Skip to main content

அமைச்சர்களைக் குறி வைக்கும் ஆளுநர்; மிரளப்போகும் திமுக அரசு! 

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Governor targeting ministers! The DMK government is getting scared!

 

தி.மு.க. அரசுக்கும் ஆளுநருக்குமான உரசல்கள் நீடித்துவரும் நிலையில், ஊழல்களில் விஞ்சியிருக்கும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினரையும் கண்காணித்து வருகிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த 3 தரப்பிலுமிருந்து தலா டாப்-10 பேரை குறி வைத்து ரிப்போர்ட்டுகள் ரகசியமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

 

தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களை விஞ்சிய அதிகாரிகள், அதிகாரிகளை விஞ்சிய அமைச்சர்கள் என சமீபத்தில் ஆளுநர் ரவியிடம் ஒரு கனமான பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை ஒன்றிய அரசின் உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார் கவர்னர் ரவி. உள்துறையிலிருந்து கிடைத்த க்ரீன் சிக்னல்படி, அந்த டாப்-டென்னில் இடம் பிடித்தவர்களைப் பற்றிய கடந்த கால ரெக்கார்டுகளையும் தோண்டித் துருவுகிறார் ஆளுநர்.

 

இதற்காக, ரகசியமாக ஒரு டீம் இயங்குகிறது. கடந்த கால அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிக் காலங்களில் தொடங்கி தற்போதைய தி.மு.க. ஆட்சிக் காலம்வரை அவர்களின் சொத்துகள், முதலீடுகள், வெளிநாட்டு தொடர்புகள், ஹவாலா பரிவர்த்தனைகள், பினாமிகள் என அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. ஒருமாத இடைவெளியில் இவை அனைத்தையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஒப்படைக்கவிருக்கிறார் ஆளுநர் ரவி.

 

இதுகுறித்து ராஜ்பவன் வட்டாரங்களில் விசாரித்தபோது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சி நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர்தான். அதனால்தான், அரசின் நிதி மசோதா தொடங்கி அனைத்து அரசாணைகளும் ஆளுநரால் ஒப்புதலளிக்கப்படுகிறது. அதனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் கடமை ஆளுநருக்கு உண்டு.

 

அந்த வகையில், மாநில ஆட்சியை கண்காணித்து ரிப்போர்ட் தாக்கல் செய்வது ஆளுநரின் நிர்வாக ரீதியிலான பணி. அதன்படிதான் ஒவ்வொரு மாநில ஆளுநர்களும் ஒன்றிய உள்துறைக்கு மாதத்திற்கு ஒரு முறை மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட ரிப்போர்ட்டுகளை தாக்கல் செய்து வருகிறார்கள். ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பணியாற்றும் ஆளுநர்களுக்கு, குறிப்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு கூடுதல் உத்தரவுகள் அடிக்கடி பிறப்பிக்கப்படுகின்றன. அதன்படி இயங்கிவரும் ஆளுநர் ரவி, மாதத்திற்கு 2 முறை ரிப்போர்ட் தாக்கல் செய்கிறார்.

 

இப்படிப்பட்ட சூழல்களில்தான், சமீபத்தில் டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்படி, தி.மு.க. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கடந்த 20 ஆண்டுகால ரெக்கார்டுகள் தோண்டப்படுகின்றன. இதனை ஒரு வேள்விபோல் ரகசியமாக செய்துவருகிறார் ஆளுநர் ரவி. அந்த பணிகள் முடியும்போது ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் உண்மை முகம் அம்பலமாகும்” என்கிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமானவர்கள்.

 

மேலும் நாம் விசாரித்தபோது, “ஆளுநர் கொடுக்கும் ரிப்போர்ட்டுகளில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படவிருக்கிறது. அவர்கள் தங்கள் பாணியில் நடவடிக்கைகளை திட்டமிடுவார்கள். அதற்கேற்ப டெல்லியில் சிலபல உளவு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

 

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் தி.மு.க. அரசுக்கு எதிரான அசைன்மெண்ட்டை துரிதப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்கள் ஆளுநர் ரவிக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தி.மு.க. ஆட்சி 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தி.மு.க. அரசின் நிர்வாகச் செயல்பாடுகள், ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியின் நிலை, வெளிநாடுகளில் தி.மு.க. அரசு வாங்கும் கடன்களின் நிலை, தமிழ்நாட்டில் நடமாடும் போதைப்பொருள் வர்த்தகம், அதன் பின்னணியிலுள்ள ரகசியங்கள் ஆகியவை ஒரு வகை. ஊழல்களிலும், சொத்து குவிப்புகளிலும் உள்ள டாப்- டென் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்.- ஐபி.எஸ். அதிகாரிகள் ஆகியோர்களை கணக்கெடுப்பது மற்றொரு வகை! இதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிரான ரிப்போர்ட்டுகள் கவர்னரால் தயாரிக்கப்படுகின்றன” என்கிறார்கள். 

 

தி.மு.க. அரசுக்கு எதிரான ஊழல் ரெக்கார்டுகளை கவர்னர் ரவி சேகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்களில் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்டமாதங்களாக ஆளுநர் ரவி கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.

 

உண்மையில் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கிறாரா? என்று விசாரித்தபோது, “தி.மு.க. அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை 76. இதில், 61 மசோதக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தந்துவிட்டார். அவை அனைத்தும் நிதி தொடர்பான மசோதாக்கள். சட்டப் பேரவையிலிருந்து மசோதாக்களை கொண்டு வருபவர்களை ராஜ்பவனில் இருக்க வைத்து கையோடு கையாக, அப்போதே ஒப்புதலளித்து மசோதாக்களை அரசுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். முந்தைய ஆளுநர்கள் மாதிரி படித்துப் பார்ப்பதற்காக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதில்லை.

 

76 மசோதாக்களில் 61 மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்ததுபோக மீதமிருப்பவை 15. இதில், 12 மசோதாக்கள் பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது தொடர்பானவை. அதாவது, 12 பல்கலைக்கழகங்களுக்கு 12 மசோதாக்கள். இவைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. காரணம், இதே மாதிரி கேரள அரசாங்கம் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், யூ.ஜி.சி.யின் சட்டவிதிகளுக்கு எதிராக இருப்பதால் அந்த சட்ட மசோதாவை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்திருப்பதுதான். அதனை ஆளுநர் ரவி கவனத்தில் கொண்டதால் ஒப்புதல் தரவில்லை.

 

அந்த வகையில், கூட்டுறவு சங்கங்களை தனி அதிகாரியின் உத்தரவின் பேரில் கலைத்தல், தனியார் கல்லூரிகளை அரசுடைமையாக்குதல், ஆன்-லைன் சூதாட்டம் தடை ஆகிய 3 மசோதாக்கள் மீதமிருப்பவை. இதில், கூட்டுறவு சங்கங்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அதிகாரங்களைப் பறிப்பதால், அந்த சட்ட மசோதாவுக்கு அனுமதி தரவில்லை. அடுத்து, தனியார் கல்லூரிகளை அரசுடைமையாக்குவதன் பின்னணியில் சில நோக்கங்கள் இருப்பதை ஆராய்ந்து வருவதால் அதையும் கிடப்பில் வைத்துள்ளார். ஆன் லைன் சூதாட்டம் என்பது திறன்மிகு விளையாட்டு என்ற பட்டியலில் மத்திய அரசு வைத்திருப்பதால் மாநில அரசால் தடை செய்ய இயலாது என்பதாலும், அப்படியே ஒப்புதலளித்தால் ஆளுநரின் உத்தரவு சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன், சூதாட்ட வர்த்தகத்தில் இருப்பவர்கள் உடனடியாக ஸ்டே வாங்கிவிடுவார்கள் என்பதாலும் அந்த மசோதாவும் கிடப்பில் இருக்கிறது.

 

இந்த மசோதாவை பொறுத்தவரை, ஆன் லைன் ரம்மி விளையாட்டில் மக்களை பாதிக்காத வகையில் என்னென்ன சட்டநெறிமுறைகளை கொண்டுவரலாம் என்று ஆலோசித்துவருகிறார் ஆளுநர். ஆக, தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாக்களின் உண்மை நிலை இதுதான். இந்த சூழலில், ஆளுநருக்கு எதிராக டி.வி. சேனல்களின் விவாதங்களிலும், சோசியல் மீடியாக்களிலும் தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் பத்திரிகையாளர்கள் சிலர், ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசினர். பல்வேறு விசயங்களை ஆளுநரிடம் கேள்விகளாக எழுப்பிய பத்திரிகையாளர்கள், நிலுவையில் உள்ள மசோதாக்களைப் பற்றியும் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு தெளிவாக விளக்கியிருக்கிறார் ஆளுநர் ரவி. ஆளுநரின் விளக்கத்தில் அவர்கள் மிரண்டு போய்விட்டனர்” என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறது ராஜ்பவன் வட்டாரம்!

 

சட்ட மசோதாக்களை நிறுத்தி, தி.மு.க. அரசுக்கு செக் வைக்கும் ஆளுநர் ரவி, தி.மு.க. அரசுக்கு எதிரான டாப்-டென் ரிப்போர்ட்டுகளை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யும்போது ஏகத்துக்கும் தி.மு.க. அரசு மிரளப்போகிறது” என்கிறார்கள்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.