Skip to main content

செல்போன் மற்றும் லேப்டாப் வழியாக கரோனா பரவாமல் தடுப்பது எப்படி..?

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் நமது கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உலகம் முழுவதும் மருத்துவர்களும், அரசாங்கங்களும் வலியுறுத்தி வரும் நிலையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் மற்றும் லேப்டாப் வழியாகவும் கரோனா பரவுவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

how to clean your phone to ward off Corona virus

 

 

நாம் அன்றாட வாழ்க்கையில் அதிகளவு பயன்படுத்தும் மின்னணு சாதனங்களான செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் மேற்பரப்பில் கரோனா வைரசால் இரண்டு நாட்கள் வரை உயிர்வாழ முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே நம் கைகளை எந்த அளவு சுத்தமாக வைத்துக்கொள்கிறோமோ, அதே அளவு நம் கைகளில் வைத்துப் பயன்படுத்தும் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும் அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை எவ்வாறு சுத்தப்படுத்த வேண்டும் எனவும் சில நிறுவனங்கள் அறிவுரை வழங்கியுள்ளன. அதன்படி, 

மின்னணு பொருட்களைச் சுத்தம் செய்யும்போது செய்யக் கூடாதவை;

செல்போன் மற்றும் லேப்டாப்பில் நேரடியாகக் கிருமிநாசினிகளைத் தெளிப்பதோ, ஸ்ப்ரே கேன் (Spray Can) மூலம் தெளிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். மேலும், செல்போன் மற்றும் லேப்டாப் மேற்பரப்பைச் சேதப்படுத்தும் வகையிலான கடினமான பொருட்களால் அவற்றைத் துடைப்பதையும் தவிர்க்க வேண்டுமென மின்னணு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. வீட்டு உபயோகப்பொருட்களை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகளை செல்போன் மற்றும் லேப்டாப் மீது பயன்படுத்தக் கூடாது. 

மின்னணு பொருட்களைச் சுத்தம் செய்யும்போது செய்ய வேண்டியவை;

சுத்தம் செய்யும் போது செல்போன் மற்றும் லேப்டாப்பை அணைத்துவிட்டு அதன் பிறகே அவற்றின் மீது கிருமிநாசினிகளை உபயோகிக்க வேண்டும். 

குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் அடிப்படையிலான துடைக்கும் தாள்களை (Wet Wipes) பயன்படுத்தலாம்.

திசு பேப்பர் (Tissue Paper) மூலம் கிருமி நாசினியைத் தொட்டு, அதனை வைத்து சுத்தம் செய்யலாம்.

Micro fiber துணியில் கிருமி நாசினியைத் தொட்டு, அதன் மூலமாகவும் சுத்தம் செய்யலாம்.

Clorox Wipes -ஐக் கொண்டு தொலைப்பேசிகளைச் சுத்தம் செய்யலாம் என ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

அதேபோல தொலைப்பேசியின் மேற்பரப்பிலிருந்து முகத்திற்கு வைரஸ் பரவுவதைத் தடுக்க ஹெட்போன்களை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹெட்போன்களையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

வேறொருவரின் தொலைபேசி அல்லது மடிக்கணினியை நீங்கள் தொடாமல் இருப்பதும், அதேபோல், உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியை மற்றவர்களுக்கு வழங்குவதைத் தவிர்ப்பவதும் பாதுகாப்பானதாகும்.  

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.