Skip to main content

அண்ணா அறிவாலயம் செல்கிறாரா கோகுல இந்திரா?

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

 

அதிமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டு அமமுகவுக்கு சென்றவர்கள், அந்த தலைமையும் பிடிக்காமல் திமுகவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். செந்தில் பாலாஜி திமுக எம்எல்ஏவாகிவிட்டார். தங்க தமிழ்ச்செல்வன் கொள்கைப் பரப்புச் செயலாளராகிவிட்டார் என்றதும், அமமுகவில் இருந்து மேலும் பலர் திமுகவுக்கு செல்ல உள்ளனராம். புதுக்கோட்டை அமமுகவைச் சேர்ந்த பரணி கார்த்திகேயன் நேற்று அண்ணா அறிவாலயம் சென்று திமுகவில் இணைந்தார். இதேபோல் அதிமுகவில் இருந்தும் சிலர் திமுகவுக்கு தாவப்போகிறார்களாம்.

 

Gokula Indira



2011-2016 காலக்கட்டத்தில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவர் கோகுல இந்திரா. 2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். அதன்பிறகு வாரியத் தலைவர் பதவி உள்ளிட்ட பதவிகளை எதிர்பார்த்திருந்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதா மறைந்ததால் அந்த கனவும் நிறைவேறவில்லை. அதன்பிறகு சசிகலா ஆதரவாக இருந்தார். இதையடுத்து ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி பழனிசாமி அணி என உடைந்தபோது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்தார். 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலோ அல்லது மக்களவை தேர்தலிலோ அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பாத்திருந்தார். ஆனால் அதிமுக தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக அதிமுக தலைமையை அணுகினார். அந்த வாய்ப்பும் தனக்கு கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளார் முன்னாள் அமைச்சரான கோகுல இந்திரா.


 

இதனால் அதிமுக கட்சி வேலைகளில் பெரிதும் அக்கறை காட்டவில்லை. அதிமுக தலைமை அலுவலகம்கூட செல்வதை தவிர்த்து வந்தார். வெளிநாடு சென்ற எடப்பாடி பழனிசாமியை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கோகுல இந்திரா கண்ணில் படவில்லை என்கின்றனர் அதிமுகவினர்.


 

கோகுல இந்திரா அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதை அறிந்த பாஜக, அவரை பாஜகவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம். ஆனால் கோகுல இந்திரா திமுகவுக்கு சென்றால் அங்கு தனக்கு எதிர்காலம் இருக்குமா என்று ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறாராம். அதிமுக, அமமுகவில் இருந்து வருபவர்களை முதலில் திமுகவில் இணைத்துக்கொள்வோம். அவர்களுக்கு உரிய பதவி, வாய்ப்பு கொடுப்பதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று திமுகவும் அவரை கட்சியில் இணைப்பதற்கான பணிகளை செய்து வருகிறதாம். 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.