Skip to main content

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! வெள்ளமே.. வெள்ளமே!

Published on 18/11/2020 | Edited on 19/11/2020
flood

 

குறிப்பிட்ட சில நேரங்களில், பழைய சம்பவங்களும், கசப்பான அனுபவங்களும் மனக்கண் முன் விரியவே செய்யும். அப்படி ஒரு சம்பவம்தான், 2015 டிசம்பர் 1-ஆம் தேதி இரவு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை திடுதிப்பென்று திறந்துவிட்டது. அன்று பெய்த தொடர் மழையும், சென்னை மாநகரத்தை, அப்போது  வெள்ளக் காடாக்கி, மக்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டது.  

அப்போது, ஏரியில் கட்டிய வீடுகள் வெள்ளத்தில் ‘நீச்சல்’ அடித்தன. வந்தாரை வாழ வைத்த சென்னைக்காரன், அடுத்தவேளை சாப்பாட்டுக்கு யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால்,  தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து, உணவு, உடை, போர்வை, சானிட்டரி நாப்கின், மருந்துப் பொருட்களை வழங்கி திக்குமுக்காட வைத்தனர்,  தமிழ் மக்கள்.

தற்போதும்,  செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கப்போவதாக தகவல் வெளியானதால், மீண்டும் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு ஏரியைத் திறக்க மாட்டோம் என்று  அரசு தெளிவுபடுத்தி இருப்பது,  சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில்,  21 அடியில் உள்ள நீர்மட்டம், 22 அடியை எட்டினால்,  உரிய அறிவிப்பு செய்து திறப்போம் என்று சொல்லி வைத்திருக்கிறது பொதுப்பணித்துறை!

எதற்கும் ஒரு தயார் நிலையில் இருப்பதற்காக,  2015 வெள்ளக் காட்சிகள் சிலவற்றை, நினைவலைகளில் பதிந்துள்ள புகைப்படங்களை மீண்டும் பார்த்து வைப்போம்! 

 

அமெரிக்க தூதரகம் முன்பாக அப்போது எப்படி இருந்தது? 


ஆலந்தூரில் வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் எப்படி மீட்கப்பட்டார்?

 

 I remember that day in my heart! Flood .. Flood!


ஜெமினி பாலத்திற்கு அடியே வெள்ளத்தில் ஆம்புலன்ஸ் மிதந்ததே?

 I remember that day in my heart! Flood .. Flood!


ஆயிரம் விளக்கு உம்மிடி ஜுவல்லரி அருகில் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்ததே?

 I remember that day in my heart! Flood .. Flood!


தேனாம்பேட்டை திரு.வி.க. குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, வளர்ப்பு கிளி, ரேசன் அட்டை, சாதிச்சான்று பள்ளிச் சான்றிதழ்களுடன், காமராஜர் அரங்கம் முன்பு, தஞ்சமடைந்தாரே ஒரு பெண்?

 I remember that day in my heart! Flood .. Flood!


ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அன்றைய நிலை என்ன?

 I remember that day in my heart! Flood .. Flood!


வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எப்படி விநியோகித்தனர்?

 

 I remember that day in my heart! Flood .. Flood!


சைதாப்பேட்டை பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அப்போது ஏர்போர்ட்டுக்கு போவதற்கு எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. ஹயாத் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டினர், அறைகளைக் காலி செய்துவிட்டு வெளியில் எங்கே செல்வது எனத் தெரியாமல் தவித்தனரே?

 

 I remember that day in my heart! Flood .. Flood!


எல்லா இடத்திற்கும் விரைவாகச் செல்வதற்கு (fastrack) மக்கள் நடைபயணம்தானே மேற்கொண்டனர்?

 

மனத்திரையில் வந்து மோதுகின்றனவே அந்த அவலக் காட்சிகள்! மழைக்காலம் அல்லவா?  எதற்கும், எப்போதும், சென்னைவாசிகள் நாம் தயாராகவே இருப்போம்! 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.