Skip to main content

துரோகத்தால் வீழ்ந்த மம்தா... மக்களவை தேர்தலில் நடந்த சதி...

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிக இடம் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை ருசித்த பாஜக குஜராத், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, டாமன் மற்றும் டையூ, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது. இப்படி பல மாநிலங்களை க்ளீன்ஸ்வீப் செய்திருந்தாலும் அவற்றை விட பாஜக -விற்கு அதிக மகிழ்ச்சியை தருவது மேற்கு வங்கத்தில் அந்த கட்சி பிடித்த இரண்டாவது இடம் தான்.

 

how bjp conquer west bengal over mamta's influence

 

 

மம்தாவின் கோட்டையாகவும், பாஜக நுழைய முடியாததாகவும் இருந்த ஒரு மாநிலம் மேற்கு வங்கம். கம்யூனிஸ்ட்களும், திரிணாமூல் காங்கிரஸும் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த மேற்கு வங்கம் எனும் கோட்டையில் தனது முதல் அடியை அழுத்தமாக எடுத்து வைத்துள்ளது பாஜக.

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், சிபிஎம் 2, காங்கிரஸ் 4, பாஜக 2 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. 17 சதவீத வாக்குகளை வென்ற பாஜக, இம்முறை 2ஆம் இடத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. இப்படி மம்தாவிற்கு சமமாக பாஜக வெறும் ஓரிரண்டு ஆண்டுகளில் மாறிவிடவில்லை. ஒரு காலத்தில் மாவட்டம் தோறும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டு, அவை கிராமம் கிராமமாக கொண்டு செல்லப்பட்டு. பள்ளி குழந்தைகள் வரை ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் பயிற்றுவிக்கப்பட்டன. பல ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது பாஜக.

அதுமட்டுமல்லாமல் அந்த மாநிலத்தில் உள்ள 27 சதவீத இஸ்லாமிய வாக்குகள் எப்போதும் மம்தா கட்சிக்கே கிடைக்கும். எனவே  இஸ்லாமியர்களை காக்கும் ரட்சகனாக திரிணாமூல் கட்சி தன்னை காட்டிக் கொண்டது. அதனால் பெரும்பான்மை இந்துக்களின் முழு கோபமும் திரிணாமூல் காங்கிரஸ் பக்கம் திரும்பிவிட்டது. இதனை சரியாக பயன்படுத்திய பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மோடி ஆகியோர் தங்களது வலிமையான பிரச்சாரங்கள் மூலம் மம்தா எதிர்ப்பு வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பினர்.

ஆனால் இந்த தேர்தல் பாஜகவுக்கு கை கொடுத்தது அவர்களின் உழைப்பு மட்டுமல்ல, மம்தா கட்சியினரின் நம்பிக்கை துரோகமும் தான். மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்து வந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்கள் மத்தியில் அண்மை காலங்களில் நடந்து வரும் பனிப்போரும் இந்த தோல்விக்கு ஒரு காரணம். கட்சிக்குள் கோஷ்டி மோதல் அதிகரித்ததால், அதிருப்தி அடைந்த தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்டு பாஜக.வுக்கு வாக்களித்துவிட்டனர் என அக்கட்சி மூத்த தலைவர் ஒருவரே தெரிவித்தார்.

ஒருபுறம் கட்சி நிர்வாகிகள் கோஷ்டி மோதல் நடக்க மற்றொரு பக்கம் முகுல் ராய் போன்ற பல முக்கிய தலைவர்கள் மம்தா கட்சியை விடுத்தது பாஜகவுக்கு மாறினர். எனவே மம்தாவின் வியூகங்களை சரியாக அறிந்த இவர்கள் மம்தாவை தோற்கடிக்கும் யுக்திகளையும் சரியாக கையாண்டனர். இதன் வெளிப்பாடாகவே மேற்கு வங்கத்தில் ஒற்றை இலக்கத்தில் வாக்கு வங்கி வைத்திருந்த பாஜக இன்று 40 சதவீத வாக்குகளை தனது வசமாக்கியிருக்கிறது. பாஜக தொண்டர்களின் உழைப்பு , சொந்த கட்சியினரின் துரோகம் என பலவற்றால் தனது வாக்கு வங்கி சரிந்தாலும், அடுத்த தேர்தலுக்குள் அதனையெல்லாம் சரி செய்து மீண்டும் மம்தா வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அவரின் உண்மை விசுவாசிகள். 

 

 

 

Next Story

மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
West Bengal CM and TMC chairperson Mamata Banerje incident

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் உள்ள வூட்பர்ன் பிளாக்கில் இருந்து கொல்கத்தாவில் உள்ள விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

West Bengal CM and TMC chairperson Mamata Banerje incident

மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. இந்த கடினமான தருணத்தில் இருந்து மம்தா பானர்ஜி மீண்டு விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டி’ - மம்தா பானர்ஜி அதிரடி!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
"Trinamul alone in West Bengal" - Mamata Banerjee in action

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.

அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்திருந்தார். மேலும் இந்த கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

vck ad

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என்று நான் முன்பிருந்தே கூறி வருகிறேன். மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது. ராகுல் காந்தியின் நடைப்பயணம்  எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது. ஆனால் அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.