Skip to main content

உள்ளே இருக்க வேண்டியவர் எச்.ராஜாதான்... வைகோ அல்ல...: ஆ.வந்தியத்தேவன் பேட்டி

Published on 14/04/2018 | Edited on 14/04/2018
vaiko



பிரதமரை வரவேற்காமல், ‘மோடியே திரும்பி போ' என்று கருப்பு கொடி காட்டி அவமானப்படுத்தியவர்களை தமிழக அரசு உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வைகோ, நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நடை பயணம் செல்கிறார். இதை டிவியில் பார்த்த 5 வயது  சிறுமி நியூட்ரின் சாக்லெட் நிறுவனத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என கிண்டலாக கேட்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஏன் வான் வழியில் சென்றார். சாலை வழியாக வரவேண்டியது தானே என வைகோ  கேட்கிறார். வைகோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். வைகோ சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். அவரை உடனடியாக கைது செய்யாவிட்டால் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. வெளியீட்டு அணிச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன்.
 

ஆர்.எஸ்.எஸ். நிகழ்த்திய வன்கொடுமைகளுக்கு அளவே கிடையாது. பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி கிறிஸ்துவ, இஸ்லாமிய சிறுபான்மை மக்கள், தங்கள் கருத்துக்கு மாறுபட்ட எண்ணம் உடையவர்களை இந்த உலகத்திலேயே உலவவிடக்கூடாது என்பது அவர்களுடைய தீவிரவாத சிந்தனை. இதைத்தான் அவர்கள் கடந்த காலத்தில் இருந்து இதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
 

அவர்கள் உண்ணக்கூடாது என்று சொன்னால் மாட்டுக்கறியை உண்ணக்கூடாது. தமிழை கேவலப்படுத்தி பேசுவார்கள். இப்படி எல்லா வகையிலும் பிறரை அவமதிப்பதையும், பிற பண்பாட்டை, மொழியை சிதைப்பதையும் குறிக்கோளாக கொண்டவர்களின் பின்னணில் இருக்கக்கூடிய எச். ராஜா, எவ்வளவு தூரம் ஒரு முரட்டுத்தனமான அணுகுமுறை உள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
 

​vandhiyadevan


நியூட்ரினோ திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்று கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானி பத்மநாபன் ஆதாரப்பூர்வமாக பேசியிருக்கிறார். இந்த திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து திறந்த விவாதங்கள் நடத்துவது தவறு இல்லை. இதுஒருபுறம் இருக்கட்டும். உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும்கூட காவேரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து இதுவரை பிரதமர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சென்று சந்திக்க நேரம் கொடுக்கவில்லை.
 

மத்திய அரசுக்கு, பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கொடுத்த எதிர்ப்பையும் தாண்டி மக்கள் எதிர்ப்புணர்வாக மாறியிருக்கிறது. சமுதாயத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் வீதியில் இறங்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கக் கூடிய நிலையில், அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் இங்கு பிரதமர் வந்து செல்வது என்ன நியாயம். தமிழக மக்களை இந்திய குடிமக்களாக கருதுவதாக பிரதமர் இருந்தால் அந்த உணர்வை வெளிப்படுத்திருக்க வேண்டுமா இல்லையா.

 

h.raja


 

இதையெல்லாம் விடுத்து வழக்கம்போல அவதூறுகளை அள்ளி வீசி வைகோவை கைது செய்ய வேண்டும் என்று மிரட்டி பார்க்கிறார் எச்.ராஜா. சட்டம், வழக்கு, சிறை, அடக்குமுறை இதுவெல்லாம் வைகோவுக்கு புதிது அல்ல. நியாயமாக பார்த்தால் உள்ளே இருக்க வேண்டியவர் எச்.ராஜாதானே தவிர வைகோ அல்ல. வைகோ செய்த தவறு என்ன என்று எச்.ராஜா நிரூபிக்கட்டும். மக்களுக்கான பணியில் ஈடுபடுவதிலிருந்து, மக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்பதிலிருந்து பின்வாங்க வேண்டும், அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக எச்.ராஜா விடுகிற மிரட்டல்களுக்கு வைகோ மட்டுமல்ல, தமிழக மக்களும் அடிபணிய மாட்டார்கள்.
 

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடியை விமர்சிப்பதே நோக்கம். பிரதமருக்கு எதிரான போராட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறாரே?
 

காவிரி மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை நடத்தினார் ஸ்டாலின். அந்த பயணத்தின் வீடியோ பதிவு உள்ளது. அதேபோல் இந்த பயணத்தின் தொடங்கக் கூட்டம், நிறைவு கூட்டம் வீடியோ பதிவும் உள்ளது. இந்த பயணத்தில் எந்தக் கட்சிக்காரர்களும் கட்சிக் கொடியை பிடிக்கவில்லை. அனைவரும் பச்சை துண்டைத்தான் போட்டிருந்தோம். இதை வரவேற்று பொதுமக்களும் எங்களுடன் பயணித்தனர்.
 

பிரதமர் எப்போது வருகிறார். எந்த வழியாக செல்கிறார் என்பது தெரியாது என்பதால், பிரதமருக்கு நேரிடையாக சென்று கருப்பு கொடி காட்ட முடியாவிட்டாலும் தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடியை கட்டுங்கள், கருப்பு சட்டை அணியுங்கள், கருப்பு சின்னம் அணியுங்கள் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
 

அதன்படி தமிழகம் முழுக்க மக்கள் கருப்புக்கொடிகளை வீடுகளில் கட்டியிருந்தனர். கருப்பு சட்டை அணிந்திருந்தனர், கருப்பு சின்னம் சட்டையில் குத்தியிருந்தனர். கருப்புக்கொடி காட்டியது, கருப்பு பலூன் பறக்க விட்டது உலகம் முழுவதும் பேசப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் ''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இது கட்சிக்கார்கள் மட்டும் செய்ய முடியுமா? ஒட்டுமொத்த தமிழ் உணர்வுள்ளவர்கள் செய்தது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.