Skip to main content

அமித்ஷாவை விமர்சனம் செய்தாலும் எடப்பாடியைக் காப்பாற்றும் அந்த ஒருவர்; பாஜகவை எதிர்க்கத் துணிந்தாரா எடப்பாடி...? - எஸ்.பி. லட்சுமணன் அலசல் பேட்டி

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

lkj

 

மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வருகையின் போது ஏன் சந்தித்துப் பேசவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் வரும்போதெல்லாம் அவர்களைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணனிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 


தமிழகத்திற்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். இதில் பிரதமரை எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் சந்தித்தார்கள். மோடிக்குப் பிறகு தமிழகம் வந்த அமித்ஷாவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பன்னீர்செல்வம் மட்டும் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில் இதுதொடர்பாக பேசிய எடப்பாடி, தமிழகம் வரும்போதெல்லாம் அமித்ஷாவைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவை ஏற்பட்டால் பேசுவது தனி, அடிக்கடி பேச வேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள் என்று காட்டமாகக் கேட்டிருந்தார். இவரின் இந்தப் பேச்சை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?

 


இந்த சம்பவத்தை வைத்து எடப்பாடி பாஜகவை எதிர்க்கத் துணிந்துவிட்டார், எதிர்த்துவிட்டார் என்று அவருக்கு வேண்டப்பட்டவர்கள் தொடர்ந்து செய்தி பரப்பி வருகிறார்கள். அதில் சிறிதும் உண்மையில்லை. மோடி திண்டுக்கல் வந்தபோது அங்கு சென்ற எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பினர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். இரண்டு தரப்பையும் மோடி தனியாகச் சந்தித்துப் பேசவில்லை. அதைப்போல அமித்ஷா அடுத்த நாள் சென்னை வருவது உறுதியான நிலையில் பிரதமரை அனுப்பிவிட்டு அன்று இரவே அவசர அவசரமாக எடப்பாடி சென்னை வந்தார். 

 

அவர் சென்னை வந்தது கூட பெரிய விஷயமில்லை, நாம் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம், அவரைச் சந்திக்க மூத்த நிர்வாகிகள் 5 பேரை கையோடு அழைத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பன்னீர்செல்வம் கூட அமித்ஷாவுக்குக் கைகொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எடப்பாடி அவரை பார்க்கக் கூட முடியவில்லை. அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று எடப்பாடியால் கூற முடியுமா?

 

இந்நிலையில், நாங்கள் அமித்ஷாவை வரும்போதெல்லாம் சந்திக்க வேண்டும் என்று அவசியம் இல்லை; எங்களுக்குத் தேவை ஏற்பட்டால்தான் பார்ப்போம் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தார்மீக கோபம் யாருக்கு இருக்க வேண்டும் என்றால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இருந்திருக்க வேண்டும். அவர் எங்களிடம் சந்திப்புக்கு அனுமதி கேட்டார். நாங்கள்தான் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்திருக்க வேண்டும். 

 

இந்த உண்மை அண்ணாமலைக்குத்தான் தெரியும்.தங்கள் தலைவர் அமித்ஷா மீது அவதூறு வந்தால் கூட ஏன் இவர் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. எடப்பாடி கூறிய இந்த ஒரு வார்த்தையால் அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வரும் போதெல்லாம் ஏன் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்படி என்றால் ஏன் சந்திக்க அனுமதி கேட்டீர்கள், அதை ஏன் பொதுவெளியில் மறைக்கிறீர்கள். 

 

தமிழக மக்களைத் தாண்டி அதிமுக தொண்டர்களிடமும் இந்த விஷயங்களை எடப்பாடி பழனிசாமி மறைக்கிறார். இதை வெளிப்படையாகக் கூற அவருக்கு என்ன தயக்கம் வரப்போகிறது. அனுமதி கேட்டோம்; கிடைக்கவில்லை. இல்லை அடுத்த முறை பார்ப்பதாகக் கூறியுள்ளார் என்று கூறியிருக்கலாம். ஆனால் முற்றிலும் உண்மையை மாற்றிக் கூறுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எடப்பாடி சொல்லும் பொய்யை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது. 

 

இல்லை என்றால் இந்த விஷயத்தில் எதற்காக பாஜகவை தொடர்பு படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இதைப் பற்றிய எந்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை.தங்கள் தலைவரை ஒருவர் விமர்சித்துப் பேசினாலும் மயான அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலையை எதற்காக பாஜகவினர் எடுத்துள்ளனர் என்று தெரியவில்லை. அதிமுகவை பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது என்று சொல்வதற்கு நேர் எதிரான பார்வையாக இதனை மக்கள் பார்த்து வருகிறார்கள்.

 

 

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.