Skip to main content

எம்.பி , எம்.எல்.ஏ.வில் எத்தனை சீட் கிடைக்கும் விசாரிக்கும் ஸ்டாலின்!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

"அதுசரிப்பா, இந்தியா முழுக்க 7 கட்டமா நாடாளுமன்றத் தேர்தல் நடந்துக்கிட்டு இருக்கு. இதுவரை நடந்த 3 கட்ட வாக்குப் பதிவுகளில் மக்கள் மனநிலை எப்படி இருந்ததாம்?' "இதே கேள்வியைத்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், தனக்குத் தெரிந்த அகில இந்திய அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கிட்டு இருக் காராம். 11-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலில் அன்றே 91 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. 18-ந் தேதி தமிழகம், புதுவை உள்ளிட்ட 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்க, 23-ந் தேதி 116 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடந்தது. 

 

stalin



இப்படி இதுவரை 302 தொகுதி களில் மக்கள் தங்கள் ஜனநாயக ஆயுதமான வாக்குச்சீட்டை உற்சாகமாகப் பயன்படுத்தியிருக் காங்க. அவங்க மன நிலையை கவனிச்ச அகில இந்தியத் தலைவர்கள் பலரும் மக்களிடம் அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு மௌனச் சூறாவளி வீசியதை உணரமுடியுது. அந்த வகையில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி தெரியுதுன்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்காங்க. இந்த நிலையில் தி.மு.க. தரப்பி லோ, மத்திய காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என் றும், தமிழ்நாட்டில் எம்.பி.- எம்.எல்.ஏ. இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமா இருக்கும்னு கணக்குப் போட்டிருக்காங்க. அதோடு தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்றும் பலமான எதிர் பார்ப்பு நிலவுது. சபரீசனின் ஓ.எம்.ஜி. டீம் மூலம் 10-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் சீட் வாங்கிய தால், அவர்களிடமும் அமைச்சர் பதவி குறித்த எதிர்பார்ப்பு பலமாவே இருக்கு. இதற்கிடையே நெல்லை தி.மு.க. வேட்பாளரான  ஞானதிரவியம், தேர்தலில் 50 "சி'யை அள்ளி இறைச்சேன். ஆனால் அதில் பெரும் பகுதி கீழ்மட்டம் வரை போய்ச் சேராமல், அங்கங்கே முடங்கிடிச்சி. தேர்தல் முடிவு வந்ததும், அறிவாலயத்தில் பஞ்சாயத்து வைப்பேன்னு சொல்லிக்கிட்டு இருக்காராம்.''
 

vijayakanth



"நானும் தேர்தல் தொடர்பா ஒரு தகவலைச் சொல்றேன். தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த், கடைசி நேரத்தில் ஒருநாள் பிரச்சாரத்துக்கு வந்தார். அவருடைய குடும்ப மருத்துவர்கள் தடுத் தும், அவர் பிரச்சாரக் களத்துக்கு வந்து மைக் கைப்  பிடிச்சதால், தொண்டையில் கடும் இன் பெக்ஷன் ஏற்பட்டிருக்குதாம். அவர் சரியா பேசத் தொடங்குற நேரத்தில் அவரைப் பிரச்சாரத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போய் இப்படி இன்பெக்ஷ னுக்கு ஆளாக்கிட்டீங்களே. அவரை மேல்சிகிச் சைக்காக உடனடியா அமெரிக்காவுக்கு அழைச் சிக்கிட்டுப் போங்கன்னு மருத்துவர்கள் பிரேம லதாவை எச்சரிக்கை செஞ்சிருக்காங்களாம். 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இருக்கேன்னு பலத்த யோசனையில் இருக்குதாம் கேப்டன் குடும்பம்.
 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.