Skip to main content

அசிங்கப்படுத்தும் அண்ணாமலை; உணர்வே இல்லாத அதிமுக - குடியாத்தம் குமரன் விளாசல்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 Gudiyatham Kumaran | Edappadi | Annamalai | Udayanidhi  Stalin 

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அண்ணாமலை பாஜகவிற்கு தலைமை ஏற்றதில் இருந்து அண்ணா, பெரியார் குறித்து பேசி வருகிறார். இவரைப் போலவே, எச்.ராஜ்வாவும் தொடர்ந்து இதுபோன்று பேசி வருகிறார். இத்துனை நாள் அண்ணா, பெரியார் மீது விமர்சனம் வைக்கும் பா.ஜ.க.வை ஒரு நாளும் அ.தி.மு.க. கண்டித்தது இல்லை. ஆனால், தி.மு.க. எப்பொழுதும் இந்த விமர்சனத்திற்கு பதில் கொடுத்து வந்துள்ளது. தற்போது நடந்துள்ள அண்ணா விவகாரத்தில் கூட, தி.மு.க. சார்பாக ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "அண்ணாமலைக்கு அழிவுக் காலம் நெருங்கி விட்டது. அண்ணா, பெரியார் போன்றோர் இல்லை என்றால் அண்ணாமலை ஆடுதான் மேய்திருக்க முடியும். ஐ.பி.எஸ். ஆகியிருக்க முடியாது" என அறிவாலயத்தின் முன்பே பேட்டி அளித்தார். எனவே, அண்ணாமலை கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வை சமீபமாக விமர்சித்து வருவதால், ஜெயக்குமார் போன்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சொல்லப் போனால், பாஜகவிற்கு நாலு எம்.எல்.ஏ.க்களை பிச்சை போட்டதே அ.தி.மு.க. தான். கூட்டணி இல்லையென்றால் பாஜக டெபாசிட் இழந்திருக்கும். ஆகையால், அண்ணாதுரை குறித்து பேசியதை நாங்கள் உணர்வுப் பூர்வமாக கண்டிக்கிறோம். மாறாக, அ.தி.மு.க. அண்ணாமலையை விமர்சிக்கவே இந்த விவகாரத்தை பயன்படுத்தினர்.

 

அண்ணாமலை திமிர்த்தனம் கொண்டவர் என்பதற்கு உதாரணம் அவர் மன்னிப்பு கேட்காதது தான். சமீபத்தில் துரைமுருகன் அவர்களிடம் யூட்யூப் சேனல் ஒன்றில் அண்ணாமலை குறித்து கேட்டார்கள். அதற்கு அவர், "ஒரு கட்சியை காலி செய்ய வேண்டும் என்றால் இவரைத் தலைவராக நியமிக்கலாம்" என சொல்லியிருந்தார். அண்ணாவை பற்றி தவறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் எவ்வளவு திமிர் இருக்கும். ஆகவே, அண்ணா ஒருபோதும் மன்னிப்பு கேட்டதில்லை. தேவர் அவர்களும் அண்ணாமலை சொன்னது போல் பேசியதில்லை. அண்ணாவும் மனிப்பு கேட்கும் அளவு எங்கும் பேசியதும் இல்லை. அண்ணா அவர்கள் பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து தி.மு.க.வை தொடங்குகையில், "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் பிள்ளையாருக்கு தேங்காவும் உடைக்க மாட்டேன். பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்" என நாகரீக அரசியல் செய்தவர். இப்படி இருக்க, அறிஞர் அண்ணா குறித்து விமர்சிப்பது, அவர்களுக்கும் அவர்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கும் தான் மண்ணோடு மண்ணாகப் போகிறார்கள். மேலும், இந்த செயல் மல்லாக்கப் படுத்துக் கொண்டு பா.ஜ.க. எச்சில் துப்புவது போலத் தான்.

