Skip to main content

"ஜெயலலிதா நினைத்திருந்தால் முன்பே விடுதலை செய்திருக்கலாம் ; கலைஞர் 50 வருடத்துக்கு முன்பே பிரிவு 161ஐ பயன்படுத்தி..." - கோவி. லெனின் பேட்டி

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

j

 

கடந்த பல வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்தவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் அவர்களின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றன. காலம் தாழ்த்தி இந்த தீர்ப்பு கிடைத்திருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தாலும் அதிமுக இந்த விவகாரத்தில் திமுகவை விமர்சனம் செய்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவைக் கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

ஏழு பேர் விடுதலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவை விமர்சனம் செய்துள்ளார். ஊர்ல கல்யாணம் என்றால் மார்பில் சந்தனம் தடவிக்கிறதுதான் திமுக வேலை என்று விமர்சனம் செய்துள்ளார். நாங்கள்தான் அவர்கள் விடுதலைக்காக முதலில் முயற்சி எடுத்தோம். ஆனால் திமுக அதற்கு உரிமை கொண்டாடுகிறது என்று கூறியுள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

முதல்வர் எந்த இடத்திலேயும் அவர்கள் விடுதலைக்கு நாங்கள் மட்டுமே காரணம் என்று கூறவில்லை. காமாலை கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல் அவரின் பேச்சு இருக்கிறது. அதற்கு ஜெயக்குமாருக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைச் சொல்கிறேன். இவர்கள் சொல்வதைப் போல் ஜெயலலிதா எப்போது இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் போட்டார்கள். கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, இவர்களின் விடுதலையை அப்ராபிரியட்(appropriate) அரசு மேற்கொள்ளலாம் என்று தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறினார். 

 

இந்தத் தீர்ப்பு வந்த உடனேயே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தைப் போட்டார்கள். அதாவது 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அதன் பிறகு 2016ம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்தார். இத்தனை ஆண்டு இடைவெளியில் என்ன காரணத்திற்காக அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் தற்போது அனுப்பப்பட்டதை போல 161வது சட்டப்பிரிவைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. நாங்கள் அவர்களை விடுதலை செய்கிறோம், மூன்று நாட்களுக்குள் உங்கள் முடிவைக் கூறுங்கள் என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்புகிறார். 

 

இதற்குப் பதிலளித்த மத்திய அரசு உங்களுக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை. இந்த வழக்கு சிபிஐ விசாரித்த வழக்கு, எனவே எங்களுக்குத்தான் இந்த வழக்கில் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் இந்த வழக்கிலேயே வரக்கூடாது என்பது மாதிரி தன்னுடைய பதிலைத் தெரிவித்தது. ஜெயலலிதா விடுதலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் அப்போதே செய்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. கலைஞர் கூட அப்போதே அதைக் கூறினார். ஏனென்றால் 1970களில் தோழர் தியாகு போன்றவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 161வது பரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்திருந்தார் கலைஞர். அதனால்தான், ஏன் 161ஐ பயன்படுத்தாமல் கடிதம் அனுப்புகிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். இன்றைக்கு மீண்டும் திமுக ஆட்சியில் அதைச் செய்து முடித்திருக்கிறார்கள்.

 


 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.