Skip to main content

"மாணவர்களுக்கு அறிவுரை சொல்ல ரஜினிக்கு என்ன தகுதி இருக்கின்றது.." - இடும்பாவனம் கார்த்திக் கேள்வி!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுடைய காரில் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
 

iu



விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனைக்கு பிறகு, ரஜினி மற்றும் விஜயை வைத்து அரசியல் ரீதியான கருத்துக்கள் பேசப்படுகின்றது. ரஜினி பாஜகவுக்கும், விஜய் திமுகவுக்கு சார்பாக இருப்பதை போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்? 

விஜய் திமுக பக்கம் போனதாக நான் நினைக்கவில்லை. ஆனால் ரஜினி பாஜக பக்கம்தான் இருக்கிறார். தொடர்ந்து அவர் அவர்களை ஆதரித்து வருகிறார். தற்போது இஸ்லாமியர்களுக்கு ஒன்றென்றால் முதலில் குரல் கொடுக்கும் ஆளாக நான் இருப்பேன் என்று தெரிவிக்கிறார். அவர் எப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ஏதாவது ஒரு நிகழ்வை அவரால் முடிந்தால் சொல்லட்டும். காஷ்மீரில் ஆசிபா என்ற முஸ்லிம் பெண் குழந்தை இந்து பயங்கிரவாதிகளால் கோயிலில் வைத்தே வன்புணர்வு செய்யப்பட்டு கைகால்கள் உடைக்கப்பட்டு கொல்லப்பட்டாள். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்பினர் பேரணி நடத்தினார்கள். இதற்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தாரா? உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி ஒரு முஸ்லிம் பெரியவரை அடித்தே கொன்றார்களே, அப்போது ரஜினி குரல் கொடுத்தாரா? இந்தியாவின் உச்சபட்ச நடிகராக இருக்கின்ற அமீர்கான் தன்னுடைய மனைவி தன்னிடம் நாட்டில் பாதுகாப்பின்மை குறைவாக இருப்பதாக கூறியதாக ஒரு கருத்தை தெரிவிக்கிறார். உடனே அவரை நாட்டை விட்டுபோங்கள் என்று கொந்தளிக்கிறார்கள். அதே போன்று பிரதமர் ஒரு கூட்டகத்தில் ஊழல்வாதிகளால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறுகின்றார். அவரும் நாட்டில் பாதுகாப்பின்மையை உணர்கிறார். ஆனால் அவ்வாறு கூறிய அவருக்கு எந்த எதிர்ப்பும் வருவதில்லை. இந்த மாதிரியான எந்த பிரச்சனைக்காவது ரஜினி வாய் திறந்துள்ளாரா?  

மாணவர்களுக்கு ரஜினி அறிவுரை கூறுகிறார். மாணவர்களுக்கு அறிவுரை கூற ரஜினிக்கு என்ன தகுதி இருக்கின்றது. அவர்களுக்கு எல்லாம் தெரிந்ததால்தான் போராடுகிறார்கள். இந்த நாட்டை இந்த சட்டம் துண்டாடும் என்று தெரிந்தததால்தான் வீதிக்கு வந்து போராடுகிறான். அவர்களுக்கு அறிவுரை சொல்ல நீங்கள் யார்? நீங்கள் சினிமாவில் கேமரா முன்னாடி மட்டும் சண்டை போடுவீர்கள். மற்ற நேரங்களில் வாய் மூடி மவுனியாக இருப்பீர்கள். இதுதான் காலங்காலமாக நீங்கள் செயல்படுகின்ற முறை. அவர் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லலாமா? மாணவர்களுக்கு அவர் அறிவுரை சொல்ல வேண்டுமானால் என்னுடைய படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வராதீர்கள், படிக்கின்ற வேலையை பாருங்கள் என்று தானே சொல்லியிருக்க வேண்டும். இதை ரஜினிகாந்த் சொல்வாரா? அதற்கு அவருக்கு தைரியம் இருக்கின்றதா? எனக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டம், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று அவரால் ஏன் சொல்ல முடியவில்லை. உங்கள் குடும்பத்தை பாருங்கள், எனக்காக மண் சோறு சாப்பிட வேண்டாம் என்று அவரால் ஏன் சொல்ல முடியவில்லை. படங்களில் சிகெரட் குடிக்கின்ற காட்சிகளை முதலில் வைத்து யார். வன்முறை காட்சிகளை படங்களில் அறிமுகம் செய்தது யார். தர்பார் படத்தில் மனித உரிமை ஆணையத்தில் இருந்து வருகிறவர்களின் நெத்தி பொட்டில் எதற்காக துப்பாக்கி வைத்தீர்கள். சண்டை காட்சிகளே படத்தில் வைக்காதீர்கள். அன்பாக பேசி வில்லனை திருந்துங்கள். அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்.


 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்