Skip to main content

ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி??? இந்த வழிகளை பயன்படுத்தி ரகசிய கேமராக்களை கண்டறியலாம்...

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
hidden cameras



அண்மையில் பெண்களின் தங்கும் விடுதியின் ஃப்ளெக் பாயிண்ட், குளியலறை, விளக்கு, ஹேங்கர் போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி அந்த விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார். இப்படியான கீழ்த்தரமான செயல்களெல்லாம், கேவலமான ஆசைகளாலேயே நிகழ்கின்றன. சிலர் இதை வணிகமாகவும், மிரட்டவும் பயன்படுத்துகின்றனர் என்பதும் அதிர்ச்சிகரமான தகவல்.
 

பொதுவாக ரகசிய கேமராக்களை எந்தந்த இடங்களில் வைக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன...
 

கதவுகள், சுவரின் ஒரு மூலை, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், மின் விளக்கு, புகைப்பட ஃப்ரேம்கள், டிஷ்யூ பெட்டிகள், பூக்குவளை, பூச்செண்டு, புகை கண்டறியும் கருவிகள் இப்படி முன்புறம் ஒரு சிறுதுளை, அதன்பின்னால் ஒரு பேட்டரியோ அல்லது வயரோ செல்வதற்கான இடம் இவை இருக்கும் எந்த இடங்களிலும் ரகசிய கேமராக்களை வைக்கமுடியும். இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான். ஏனென்றால் இதுதான் அநேகமான கிட்டதட்ட அனைத்து இடங்களிலுமே இருக்கிறது. ட்ரெயல் ரூம்களிலுள்ள ஆளுயரக்கண்ணாடியை கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன்பின்னணியில் இருப்பவர்கள் நமது செயல்களை கவனிக்கமுடியும்.


 

hidden cameras


 

அதை எப்படி கண்டுபிடிப்பது என பலருக்கு கேள்வி இருக்கலாம். முதலில் கண்ணாடி... 
 

உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்னொன்று சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது. 
 

இதுதவிர இன்ஃப்ராரெட் கேமராக்களை நீங்கள் உங்கள் கைபேசி கேமராக்கள் வழியாகவே கண்டறியமுடியும். கேமராவை ஆன்செய்து ஒவ்வொரு இடமாக நகர்த்தினால் அங்கு கேமரா இருந்தால் சிவப்பு நிற விளக்கு எரியும். அதை வைத்து கண்டறியலாம். ரிமோட்டின் மேல் பகுதியிலுள்ள விளக்குபோன்ற பகுதிக்கு முன் செல்போன் கேமராவை வைத்து படமெடுத்தபடியே எந்த பட்டனையாவது அழுத்தினால் அதில் சிவப்பு நிற ஒளி எரியும். அவைதான் இன்ஃப்ராரெட். இது சாதரண கண்களுக்கு தெரியாது. 
 

தேவை இல்லாமல் எதாவது வயர் சென்றால் அந்த இடத்தை சோதித்து பாருங்கள். “ஹிட்டன் கேமரா டிடெக்டர்” (hidden camera detector) என்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம். இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம். நீங்கள் ஒருவேளை அதை உறுதிசெய்தால் உடனே அதை பதிவுசெய்யுங்கள், காவல்துறையை, சைபர் க்ரைமை அணுகுங்கள். நமது பாதுகாப்பு, நமது உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி அத்துமீறுபவர்களுக்கு தண்டனை கொடுப்பது நமது கடமை.

 

 


 

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

 ‘நான் தான் மத்திய அரசு அதிகாரி பேசுறேன்...’- போலீஸை மிரட்டிய போலி அதிகாரி

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

the fake officer who threatened the police

 

மத்திய அரசு அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் (57). இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நாக சுப்பிரமணியன் அந்த பணியை முடிப்பதற்காக டெல்லி மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து இணை செயலாளர் பேசுவது போல் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவருக்கு போன் செய்துள்ளார். அதன் பின்பு, அந்த அதிகாரியிடம் அவர்,அந்த நிறுவனம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்குமாறு மிரட்டும் தொனியில் பேசி போனை துண்டித்து விட்டார்.

 

அதன் பின்னர், நாகசுப்பிரமணியன் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து டெல்லியில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகமடைந்து நாகசுப்பிரமணியை விசாரித்துள்ளனர். மேலும், நாகசுப்பிரமணியன் எண்ணையும், டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரி எண்ணையும் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்த்துள்ளனர். அப்போது, நாகசுப்பிரமணியன் அதிகாரி போல் பேசியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. 

 

மேலும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நாகசுப்பிரமணியனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், நாகசுப்பிரமணியன் நிறுவனத்தின் வழக்கு ஒன்று மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக அந்த வழக்கு கிடப்பில் உள்ளதாக கூறப்படும் அந்த வழக்கை விரைந்து முடிக்க கட்டுமான நிறுவனம் இவரை நியமித்துள்ளது. அதனால், நாக சுப்பிரமணியன் அந்த பணியை முடிப்பதற்காக டெல்லி மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து இணை செயலாளர் பேசுவது போல் காவல் ஆணையர் அலுவலகத்தில் பேசியுள்ளார் என்பது தெரியவந்தது.