Skip to main content

எடப்பாடி ஸ்டைல் தெரிந்த ஒரே நபர் இவர் தான்! இ.பி.எஸ் டூர் ரகசியம்!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெளிநாடு செல்லும் அ.தி.மு.க. முதல்வர் என்ற பெயரைப் பெறுகிறார் எடப்பாடி. ஜெ.வை சிகிச்சைக்காகக்கூட வெளிநாடு அழைத்துச் செல்லாத நிலையில், எடப்பாடியின் பயணம் எதிர்பார்ப்பையும் சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது.



28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் எடப்பாடி நேராக அமெரிக்கா போய் தமிழரும் கூகுள் நிறுவனத்தின் தலைவருமான சுந்தர் பிச்சையை சந்திக்கிறார். அதற்குப் பிறகு பஃபலோ ஸ்டேட் (எருமை மாடுகளின் மாநிலம்) என்கிற இடத்திற்கு செல்கிறார்.

eps

அங்கிருந்து நியூஜெர்ஸி மாநிலத்திற்கு செல்கிறார். அதன்பிறகு கிரேட் பிரிட்டன் எனப்படும் இங்கிலாந்து நாட்டிற்கு செல்கிறார். இதில் நியூஜெர்ஸி என்கிற இடத்தில் ஒரு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை பார்வையிடுகிறார். அமெரிக்காவில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். செப்டம்பர் 9 காலையில் சென்னை திரும்புகிறார். இதுதான் அவரது பயணத்திட்டம் பற்றி அரசு வட்டாரங்களில் பரிமாறப்படும் தகவல்கள்.

 

admk



13 நாட்கள் சுற்றுப் பயணத்தின் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. முதல்வருடன் பதினோரு பேர் கொண்ட குழு செல்கிறது. அதில் முதல்வரின் உதவியாளர் கிரிதரன், முதல்வரின் செயலாளர்களான விஜயகுமார் ஐ.ஏ.எஸ்., சாய்குமார் ஐ.ஏ.எஸ். ஆகியோருடன் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, அந்தந்த துறைகளின் செயலாளர்கள் இவர்களோடு மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஆகியோர்தான் இந்த பதினோரு பேர் குழு. இவர்கள் ஒரே நேரத்தில் எடப்பாடியுடன் பயணிக்க மாட்டார்கள். எங்கே முதல்வருடன் சேர வேண்டும் என தனித்தனியாக நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் அவருக்கு மிக நெருக்கமான அமைச்சர்கள் எனச் சொல்லப்படும் தங்கமணியும், வேலுமணியும் இடம்பெறாதது, கோட்டை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிதரன் மட்டுமே முழுமையாக இருப்பாராம். அதுதான் மேட்டர்'' என்கிறார்கள் மேல்மட்டத்தில்.

 

admk



ஜெ.வின் அமைச்சரவையில் எடப்பாடி முதன் முதலாக அமைச்சர் பதவி பெற்றபோது அவருடன் இணைந்தவர்தான் கடலூரைச் சேர்ந்த அரசு ஊழியரான கிரிதரன். கூவத்தூர் முகாமில் 32 எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி முழுவதுமாக கவனித்துக் கொண்டபோது, அதற்கான ஏற்பாடுகளை நிறைவாக செய்தவர் கிரிதரன்தான்'' என்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு விளம்பரத்தில் வேலுமணி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில் எடப் பாடியுடன் முட்டல் மோதல் வெளிப்படையானது. தங்க மணி கடந்த ஒரு வாரமாக எடப்பாடி கலந்துகொள்ளும் எந்த விழாவிலும் தலைகாட்டாமல் தவிர்க்கிறார். எனவே இவர்கள் இருவரையும் வெளிநாட்டுப் பயணத்தில் எடப்பாடி புறக்கணித்து விட்டாலும் அவர்களுக்கிடையிலான நடைமுறை விவகாரங்கள் தொடர்கின்றன. அதுபற்றி நன்கறிந்த உதவியாளர் கிரிதரனையும் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்.சையும் எடப்பாடி அழைத்துச் செல்கிறார். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