 

செல்லூர் ராஜு விமர்சிப்பது போலில்லை. நான் சொல்கிறேன், தி.மு.க. தான் ஒரே சமூக நீதிக் கட்சி. வேங்கை வயல் சம்பவத்தில் எவனோ ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் இரவில் மலம் கலந்துவிட்டுச் சென்று ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க செய்தது தான். சீமான் என்ன அவ்வளவு பெரிய ஆளா... இந்த மண்ணை, மக்கள் உங்களுக்கு கொடுத்து விடுவார்களா?  இந்தத் தேர்தலில் நடப்பதை பார்ப்போம்.

 

உதயநிதி சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுவது, "அனைவரும் சமம்" என மாறுவதற்குத் தான். எனவே, இந்து மதத்தை, அதன் ஆன்மிக சிந்தனைகளை, கோவிலை ஒழிப்பது இல்லை. அனைவரும் சாமி கும்பிடலாம், கோவிலுக்குள் செல்லாம், ஏன் தி.மு.க.வினர் கூட காவடி எடுக்கிறார்கள். உதயநிதி கூட ஹிந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை. அவரின் ஜாதி சான்றிதழிலும் ஹிந்து என்று தான் உள்ளது. மாறாக, சனாதனம் என்பது, "தொட்டால் தீட்டு.. பார்த்தால் தீட்டு" என்று இருந்தது தான். இவற்றையெல்லாம் ஒழித்து, இன்றைக்கு கோவிலுக்குள் அனைவரும் செல்வதற்கே நாம் தானே காரணம். ஆகவே, நாம் எதிர்க்க வேண்டிய சனாதனம், புதிய நாடாளுமன்ற நிகழ்வுக்கு ஜனாதிபதி செல்லாமல், நடிகைகள் சென்றார்களே அதைத்தான். மேலும், பா.ஜ.க. பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதியாக நியமித்தது. அதற்கு, முதல்வர் ஸ்டாலின் கூட வாழ்த்து தெரிவித்தார். ஆனால், நாங்கள் கேட்பது, நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ஏன் அவர் அழைக்கப் படவில்லை. காரணம், அவர், கைம்பெண், தாழ்ந்த ஜாதி என நீங்கள் நினைப்பது தான். இந்த சயமத்தில் தான், முர்மு அவர்களுக்கு வேறொரு மாநிலத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்து அனுப்பிவிட்டனர். இதுபோன்ற சனாதன போக்கைத் தான் உதயநிதி எதிர்த்தார். 

 

பா.ஜ.க. வருகிற தேர்தலில் வாக்கு கேட்பதற்கு கூட எந்த ஒரு திட்டங்களையும் செய்யவில்லை என நினைக்கிறன். அதனால், சமீபத்தில் டீசல் விலையை 200ரூ குறைத்துள்ளனர். தற்போது, மகளிர் மசோதாவும் தேர்தலையொட்டி தான் கொண்டுவரப்பட்டது. இருந்தும், ஸ்டாலின் அவர்களைப் போல நானும் இதனை மனமார வரவேற்கிறேன். ஆனால், ஒன்பது ஆண்டுகளாக ஏன் இதனை நிறைவேற்வில்லை. இதனை வைத்து மோடி அவர்கள் பெண்களுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார் என சொல்கிறார்கள். இருந்தும், இதை நாங்கள் வரவேற்கிறோம். 

 

தொடர்ந்து, நீதிமன்றம் உதயநிதி அவர்களை சனாதனம் விவகாரத்திற்கு விளக்கமளிக்க கேட்டுள்ளது. அவர் ஒன்றும் மதத்தை ஒழிப்பது போலெல்லாம் பேசவில்லை. அதேபோல், நீதிமன்றமும் நியாயமாக விளக்கத்தைத் தான் கேட்கிறது. எனவே, உதயநிதி நிச்சயம் நீதிமன்றத்திற்கு சென்று முறையான விளக்கத்தை அளிப்பார். உறுதியாக, நீதிமன்றத்தை திராவிட மாடல் தி.மு.க. அரசு மதிக்கும்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 


 

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.