Skip to main content

முதல்ல குழந்தைகளை கொல்லணும்ன்னு நினைக்கல... போலீசில் அபிராமி...

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
 I did not want to kill the children first... says abirami in police


 

 

இரண்டு மாத கூடா நட்பு, இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய வைத்திருக்கிறது. காதலித்து திருமணம் செய்து 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவனையும் கொலை செய்ய முயற்சித்திருக்கிறது. சென்னை குன்றத்தூரில் நடந்த அபிராமி நடத்திய கொடூர சம்பவம்தான் இன்று அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. 
 

குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்ற அபிராமியை போலிசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
 

 

 

அப்போது, நானும் விஜயும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குடும்ப தேவைகளை நிறைவேற்ற என்னிடம்தான் பணம் கொடுப்பார். நான்தான் குடும்பத்திற்கு தேவையானவற்றையும், பிள்ளைகளுக்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொடுப்பேன். குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடிபுகுந்த பின்னர்தான் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்று வந்தோம்.
 

அப்போது அங்கு பிரியாணி கடையில் பில்போடும் இடத்தில் இருந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடிக்கடி செல்போனில் பேசுவோம். பிரியாணி கடைக்கு வர சொல்லுவார். நானும் பிரியாணி வாங்க அந்த கடைக்கு அடிக்கடி செல்வேன். இதனால் எங்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. இது விஜய்கு தெரிய வந்தது. சந்தேகப்பட்டார். சமாளித்தேன். 
 

சுந்தரத்துடன் ஏற்பட்ட காதல் காரணமாக, விஜய்யை பிரிய நினைத்தேன். இதற்கு சுந்தரமும் உடன்பட்டார். கொலை சம்பவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு நான் விஜய்யுடன் கோவித்துக்கொண்டு சுந்தரம் வீட்டிற்கு சென்றேன். என்னை காணவில்லை என்று தேடிய விஜய், பிறகு என்னை தொடர்பு கொண்டு வந்துவிடு என்று கெஞ்சினார். பின்னர் வீட்டுக்கு வந்தேன். 
 

 

 

விஜயோடு 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தியபோதும், இரண்டு மாதம் பழகிய சுந்தரத்தின் காதலை விடமுடியவில்லை. என்ன செய்வதன்று தெரியாமவில் தவித்தேன். அப்போது சுந்தரம், குழந்தைகளை கொன்றுவிட்டால் நாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம். வேறு எங்காவது போய் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று கூறினார். குழந்தைகள் உயிரோடு இருந்தால் நம்மை தேடி வருவார்கள்.

 

குழந்தைகளை கொல்ல மனம் வரவில்லை. இருப்பினும் சுந்தரத்தின் பழக்கத்தையும் விட முடியவில்லை. தவித்தேன். இதற்கு வேறு வழி இருக்கிறதா என யோசித்தேன். எந்த வழியும் இல்லை. மீண்டும் சுந்தரத்தை சந்தித்தேன். குழந்தைகளை கொன்றால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சொன்னதால், வேறு வழியில்லாமல் விஷ மாத்திரைகளை கலந்த பாலை கொடுத்தேன் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். 
 




 

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.