Skip to main content

இதில் ஓ.பி.எஸ்.சின் சதி இருப்பதாக சந்தேகப்படுகிறேன்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

அரசியல் கட்சியினர் மட்டுமல்ல, வாக்களித்த மக்களும் அதிர்ச்சியில் தான் உள்ளனர். மதுரையைத் தொடர்ந்து தேனி, ஈரோடு ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மின்னணு இயந்திர முறை கேடு பலவித சந்தேகங்களை உண்டாக்கியுள்ளது. பா.ஜ.க.வின் பெரும்பான்மைக் கனவு சந்தேகமாகியுள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க  தொகுதிக்கு 20 வாக்கு எந்திரங்களில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்குகள் அதிகமாக இருக் கும்படி செய்து, அதிகாரிகள் துணையோடு மாற்றி வைக்க மோடி திட்டமிட்டிருப்பதை நக்கீரனில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். 

 

ops



அதை நினைவூட்டும் வகையில் தேனி தொகுதியிலும், ஈரோடு தொகுதியிலும் திடீரென வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திருப்பதாக கூறி, எதிர்க்கட்சிகளை கையெழுத்து போட வரும்படி அதிகாரிகள் அழைத்ததும் பதற்றம் தொடங்கியது. எந்தவிதமான காரணமும் இல்லாமல் தேனி தொகுதிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஈரோடு தொகுதிக்கு 20 வாக்குப்பதிவு எந்திரங்களும் வந்திருப்பதாக தகவல் பரவியதும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஆவேசமடைந்தனர். 

 

stalin



தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் போட்டி யிடுகிறார். ஒரு வாக்கிற்கு 5 ஆயிரம் ரூபாய்வரை செலவழித்துள்ளார். வாரணாசி வரை சென்று ஓ.பி.எஸ்.ஸும் மகனும் மோடியை சந்தித்துள்ளனர். இந்நிலையில், திடீரென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்ததால், எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு செய்யத் திட்டமிட்டிருப்பதாக வதந்திகள் பரவின. இதையடுத்து, தேனியில் உள்ள தாலுகா அலுவலகம் முன் எதிர்க்கட்சி களின் தொண்டர்கள் திரண்டனர். அந்தப் பகுதியே பரபரப்பாகியது. தாசில்தார் மணவாளனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவும், எஸ்.பி. பாஸ்கரனும் தாலுகா அலுவலகம் வந்தனர்.   

 

evks



ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட வடுகப்பட்டி ஆகிய இரண்டு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்காக இந்த எந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இந்த வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி முகவர்களால் போடப்பட்ட 50 சோதனை வாக்குகளை வாக்குச்சாவடி அதிகாரி அழிக்க மறந்துவிட்டார் என்றும், அதன்காரணமாகவே மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் பல்லவி தெரிவித்தார். எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்படாத நிலையில்... தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுப்பதாக தெரிவித்தார் கலெக்டர். 
 

ops son



மாவட்ட ஆட்சியர் பல்லவி நம்மிடம், "தேர்தல் சமயத்தில் வாக்கு எந்திரங்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவது இயல்பான விஷயம்தான். வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றவெல்லாம் முடியாது'' என்றார்.எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடம் கேட்டபோது, "வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கம்மவர் கல்லூரி இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. கல்லூரிப் பேருந்துகள் உள்ளே வந்து செல்கின்றன. இங்கிருந்து வாக்கு எந்திரங்களை மாற்ற வாய்ப் பிருக்கிறது என்று சந்தேகப்படு கிறோம்''’என்றனர். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசிய போது…"இதில் ஓ.பி.எஸ்.சின் சதி இருப்பதாக சந்தேகப்படுகிறேன்''’என்றார். 

தேனியில் இப்படியென்றால், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள திருமங்கலம் ஊராட்சிப் பள்ளி பூத்தில் மறுவாக்குப் பதிவு நடத்துவதற்காக என்று 20 விவிபேட் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த வாக்குச் சாவடியில் எந்திரத்தை சரிபார்க்க முகவர்கள் போட்ட மாதிரி வாக்குகள் 50. அதை வாக்குச்சாவடி அதிகாரி அழிக்காமல் விட்டுவிட்டார். அந்த பூத்தில் பதிவான மொத்த வாக்குகள் 736. அழிக்காமல் விட்ட வாக்குகளையும் சேர்த்தால் 786 வாக்குகள் இருக்க வேண்டும். ஆனால், அந்தப் பெட்டியில் இருந்தது 777 வாக்குகள்தான். 9 வாக்குகள் குறைவாக காட்டியதால் அங்கு மறுவாக்குப்பதிவு நடப்பதாக அதிகாரி தெரிவித்தார்.   

தேனி தொகுதியில் 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்த அதிகபட்சமாக 8 எந்திரங்கள் போதுமானது. ஈரோடு வாக்குச்சாவடிக்கு அதிகபட்ச மாக 4 எந்திரங்கள் போதுமானது. ஆனால், தேனிக்கு 50 எந்திரங்களும், ஈரோடுக்கு 20 எந்திரங்களும் கொண்டுவரப்பட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் இன்னமும் சந்தேகத்தை எழுப்புகின்றன.

- சக்தி, ஜீவாதங்கவேல்.
 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.