Skip to main content

பாஜகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தால் அதிமுகவுக்கு மந்திரி பதவி!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

தனது மகனுக்கு எப்படியாவது மந்திரி பதவி வாங்கிடணும்னு டெல்லியிலேயே உட்கார்ந்திருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் பா.ஜ.க. ஒரு புதிய பார்முலாவைச் சொல்லி அனுப்பியது. அதன்படி டெல்லியிலிருந்து புறப்பட்டு வந்து எடப்பாடியை சந்தித்து பா.ஜ.க. சொன்ன விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். "தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகியுள்ளார். அவரை தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக்குங்கள். அவரை ராஜ்யசபா உறுப்பினராக்குவதோடு, பா.ஜ.க.வைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனையும் ராஜ்யசபா உறுப்பினராக்கினால் அ.தி.மு.க.விற்கு அமைச்சரவையில் இரண்டு இடம் தருவதாக அமித்ஷா சொன்னார்' என டெல்லியில் நடந்ததைச் சொன்னார் பன்னீர்.

 

bjp



பன்னீர் சொன்ன ஃபார்முலாப்படி வைத்திலிங்கத்திற்கும் ரவீந்திரநாத்துக்கும் மந்திரி பதவி அமைச்சரவையில் இடம் என்றாலும், பா.ஜ.க.விற்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர முடியுமா? அ.தி.மு.க.வில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் என ஏகப்பட்ட பேர் ராஜ்யசபா சீட் கேட்கிறார்கள். பா.ஜ.க.விற்கு இரண்டு சீட் கொடுத்து மத்திய அமைச்சர் பதவி பெற்றால் மற்றவர்களுக்கு சீட் தர முடியாது. அத்துடன் பா.ம.க.விற்கு ராஜ்யசபா சீட் ஒன்று தருவதாக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளோம். இருப்பது மூன்று சீட். அதில் இரண்டு பா.ஜ.க.விற்கு, ஒன்று பா.ம.க.விற்கு என்றால் அ.தி.மு.க. என்கிற கட்சி எதற்கு என்கிற கேள்வி வரும்' என எடப்பாடி பதில் சொல்லத் தயங்கினார். எடப்பாடியின் தயக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பா.ஜ.க. மேலிடத்தின் டென்ஷன் அதிகமானது.
 

minister



வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பா.ஜ.க.வின் சொத்து. அவரை நாங்கள் தமிழகத்திற்கு தாரைவார்க்க விரும்பவில்லை. கடந்த நரேந்திரமோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் தங்களது ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்த லில் போட்டியிட்டு அமைச்சர்களாகியுள்ளனர். அவர்களது இடத்தில் ஜெய்சங்கரை நிறுத்தலாம் என முடிவு செய்துவிட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ராஜ்யசபா உறுப்பினராக்குவது பற்றி எடப்பாடி என்ன செய்கிறார் என பார்ப்போம் என்று விட்டு விட்டது'' என்கிறார்கள் பா.ஜ.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

ops



அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த பா.ம.க.விற்கும் தே.மு.தி.க.விற்கும் மாநில கட்சி என்கிற தகுதியும், அவர்களது சின்னங்களான மாம்பழமும் முரசும் சுயேட்சை சின்னங்களாகிவிடும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அ.தி.மு.க. மூலம் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை அடையவேண்டும் என்கிற கட்டாயம் பா.ம.க.விற்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக எடப்பாடியிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், "நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் சோளிங்கர், பாப்பி ரெட்டிபட்டி, அரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயிக்க பா.ம.க. ஓட்டுகள்தான் காரணம். எனவே நீங்கள் ஏற்கனவே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி பா.ம.க.விற்கு ராஜ்யசபா சீட் தரவேண்டும்' என கேட்டிருக்கிறார். தே.மு.தி.க.வும் அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும்கட்சித் தயவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என திட்டமிடுகிறது.

 

eps



அதனால்தான் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் விஜயகாந்த்தை வைத்து அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக் குமார் மற்றும் பா.ம.க. தலைவர்கள் கலந்துகொண்ட இப்தார் விருந்தை நடத்தியுள்ளது. ராஜ்யசபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எதிர்காலத்தில் நடைபெறப்போகும் தேர்தல்களைக் காட்டி அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி களிடையே ஒரு தற்காலிக ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. மந்திரி பதவி எதிர்பார்ப்பில் சற்றும் தளராமல் முயற்சி செய்யும் ஓ.பி.எஸ். ஒருபக்கம், ஓ.பி.எஸ். மகனுக்கு மட்டும் மந்திரி பதவி என்றால் வேண்டாம் என்கிற இ.பி.எஸ். எதிர்ப்பு மறுபக்கம் என அ.தி.மு.க. இரண்டு முகாம்களாகி விட்டது. இப்படி உடைந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ராஜ்யசபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் போன்ற எதிர்பார்ப்புகள் ஒன்றாக நிற்க வைத்துள்ளன.
  bjp



உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் தோற்கும். எனவே அதை எடப்பாடி நடத்தமாட்டார் என அ.தி.மு.க. தலைவர்களே பேசி வருகிறார்கள். ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க.விற்கு இடம் தராவிட்டால் அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடையாது என பா.ஜ.க. சொல்கிறது. மகனுக்கு அமைச்சர் பதவி இல்லை யென்றால் அ.தி.மு.க. உடையும் என்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள். இப்படி இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.க. எந்த நகர்வை மேற்கொண்டாலும் சேதமடைவது உறுதி. இந்தச் சூழ்நிலையை எடப்பாடி எப்படி சமாளிப்பார் என ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.