Skip to main content

நமது மக்களவை உறுப்பினருக்கு தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியாக மத்திய அரசு எவ்வளவு ரூபாய் ஒதுக்கியது !

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளில் உள்ள மக்கள் நமது மக்களவை உறுப்பினருக்கு தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி எவ்வளவு மத்திய அரசு ஒதுக்கியது ? எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ? உள்ளிட்ட விவரங்களை வீட்டிலிருந்தவாறே இணையதளம் மூலம் கண்டறியலாம். மக்களவையில் உள்ள மொத்த 543 உறுப்பினர்களும் தொகுதி மேம்பாட்டு நிதி எவ்வளவு மத்திய அரசு ஒதுக்கியது ? எந்த வருடத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கியது ? தொடர்பான முழு விவரங்களும் வீட்டில் இருந்தவாறே மக்கள் அனைவரும் அறியலாம். மேலும் மாநிலங்களவையில் உள்ள மொத்த  உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 ஆகும். இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர் . 
 

parliment fund



அதே போல் ராஜ்ய சபா உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு  நிதிக்கு எவ்வளவு ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது ? என்பதை இணையதளம் மூலம்  அறியலாம். இதற்கான இணையதள முகவரி : https://www.mplads.gov.in/mplads/Default.aspx ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று Options "FUND RELEASE STATEMENTS" , "EXPENDITURE REPORT" , "PRIORITY SECTOR REPORTS" உள்ளிட்ட Option -யை பயன்படுத்தி தங்கள் தொகுதிக்கு எவ்வளவு நிதியை மத்திய அரசு ஒதுக்கியது என்பதை எளிதில் அறியலாம். உதாரணமாக தற்போதைய சேலம் மக்களவை உறுப்பினராக திரு.வி. பன்னீர்செல்வம்  உள்ளார். இவருக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக 2014- 2019 நிதி ஆண்டின் கீழ் மத்திய அரசு ரூபாய் 25 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. மேலும் தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.க.கனிமொழி (சென்னை) அவர்களுக்கு  2007-2017 நிதி ஆண்டின் கீழ் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியாக 34.5 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்ற முழு தகவல் இந்த இணையதளத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து முந்தைய 2009-2014 தொகுதி வளர்ச்சி நிதி தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளத்திற்கு சென்று அறியலாம்.
 

parliment fund

பொதுமக்கள் ஏன் தங்கள் மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதி விவரங்கள் அறிய வேண்டும் ? 

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகளுக்கும் மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி வழங்கி வருகிறது. இதன் மூலம் சமந்தப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கலாம். அவ்வாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்யாதப்பட்சத்தில் மக்கள் இந்த இணைதளத்தை : https://www.mplads.gov.in/mplads/Default.aspx பயன்படுத்தி தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து சமந்தப்பட்ட தொகுதி உறுப்பினர்களிடம் கேட்கலாம். 

இது போன்று மக்கள் உறுப்பினர்களிடம் கேள்விகளை கேட்க தொடங்கினால் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி சமந்தப்பட்ட தொகுதி உறுப்பினர் முழுமையாக  தங்கள் தொகுதியில் வளர்ச்சியை காணலாம். எனவே கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணையதளம் மூலம் இன்றே கண்டறியுங்கள் உங்கள் மக்களவை தொகுதிக்கு எவ்வளவு நிதி
மத்திய அரசு ஒதுக்கியது ? இந்த நிதியை செலவிடப்படவில்லையா? மக்களவை உறுப்பினரை நேரில் சந்தித்து கேள்வி எழுப்புங்கள் ?  மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கினால் நமது தொகுதிகள் ஒவ்வொன்றும் வளர்ச்சி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


பி . சந்தோஷ் , சேலம் .

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.