Skip to main content

ஐ.ஏ.எஸ். vs வி.ஆர்.எஸ்.  கோட்டையில் பரபரப்பு !   -கிராமங்களுக்கு கிடைக்குமா இணைய வசதி ?    

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

 

தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு வி.ஆர்.எஸ். கொடுத்துள்ள விவகாரம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் இன்னமும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் தொழில் புரட்சியின் ஒரு அங்கமாக, அதிவேக இணைய வசதிகளை தடையின்றி கிடைக்கும் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந்தது மத்திய பாஜக அரசு. 

 

 access


       

அதன்படி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசின் தொழில்நுட்பத்துறையின் சார்பில் அதிவேக அலைக்கற்றை (ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்) இணைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது எடப்பாடி அரசு. முதல் கட்டமாக 12,524 கிராம பஞ்சாயத்துகள், 528 பேரூராட்சிகள், 125 நகராட்சிகளும் அடங்கிய உள்ளாட்சி அமைப்புகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற 1,230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் 15 மாநகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், 
மாநகராட்சிகளையும் இணைத்து திட்டத்தின் மதிப்பை 2441 கோடியாக மாற்றியமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்  அறிவிப்பையும் செய்தார். 
             

இந்த நிலையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி கடந்த வருடம் டெண்டரை கால்ஃபர் செய்தார் தகவல் தொழில் நுட்ப முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு. அந்த டெண்டரில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிலையில், டெண்டரை முடிவு செய்வதற்கு முன்பே, பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் அரசுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார் சந்தோஷ்பாபு. இந்த விவகாரம்தான் தற்போது கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மத்தியில் சூடாகவே இருக்கிறது. 
   

இது குறித்து தகவல் தொழில் நுட்பத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘’ டெண்டரில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் எல் அண்ட் டி, வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் உள்ளிட்ட 4 நிறுவனங்கள்தான் தொழில் நுட்ப தகுதிகளைப் பெற்றது. ஆனால், டெண்டரில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிகளும் ஒரே ஒரு நிறுவனம் தான் நிறைவு செய்தது. அதேசமயம், இதில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு டெண்டரை முடிவு செய்யும் வகையில், சில விதிகளை மாற்றியமைக்க சந்தோஷ்பாபுவுக்கு அரசு தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது. 

குறிப்பாக, திட்டத்திற்கு தேவையான உபகரணங்களை தகுதியுள்ள தரமான நிறுவனங்களிடமிருந்து தான் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிகளை தளர்த்துமாறு அறுவுறுத்தப்பட்டதை சந்தோஷ்பாபு ஏற்கவில்லை. தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தங்களால், ’ என்னால் முடியாது. வேண்டுமானால் துறையிலிருந்து என்னை மாற்றிவிடுங்கள் ’ என சொல்லியிருக்கிறார் பாபு. ஆனால், அது மறுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்தே அவர் வி.ஆர்.எஸ்.கொடுத்தார். அதற்கான கடிதத்தை கொடுத்ததுடன் 27-ந்தேதி வரை விடுப்பும் எடுத்துள்ளார். இவரது வி.ஆர்.எஸ்.சை அரசு ஏற்றுக்கொள்ளுமா ? என்பது விரைவில் தெரியவரும். சந்தோஷ்பாபு சர்ச்சையால் டெண்டர் தற்போது முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது  ‘’ என்கிறார்கள். 
 

இந்த டெண்டர் விவகாரம் வில்லங்கமானதற்கு பர்செண்ட்டேஜ் விவகாரம் தான் என  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் பரவி கிடைக்கிறது. டெண்டர் விவகாரத்தில் அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மறுத்த சந்தோஷ்பாபு, தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் நடந்துள்ள பல்வேறு  சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறது கோட்டை வட்டாரம்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விவசாயிகள் போராட்டம்; இணைய சேவை துண்டிப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
nternet service outage Farmers protest at haryana

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது 

அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.