Skip to main content

பத்தாயிரம் பெண்களின் நிர்வாண குளியல் வீடியோ; ஜப்பானை அதிர வைத்த மோசடி கும்பல்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

hot water spring japan voyeurism

 

இந்தியாவிற்கு காஷ்மீர், சிம்லா, ஊட்டி, கொடைக்கானல் போன்றவை எப்படி இயற்கையின் வரங்களாக கிடைத்ததோ, அதே போல் ஜப்பானுக்கு அந்த நாட்டில் உள்ள வெந்நீரூற்றுகள். நாம் கோடை காலங்களில் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் செல்வது போல் குளிர்நாடான ஜப்பானில் அங்கு வாழும் மக்கள் அங்கு இயற்கையாகவே அமைந்த வெந்நீரூற்றுகளுக்கு சென்று நீராடி மகிழ்வதை வழக்கமாக செய்து வருகிறார்கள். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் ஜப்பானின் வெந்நீரூற்றுகளின் மீது தீராத மோகம் உண்டு. 

 

ஜப்பானுக்கு செல்லும் பல வெளிநாட்டு பயணிகள் வெந்நீர் குளியலை மிஸ் செய்வதே இல்லை. ஜப்பானில் பொதுவாக ஒரே இடத்தில் பல நீரூற்றுகள் இருப்பதால் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் குளிப்பது தான் பொதுவான நடைமுறையாக இருந்தாலும் சில இடங்களில் சேர்ந்து குளிப்பதும் உண்டு. அப்படி தனியாக குளிக்கும்போது கொஞ்சம் சுதந்திரமாக குளிப்பதை விரும்பும் சில பெண்கள் ஆடை இல்லாமல் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். 

 

இப்படி பெண்கள் ஆடை இல்லாமல் குளிப்பதை கடந்த 30 வருடங்களாக ஒரு கும்பல் திருட்டுத்தனமாக மறைந்திருந்து புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து வந்திருக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக செயல்பட்டு வந்த இந்த திருட்டு கும்பலை சமீபத்தில்தான் அதிரடியாக கைது செய்திருக்கிறது ஜப்பான் காவல்துறை. ஜப்பான் காவல்துறையின் விசாரணையில் 50 வயதான கரின் சைடோ என்பவன் தான் அந்த 16 பேர் கொண்ட மோசடி கும்பலின் தலைவன் என்பதும், கரின் சைடோ தனது இருபது வயதில் இருந்து இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. இருபது வயதில் இந்த தொழிலைத் தொடங்கிய கரின் சைடோ, இதுவரைக்கும் 10000 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். அவை அத்தனையும் வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை மறைந்திருந்து எடுக்கப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.  

 

பெண்களை மறைந்திருந்து ரசிப்பதும் வீடியோ எடுப்பதும் அதனை விற்பனை செய்வதும் வாயூரிசம் எனப்படும் ஒரு வகையான குற்றச்செயலாகும்.  இம்மாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் உலகம் முழுவதும் ஒரு பெரும் கிரைம் நெட்வொர்க்காக செயல்பட்டு வருகிறார்கள். கரின் சைடோவும் அந்த நெட்வொர்க்கின் மூலமாகவே செயல்பட்டு வந்திருப்பதைக் கண்டுபிடித்த ஜப்பான் காவல்துறை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.