Skip to main content

பொய் சொல்வதற்கு எச்.ராஜா கூச்சப்படவே மாட்டாரா???

Published on 26/07/2018 | Edited on 18/02/2019

பொய் சொல்வதில் பாஜக தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடியே மிகச்சாதாரணமாக பொய்யான தகவல்களை சொல்லிவிட்டு, அது பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும் எந்தக் கவலையும் படமாட்டார்.

 

h raja


 

பொய் சொல்வதில் அவரை மிஞ்ச வேண்டும் என்று பாஜகவின் முதல்வர்களும், மாநில அளவிலான தலைவர்களும் போட்டியிடுகிறார்கள். அவர்கள் சொல்லும் பொய்கள் காமெடியாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பொழுபோக்கு அம்சமாகி வருவதும் அவ்வப்போது நடப்பதுதான்.

 

 

 

தமிழகத்தில் எச்.ராஜா வாயைத் திறந்தாலே பொய்தான் என்கிற அளவுக்கு புகழ்பெற்றுவிட்டார். இதற்கு முன் எத்தனையோ பொய்களில் அம்பலப்பட்டிருக்கிறார். இவர் சொல்லும் பொய்கள் பல சமயங்களில் மிகவும் கீழ்த்தரமாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், மிரட்டும் வகையிலும் இருந்திருக்கின்றன.

 

இன்று அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மிகவும் அபத்தமானது. அதாவது, பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்ட இம்ரான்கான் தனது கட்சி வெற்றிபெற்றால் பாகிஸ்தானில் மோடியைப் போல ஆட்சியைத் தருவேன் என்று பிரச்சாரம் செய்தார் என்றும், அதனால் அவர் கட்சி அங்கு வெற்றிபெற்றிருக்கிறார் என்றும் எச்.ராஜா கூறியிருக்கிறார்.

 

 

 

இதிலெல்லாம் மோடிக்கு என்ன பெருமை கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை. ஆனால், இம்ரான் தனது தேர்தல் பிரச்சாரங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் போக்கிற்கு தீர்வு காண்பதில் மோடிதான் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றுதான் பேசியிருக்கிறார். அவர் மோடியை விமர்சனம் செய்து பேசிய பேச்சை ஆதாரமாக காட்டினாலும் எச்.ராஜா தனது தவறை ஒப்புக்கொள்ள மாட்டார் என்று தெரிந்தாலும், அவருடைய பொய்யை அம்பலப்படுத்துவது நமது கடமை.

 

h Raja




மோடியும் நவாஸ் செரீபும் நட்பாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ராணுவத்துக்கு எதிராக இருக்கிறார்கள். ஆனால், நான் பாகிஸ்தானின் நலனுக்காக மட்டுமே வேலை செய்வேன் என்றும் இம்ரான்கான் பேசியிருக்கிறார். அவருடைய பேச்சு குறித்து இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் முதல் பக்கத்திலேயே பாக்ஸ் கட்டிப் போட்டிக்கிறார்கள். இதையெல்லாம் எச்.ராஜா பாப்பாரா பார்க்க மாட்டாரா தெரியவில்லை.

 

 

 

 

 

இதுபோலத்தான் சில நாட்களுக்கு முன், புதியதலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நெறியாளர் கார்த்திகேயன், பத்திரிகை ஒன்றில் வந்த கவிதை வரிகளை சுட்டிக்காட்டினார். அதாவது, பெண்களின் மாதவிடாய்க் காலத்தை தீட்டுக்காலம் என்று சொல்லி கோவிலுக்குள் அனுமதி மறுக்கிறீர்களே, பெண் தெய்வங்கள் தங்கள் தீட்டுக் காலங்களில் கோவிலில் குடியிருக்காதா என்று யாரோ எழுதிய கவிதை வரிகளை கார்த்திகேயன் எடுத்தாண்டார். இதை அவருக்கு எதிராக ராஜா திருப்பிவிட்டார். கார்த்திகேயனை பணிநீக்கம் செய்யவேண்டும் என்று புதியதலைமுறை நிர்வாகத்துக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். அதாவது மதவாதிகளால் எளிதில் பதில்சொல்ல முடியாத கேள்விகள் எழும்போது, அதைத் திசைதிருப்ப இதுபோன்ற மிரட்டல்களை பதிவாக்குவது எச்.ராஜாவின் வழக்கம். ஆனால், கார்த்திகேயன் பயன்படுத்தியது வேறொருவரின் கவிதை என்று உடனடியாக தெளிவுபடுத்திய பிறகும் எச்.ராஜா தனது பதிவை நீக்கவில்லை.

 

பாஜகவின் பிறவிக்குணமே கோயபல்ஸிடம் பெற்ற பொய்ப்பிரச்சாரம்தான். அப்படி இருக்கும்போது எச்.ராஜா எப்படி தன்னை மாற்றிக் கொள்வார்?

 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.