Skip to main content

இது என்ன புது புரளியா இருக்கு? சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா?

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

நேற்று இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 97 தொகுதிகளுக்கு நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி 1 தொகுதியிலும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
 

sundar pichai

 

 

வழக்கம்போல தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் அவர்களுக்கான தகுந்த பூத்களில் சென்று தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினார்கள்.
 

பிரபலங்கள் வாக்கு செலுத்தியதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியதுபோல கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ்நாட்டிற்கு வந்து ஓட்டு செலுத்தியதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் இது உண்மை என நம்பி சுந்தர் பிச்சையை பாராட்டினார்கள். 
 

கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்  ‘சர்கார்’ என்று ஒரு அரசியல் படம் வெளியானது. அதில் விஜய் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்துகொண்டு வாக்குச் செலுத்துவதற்காக தமிழ்நாடு வருவார். இதைபோல கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் நேற்று நடந்த தேர்தலுக்காக தன்னுடைய வாக்கை செலுத்தினார் என்று அந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். 

 

 

இது அனைவரும் வாக்குச் செலுத்த வாருங்கள் என்று மக்களுக்கு அறிவுரை செய்ய சரியாக இருந்தாலும் சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்கு செலுத்தினார் என்பது தவறான தகவல் ஆகும். 
 

சுந்தர் பிச்சை என்னதான் தமிழ்நாட்டில் பிறந்த இந்திய பிரஜையாக இருந்தாலும் தற்போது அமெரிக்க வாழ் இந்தியராகதான் வாழ்ந்து வருகிறார். அதாவது அவருக்கு அமெரிக்காவில்தான் குடியுரிமை உள்ளது. இந்தியாவில் அவருக்கு குடியுரிமை இல்லை பின்னர், அவர் எப்படி இந்திய தேர்தலில் வாக்குச் செலுத்தமுடியும். 
 

சுந்தர் பிச்சை வாக்குச் செலுத்துவதற்காக வந்ததாக சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை இந்தியா வரும்போது ட்விட்டரில் பதிவிட்டது. 2017ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை இந்தியாவில் அவர் படித்த ஐஐடி கரக்பூர் கல்லூரிக்கு சென்றிருந்தார். அச்சமயத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு, 24 வருடங்கள் கழித்து கல்லூரிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருந்தார். அப்போது 3000 மாணவர்களுடன் கலந்துரையாடலும் செய்தார் சுந்தர் பிச்சை.  1993ஆம் ஆண்டுக்கு பின் முதன் முறையாக ஐஐடி கராக்பூருக்கு சுந்தர் பிச்சை அப்போதுதான் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்ட தேர்தல்களில் முடிவடைந்துள்ளன. மே 19ஆம் தேதி வரை மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களும் நடைபெற்று, மே23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 

 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.