்புறம் எதற்கு வீண் செலவு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஆகின்ற செலவை வேறு ஒரு நல்ல செயலுக்குச் செய்துவிட்டுப் போகலாம் அல்லவா? அதைத் தமிழிசை ஏற்றுக்கொள்வாரா என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள். 

 

தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டீ பார்ட்டிக்கு 27 லட்சம் செலவு ஆனது. இதை யார் கொடுத்தது, தமிழக அரசுதானே கொடுக்கும். அண்ணா இதைத்தானே பல ஆண்டுகளுக்கு முன் சொன்னார். ஆளுநர் பதவி தேவையில்லை. அரசியல் அமைப்பு பிரச்சனை மாநிலங்களில் வருகின்றபோது டெல்லியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்புங்கள். பத்து நாளில் பிரச்சனை தீர்ந்ததும் டெல்லிக்கே திரும்ப அனுப்பி விடுங்கள் என்று கூறினார். தமிழிசை இன்று அந்த இடத்துக்குத்தானே அவரே அறியாமல் வந்துள்ளார். எதற்கு வீண் செலவு செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணம் இந்த அளவுக்கு வீணாவதற்கு இத்தனை ஆளுநர்களை ஏன் போட வேண்டும். அதை தமிழிசை குறைக்க வலியுறுத்துவரா என்பதை அவர்தான் கூற வேண்டும்" என்றார். 

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.