Skip to main content

பால் பாக்கெட் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த முதல்வர் காவிரி விவகாரத்தில் சும்மா இருப்பாரா என்ன..? - கோவி.லெனின் கேள்வி!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

jh


காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது மத்திய அரசு மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மூத்த பத்தரிகையாளர் கோவி. லெனின் அவர்களிடம் இதுதொடர்பாக நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, 

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்தோடு இணைக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் விதத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் கருத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?


மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கும் விதத்தில் மத்திய அரசு தொடர்ந்து செய்ல்பட்டு வருகிறது. அதன் ஒரு நீட்சியாக தற்போது மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசின் ஜல் சக்தி துறையின் கீழ் இணைத்து அதற்கான ஆணையை அரசிதழில் வெளியிட்டுள்ளார்கள். முன்பு எல்லாம் அதற்குப் பெயர் நீர்வளத்துறை தான். தற்போது அந்த பெயரை ஜல் சக்தி என்று மாற்றி உள்ளார்கள். எல்லாவற்றிலும் அயோக்கித்தனம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து செய்து வருகிறார்கள். அவரவர்களின் மொழியிலேயே அவர்கள் அழைத்துக் கொண்டால் மத்திய அரசுக்கு என்ன குறைச்சல் வந்துவிட போகின்றது. ஆனால் வட மொழியைப் புகுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பெயர் மாற்றும் முறையை அவர்கள் கொண்டுவருகிறார்கள். எல்லா மாநிலத்தவரும் அவர்கள் மொழியில் அதனை அழைத்துவிட்டு போகப்போகிறார்கள். ஆனால் அதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஜல் சக்தி என்ற பெயரில் அதனைத் தற்போது மாற்றி உள்ளார்கள். நிதி அயோக் என்பார்கள், எல்லாவற்றிலும் இந்த முட்டாள்தனத்தைக் கொண்டுவந்துள்ளார்கள். இது மாநில சுயாட்சியை அழிக்கும் நடைமுறைகளில் ஒன்று என்றுதான் நாம் இதனைப் பார்க்க வேண்டும். 

இவ்வளவு சம்பவங்களையும் பார்த்து நம்முடைய எடப்பாடி பழனிசாமி சும்மா இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. மூன்று நாளில் கரோனா அழிந்துவிடும் என்று மிகவும் துல்லியமாகச் சொன்னவர் அவர். அதனால் இதில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார். ஏனென்றால் எஸ்.வி சேகர் வீட்டில் பால் பாக்கெட் கெட்டு போனதற்கே அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஆவின் அதிகாரிகளை அனுப்பி கெட்டுப்போன பாக்கெட்டுக்குப் பதிலாகப் புதிய பாக்கெட்டுக்களைக் கொடுத்த அவருக்கு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நாம் எல்லோரும் நம்ம வேண்டும். மத்திய அரசுடன் உரிமை போராட்டத்தை மேற்கொண்டு நமக்கான உரிமைகளை நிச்சயம் பெறுவார் என்று நாம் அனைவரும் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு திரூவாருரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் 'காவிரி காப்பான்' என்ற விருதை அவர் வாங்கி இருக்கிறார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் மத்திய அரசுடன் போராடி காவிரியில் தமிழகத்தின் உரிமையைக் காப்பார் என்று நாம் அனைவரும் நம்புவோம்,என்றார்.

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.