Skip to main content

பணம் திரும்ப வருமா, வராதா? என்பதுதான் பிரச்சனை... அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் - கோவி.லெனின் பேச்சு

Published on 02/05/2020 | Edited on 02/05/2020


கரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் பெரிய தொழிலதிபர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்  கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடனைப் பெற்ற சிலர் வெளிநாடுகளில் சிறையில் இருக்கும் இந்த நிலையில், எதற்காக மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்தக் கடன் தொடர்பாக மத்திய அரசு வேறு சில தகவல்களைக் கூறுகிறது. இதில் உண்மை என்ன, எதற்காக இந்தக் கடன் தள்ளுபடி என்பது குறித்தான கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேல்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

பெரிய முதலாளிகளின் வாராக் கடன் 68,000 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து பேட்டியளித்த மத்திய நிதிஅமைச்சர் இது 'ரைட் ஆப்' தான். கணக்கியல் தள்ளுபடிதான், இதைத் திரும்ப வசூல் செய்து கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கரோனா காலத்தில் மக்களுடைய சிரமம் என்னவென்றால், ஒருபக்கம் மருத்துவச் சிக்கல் இருக்கிறது என்றால், மறுபக்கம் பொருளாதாரச் சிக்கல் இருக்கின்றது. இந்தியா ஒன்றும் பெரிய பொருளாதார வலிமை உடைய நாடு கிடையாது. இந்தியாவில் உள்ள 70 கோடி மக்கள் இன்னமும் மத்திய அரசு கொடுக்கின்ற உணவுப்பொருட்களைச் சார்ந்தே வாழ்கின்றனர். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே நாட்டில் உள்ள எழுவது சதவீத மக்களுக்கு நாங்கள் உணவளிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். தற்போது பெரிய முதலாளிகளுக்குப் பணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்தான் இப்படிப் புரளியைப் பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்கள். பணம் திரும்ப வருமா வராதா என்பதைத் தான் தற்போது மத்திய அரசு கூற வேண்டும் அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள். 
 

http://onelink.to/nknapp


சரி.. மத்திய அரசு கூறும் தொழிலதிபர்கள் எல்லாம் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள். விஜய் மல்லையா இங்கிலாந்து நாட்டில் ஜெயிலில் இருக்கிறார். நீரவ் மோடியின் நண்பர் மெகுல் சோக்ஷிக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள். இவர் எங்கே இருக்கிறார் என்றால் அவரும் ஜெயிலில்தான் இங்கிலாந்து நாட்டில் இருக்கிறார். நம்முடைய கேள்வி எல்லாம் அவர்கள் வெளிநாடுகளில் இருக்கின்ற நிலையில் அவர்கள் வாங்கிய கடன்களை வாரகடன்கள் லிஸ்டில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியோ இதை நான் நாடாளுமன்றத்தில் கேட்டேன், எனக்கு உரிய பதில் வரவில்லை என்று கூறுகிறார். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருவர் இந்தக் கேல்வியை எழுப்பியதால் இந்த உண்மை தற்போது தெரியவந்துள்ளது. நாட்டு மக்கள் இத்தகைய கடினமான சூழ்நிலையில் இருக்க வேண்டிய நிலையில், இந்தக் கடன் தள்ளுபடி தேவையா என்பதே எல்லோரின் பதிலாகவும் இருக்கின்றது, என்றார்.

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.