Skip to main content

குழந்தையை சட்டப்படி தத்து எடுப்பது எப்படி?

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

குழந்தைச்செல்வங்கள் இல்லா வீடு வாழும் காலத்திலேயே நரகத்தை அனுபவிப்பதற்குச் சமம். அதனால்தானோ என்னவோ, வள்ளுவப்பெருந்தகையாரும் 'பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற' என்றார். ஆனால், மாறி வரும் பொருளாதாரக் கொள்கைகள், கலாச்சார சீரழிவுகள், உணவுப் பழக்கவழக்கங்களால் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழந்து வருகின்றனர். ஆண்களும் மலட்டுத்தன்மை பிரச்னைக்கு இலக்காகின்றனர்.

 

child adoption


மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்டும் குழந்தை பாக்கியம் இல்லாத சூழ்நிலைகளில்தான் தம்பதியர், சட்டப்படியாக குழந்தையை தத்து எடுக்கும் முடிவுக்கு வருகின்றனர். அல்லது சிலர், நாமக்கல் ராசிபுரத்தில் அமுதா என்ற இடைத்தரகர்களை நம்பி சட்ட விரோதமாக குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
 


இந்தியாவில் குழந்தையில்லா தம்பதியர்கள், சட்டப்படியே குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள எல்லா வழிமுறைகளும் உள்ளன. ஆனால் பலரும் அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை அறிவதில்லை என்பதுதான் உண்மை. நக்கீரன் வாசகர்களுக்காக, குழந்தையை சட்டப்படி தத்து எடுப்பது எப்படி என்பது குறித்து சொல்கிறோம்.
 


முந்தைய காலங்களில் அரசர்கள், ஜமீன்தார்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய சொத்துகளை பார்த்துக் கொள்ளவும், ஆண்டு அனுபவிக்கவும், வாரிசு இல்லாத சூழ்நிலையில் ஒரு மகனையோ, மகளையோ தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு தத்தெடுத்தலுக்கு இப்போது அரசே, சட்டப்பூர்வமான வடிவம் கொடுத்திருக்கிறது. 
 


தத்து எடுத்தலை இரண்டு வழிமுறைகளில் மேற்கொள்ளலாம். 
 


(1) தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள், தத்து கொடுக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தத்தெடுப்பது. இந்தமுறை மிகவும் எளிதானது. 
 


இந்து, பவுத்தம், சீக்கியம், ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் 'இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம்-1956' (Hindu adoptions and maintenance act, 1956) மூலமாகவும், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சார்ந்தவர்கள் 'கார்டியன்ஸ் அன்டு வார்ட்ஸ் ஆக்ட்-1890' (Guardians and Wards Act, 1890) மூலமாகவும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.
 


இதற்கான வழிமுறைகள் எளிதானவையாகும்.
 


தத்து எடுக்கும் மற்றும் கொடுக்கும் பெற்றோர்கள், இதன்மூலம் தத்தெடுப்பதற்கான பத்திரம் (Adoption Deed) ஒன்றினை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், பதிவு செய்வதற்குமுன் இதன் சம்பிரதாயங்களை முடிப்பது அவசியம். 
 


சம்பிரதாய முறைப்படி எவ்வாறு திருமணங்கள் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறதோ, அதேபோல தத்தெடுப்பதும் பதிவு செய்யப்படுகிறது. Adoption Deed பதிவு செய்யப்படுவதே தத்து எடுப்பதற்கான சாட்சி ஆகும்.
 


(2) தத்து எடுப்பதற்கான மற்றொருவழி சற்று அரிய வழிமுறை ஆகும். ஏனெனில், தற்போதைய காலகட்டத்தில் யாரும் தன் குழந்தைகளை தத்து கொடுப்பதற்கு முனைவதில்லை. 
 


தத்து எடுக்கப்படும் குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் இந்த சட்ட வழிமுறைகள் சற்றே கவனத்துடன் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
 


இந்த வழிமுறையானது பின்வரும் சட்டங்களைப் பின்பற்றிச் செயல்படுகிறது.
 


1. Guidelines Governing Adoption of Children 2015 
 

2. Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000 
 

3. Hague Convention on the Protection of Children and Co-operation in Respect of Inter-country Adoption Act, 1993.



குழந்தையை தத்து எடுக்க தகுதிகள்:
 


தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.
 


திருமணம் ஆனவர்களும், திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.
 


தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.
 

தனி ஆண்மகன், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
 


திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகே தத்தெடுக்க முடியும்.
 


வயது விதிமுறைகள்:
 


4 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது 90க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுவே தனி பெற்றோராக இருக்கும்பட்சத்தில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 


4 முதல் 6 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் கணவன், மனைவி ஆகிய இருவரின் கூட்டு வயது 100க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 50 வயது வரை இருக்கலாம்.
 

child adoption


8 முதல் 18 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது வரம்பு 110க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 55 வயது வரை இருக்கலாம்.
 


குழந்தை மற்றும் தத்து எடுக்க விரும்பும் பெற்றோரில் யாரேனும் ஒருவரது வயது இடைவெளி 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். 



4 குழந்தைகளுக்கு மேல் ஒருவர் / தம்பதியினர் தத்தெடுக்க முடியாது.
 


இந்தியா மற்றும் வெளிநாட்டவர் இந்தமுறை மூலம் முறையான அனுமதியுடன் தத்தெடுக்கலாம்.



செயல்முறைகள்:
 


1. தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
 

2. 'காரா' (CARA- Central Adoption Resource Authority) வலைதளத்தில் (cara.nic.in) அதற்கான விண்ணப்பம் கிடைக்கும். இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம்.
 

3. விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும். 
 

4. அரசாங்கத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட அனாதை இல்லம், ஆதரவற்ற அமைப்புகள், தன்னார்வ விடுதிகள் (என்ஜிஓ) மூலம் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் புகைப்படங்கள் வலைதளத்தில் காண்பிக்கப்படும்.
 

5. தாங்கள் விரும்பும் குழந்தையை தேர்வு செய்ய முடியும்.
 

6. இதற்காக அமைக்கப்பட்ட குழு, தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் மருத்துவ, உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச்சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்.
 

7. தகுதியான பெற்றோர் குழந்தையை தத்து எடுத்தவுடன் அரசு சாரா இயக்கம் அல்லது இல்லம் குழந்தையை தத்து கொடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இவ்வாறு குழந்தையைத் தத்தெடுக்கலாம். 
 


இதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைமுறை அவர்களின் 18 வயது வரை கண்காணிக்கப்படும். 
 

இடையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், குழந்தையை திரும்பப்பெற்றுக்கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

 

 

 

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.