Skip to main content

2021 தேர்தலுக்காக அரசுப் பணியாளர்களை களமிறக்கிய ஆளும் கட்சியின் முக்கியப்புள்ளி!!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

muthur

-கீரன்

 

தற்போதுள்ள கரோனா காலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிவாரண உதவிகள் எதிர் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அளிக்கப்படுகிறது என ஆளும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களே கூறி வருகின்றனர்.

 

இந்தநிலையில் கரோனா காலத்தை பயன்படுத்தி அமைச்சரவையிலும், கட்சியிலும் முக்கிய நபரான மணியானவர் தற்போதே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைக் கோவையில் தொடங்கிவிட்டார். இதில் அவர் தனது கட்சிக்காரர்களைக் கூட நம்பாமல், மாவட்ட, வட்ட, மாநகராட்சி அலுவலங்களில் புதிதாக பணிக்குச் சேர்ந்த சுமார் 100 அலுவலக உதவியாளர்களை இந்தப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறாராம். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக்கு பணம் கொடுக்க, வீடு வீடாகக் கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவர்களை, கட்சி அலுவலகத்திலும், தனது இல்லத்திலும் தங்க வைத்துள்ளாராம். கடந்த மே 18ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணிகள், வரும் சட்டமன்றத் தேர்தல் வரை தொடரும் என்கிறார்கள். 

 

மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ. துணை கலெக்டர் அளவில் உள்ள அதிகாரிகளும், இந்த 100 அலுவலக உதவியாளர்களை ஆளும் கட்சியின் பணிக்காக அனுப்பியதுடன், அலுவலக வருகைப் பதிவேட்டில் அலுவலகப் பணி என குறிப்பிட உத்தரவிட்டுள்ளார்களாம். இவ்வளவு வெளிப்படையாக அரசுப் பணியாளர்களை மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறவர்களை தனது கட்சிப் பணிக்காவும், சொந்தப் பணிக்காகவும் பயன்படுத்தி வருவது தொடர்ந்தால் 2021 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்ற விவாதமும் கோவையில் நடக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.