ஜெ. ஆட்சியில் நத்தம், ஓ.பி., வைத்திலிங்கம் ஆகியோர் கொடுத்த மாதாந்திர தவணையை, கார்டனில் ஜெ.விடம் கொடுக்கும் பொருளாளராக இருந்தார் எடப்பாடி. சசிகலா வெளியேற்றப்பட்ட நேரத்தில் நடந்த ஏற்பாட்டை மறுபடியும் சசிகலா கார்டனுக்கு வந்ததும் கண்டுபிடித்து விட்டார். அதில், ஜெ.விடம் தந்தது போக மீதமிருந்தவை கரூர் அன்புநாதன் மூலம் வெளிநாட்டில் முதலீடானது. இதனால், ஓ.பி., நத்தம், வைத்திலிங்கம் ஆகியோர் போயஸ் கார்டனில் விசாரிக்கப்பட்டார்கள். ஜெ. பாணி தண்டனைகளும் நிறைவேறின. எடப்பாடி இதில் சிக்கவில்லை. காரணம், அவர் அப்ரூவராகிவிட்டார். இதுதான், ஜெ. மரணத்திற்குப் பிறகு, ஓ.பி.எஸ்.ஸிடமிருந்த முதல்வர் பதவி, எடப்பாடி பக்கம் வந்ததற்கும் காரணம். சசிகலாவுக்கு சிறைத் தண்டனை கிடைத்த நிலையில், கூவத்தூர் முகாமில் எடப்பாடி கச்சிதமாக காய் நகர்த்தியும், ஜெ. ஆட்சிக்கால சேமிப்புகளை இறக்கியும் சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்று முதல்வர் பதவியை அடைந்தார். இதுதான் எடப்பாடி ஸ்டைல் இதையெல்லாம் தெரிந்த ஒரே ஜீவன் அவரது உதவியாளர் கிரிதரன்தான்.


எடப்பாடி முதல்வர் ஆனதும் அந்த கிரிதரன் மூலமாகவே வேலுமணியையும் தங்கமணியையும் டீல் செய்தார். சேலத்தை சேர்ந்த திரிவேணி எர்த் மூவர்ஸ் மூலம் பா.ஜ.க.வை சமாதானப்படுத்தியதும் சசிகலாவை தூக்கி எறிந்தார் எடப்பாடி. அதன்பிறகு எடப்பாடிக்கு எல்லாமாக இருந்த வேலுமணி, தங்கமணியுடனும் தற்போது விவகாரமாகியுள்ளது. அதை சரி செய்யத்தான் கிரிதரன் துணையுடன் எடப்பாடி பாரின் விசிட்டிற்கு செல்கிறார்'' என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்க மானவர்கள். தங்கமணி, வேலுமணி, எடப்பாடி மூவரும் ஒரு வகையில் உறவினர்கள் மூவரும் கிரிதரன் வீட்டு திருமணத்திற்கு லம்ப்பாக உதவியிருக்கிறார்கள்.


இந்நிலையில், ""திரிவேணி எர்த் மூவர்சை சேர்ந்த நிர்வாகிகளான கார்த்திகேயனும் பிரபாகரனும் முன்கூட்டியே அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று எடப்பாடிக்காக காத்திருக்கிறார்கள். இது எடப்பாடியின் பயணத்தில் உள்ள ரகசிய விவகாரங்களை வெளிப்படுத்துகிறது'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத் தினர். பயண நோக்கத்திற்கான ஏஜெண்ட்டுகளாக இவர்கள் முன்கூட்டியே சென்றிருப்பதாகத் தெரிவிக் கிறார்கள். இதைப் பற்றி கிரிதரனிடம் அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டோம். நாம் அவர் மீது எழும் குற்றச்சாட்டுகளை சொன்னபோது பலமாக சத்தம் போட்டு சிரித்தார். அவர் எந்த பதிலையும் சொல்ல மறுத்து விட்டார்.

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.