Skip to main content

ஆளுநர் Vs மாநில அரசு; வைக்கப்பட்ட வாதங்களும்.. நீதிபதியின் கண்டனங்களும்! 

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

தமிழ்நாடு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது. அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக கடந்த அக்.31ம் தேதி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. 

 

தமிழ்நாட்டிற்கு முன்பாக பஞ்சாப் அரசு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது இதே குற்றச்சாட்டைக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  தமிழ்நாடு வழக்கு தொடர்ந்து சில தினங்களிலேயே கேரளா அரசும் தங்கள் மாநில ஆளுநரான அரிஃப் முகமது கான் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

பஞ்சாப் அரசு தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 6ம் தேதி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்” என கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. 

 

பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கை நவ.10 அன்று தமிழ்நாடு அரசு தங்கள் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குடன் சேர்ந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

 

தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், மனு சிங்வி, முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர். 

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், “காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை ஆளுநர்களின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாகத் தான் இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு மொத்தம் 12 மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அந்த மசோதாக்கள் எல்லாம் நிலுவையில் உள்ளன. ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகள் மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இருக்கின்றன. 

 

பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார். கிடப்பில் போட்டு வைத்து, அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார். பல வருடங்களாக சிறையில் வாடும் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அனுப்பிய கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது அரசின் உரிமையை பறிக்கும் விஷயம் என்றாலும், மற்றொரு பக்கம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

 

அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 200ல் உள்ள As Soon As Possible என்ற சொல்லை தவறாக ஆளுநர் புரிந்து கொண்டு காலம் தாழ்த்தி வருகிறார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதற்கு உரிமை கிடையாது” என்று வாதிட்டது. 

 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஆளுநர் ஆர்.என். ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த வழக்கு மிகவும் முக்கியமானவை. 

 

அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.  அப்படி திருப்பி அனுப்பிய பிறகு மீண்டும் ஆளுநருக்கு அந்தக் கோப்பு வந்தால் அதன் மீது தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

 

இந்த வழக்கில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் பதில் அளிக்கும்படியும், மத்திய அரசும் பதில் அளிக்கவும் நோட்டீஸ் வழங்க வேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். 

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

மேலும், இந்த வழக்குடன் விசாரிக்கப்பட்ட பஞ்சாப் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது. ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களை கொடுத்தது யார்? ஆளுநர்கள் தாங்கள் செய்யும் தவறின் தீவிரத்தை உணர்கிறீர்களா இல்லையா? நடப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார். 

 

 

 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Supreme Court verdict for case of Vvpad 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தன. மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்” எனத் தெரிவித்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Supreme Court verdict for case of Vvpad 

இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “தேர்தல் ஆனையம் கொடுத்த அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆதரங்களையும், அதற்கான வாதங்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். எனவே வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒரு முறையில்  சின்னம் பதிவு செய்யும் செயல்முறை முடிந்ததும், சின்னம் பதிவேற்றும் இயந்திரத்தை (SLU) சீல் வைக்க வேண்டும். வாக்குகள் எண்ணி முடித்த பின் அவை குறைந்தது 45 நாட்களுக்கு சேமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.  

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது.