Skip to main content

எட்டு கோடி மக்களை விட ஆளுநர் உயர்ந்தவரா? தமிழன் ரோட்டில் நிற்கிறான் ஆளுநருக்கு 600 ஏக்கரில் பங்களா தேவையா? - சீமான்

Published on 06/12/2022 | Edited on 07/12/2022

 

jkl

 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல், நடப்பு அரசியல் பிரச்சனைகள் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " தமிழகத்தில் ஆளுநர் போக்கு பற்றி என்னிடம் கேட்கிறீர்கள், ஒரு விரலில் ஐந்து விரலுக்கு அதிகமாக ஒரு விரல் இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் ஆளுநரின் செயல்பாடு இருக்கிறது. அதனால் அந்த விரலை வெட்டி விட வேண்டும், அதைப்போல ஆளுநர் நமக்குத் தேவையில்லாத ஒருவர், எட்டு கோடி மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசை இயங்க விடாமல் இடையூறு செய்கிறார் என்றால் அவரை என்ன சொல்ல முடியும்.

 

ஆன்லைன் மசோதாவில் இவர் எதற்குக் கையெழுத்துப் போடாமல் இருந்தார். ஏனென்றால் இதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். எல்லாம் பாஜக தானே இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு பின்பு இருந்து செயல்படுகிறது. மார்டீன் அவர்கள் பாஜகவுக்கு ஐம்பது ஐம்பது கோடியாகப் பணம் கொடுத்தாரா இல்லையா? இவர்கள் பணம் பெற்றுக்கொண்டு இருந்தால் அப்புறம் எப்படி ஆன்லைன் ரம்மி விளையாடுவதைத் தடுப்பார்கள். எல்லாவற்றிலும் அரசியல் செய்வார்கள், இதிலும் அவர்களால் முடிந்த அளவுக்கு ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். ஆனால் இதில் இருக்கும் அரசியல் பின்புலம், எதனால் சந்தேகம் கேட்கிறார்கள், திருப்பி அனுப்புகிறார்கள் என அனைத்தும் தமிழக மக்களுக்குத் தெரியும். நீண்ட காலம் மக்களை ஒன்றும் தெரியாதவர்களாக நீங்கள் வைத்திருக்க முடியாது. 

 

தமிழ்நாட்டில் பலரும் இருக்க இடமில்லாமல் கிடைத்த இடத்தில் இருக்கிறார்கள், அதுவும் இல்லாதவர்கள் ரோட்டில் தவித்து வருகிறார்கள். ஆனால் இவருக்கு 600 ஏக்கர் பரப்பளவில் பங்களா தேவைப்படுகிறது. மக்கள் அவதிப்பட்டாலும் தான் சந்தோஷமாக இருந்தால் போதுமென்ற மனநிலையில் இருப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும். மக்களைப் பற்றி சிறிது கவலை இருந்தாலும் கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மக்களைப் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாதவர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும். நம்முடைய விதி இவர்கள் கீழெல்லாம் நாம் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது.

 

இதையெல்லாம் நாம் நம்முடைய தலைவிதி என்று நினைத்து கடந்து போய்விட வேண்டும். முன்பெல்லாம் அதாவது கலைஞர்,ஜெயலலிதா, எம்ஜிஆர் இருக்கின்ற போதெல்லாம் ஆளுநர்கள் இந்த மாதிரி எதாவது இடையூறு கொடுத்தார்களா? அவர்கள் அவர்களுடைய வேலை என்னவோ அதை மட்டுமே பார்த்தார்கள். ஏதாவது பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெற்றால் அதற்குச் சென்று பட்டம் கொடுக்கும் வேலையை மட்டுமே பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது அத்துமீறி வருகிறார்கள். இது தவறான ஒன்று, ஆளுநர் அவர்களுக்கு உள்ள வேலையை மட்டும் பார்த்தால் சிறப்பாக இருக்கும்" என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்