திமுகவின் தென்மண்டலச் செயலாளராக பொறுப்பு வகித்த அழகிரியின் பொறுப்பை கலைஞர்
அழகிரியின் விருப்பப்படி செயல்படுவதற்கு இன்னமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நிலையே நீடித்து வந்தது. அவர்கள் கட்சியில் பொறுப்புக் கிடைக்காதவர்களாக இருந்தார்கள் அல்லது, முன்பு பொறுப்பு வகித்து விடுவிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். திமுக வேட்பாளருக்கு எதிராக அவர்கள் கடந்த தேர்தலில் வேலை செய்தார்கள்.
திமுகவில் இப்படிப்பட்ட கோஷ்டிகள் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்தக் கோஷ்டிகள் அனைத்தும் கலைஞரின் வெற்றிக்காக உழைப்பதில் இணைந்து செயல்படும். ஆனால், அழகிரி மதுரைக்கு வந்தவுடன் அழகிரி கோஷ்டியாக மாறி திமுகவுக்கு எதிராகவே தேர்தலில் வேலை செய்கிற அளவுக்கு போனார்கள். திமுகவின் வெற்றியையே பாதிக்கச் செய்தார்கள். அழகிரியை கட்சியை விட்டு நீக்கினாலும் அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து அவருடனே இருந்தார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆனால், 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி திமுகவிலிருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். "தி.மு.க. தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தலைமையையும் - கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் தி.மு.கழகத்திலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்" என்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவித்தார்.
இந்தமுறை மதுரையிலும் சரி, தென் மாவட்டங்களிலும் சரி அழகிரியால் பொறுப்புகளுக்கு கொண்டுவரப்பட்ட யாரும் அவருக்கு ஆதரவாக செல்லவில்லை. மாறாக, ஸ்டாலினைச் சந்தித்து தொடர்ந்து கழகத்தில் பணியாற்றுவதாக உறுதி அளித்து பதவிகளில் தொடர்ந்தனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆனால், உண்மை நிலையை உணராமல் தனக்கு தமிழகம் முழுவதும் ஆதரவாளர்கள் இருப்பதாக அழகிரி கூறிவந்தார். ஆனால், அவருடைய ஆதரவாளர்களாகவோ, விசுவாசிகளாகவோ இப்போதும் பொறுப்பில் உள்ள பலர் அழகிரியை பகிரங்கமாக ஆதரிக்க மறுத்துவிட்டனர்.
தலைமையுடன் பேச்சு நடத்தி, கட்சியில் உறுப்பினராக இணைவதற்கு முயற்சி செய்யும்படி அவர்கள் யோசனை கூறியிருக்கிறார்கள். ஆனால், அழகிரி கட்சித் தலைமையை மிரட்டும் வகையிலேயே பேசிவருவது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. எனவேதான் அழகிரி திட்டமிட்ட பேரணி தோல்வியடைந்தது என்கிறார்கள்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
அதேசமயம், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொறுப்பில் இருக்கிற அழகிரியின் முன்னாள் ஆதரவாளர்கள் விசுவாசத்திற்காக வேன்களையும் ஆட்களையும் சப்ளை செய்திருப்பதாக பேரணியில் பங்கேற்றவர்கள் கூறியதைக் கேட்க முடிந்தது. அவர்கள் கூறியது உண்மையா அல்லது வெற்று பிரச்சாரமா என்பது தெரியவில்லை. ஆனால், அழகிரியின் ஆதரவாளர்களாக இருக்கும் பலர் அவரிடமிருந்து விலகி விரைவில் ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணையும் முயற்சியில் இருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.